கன்னியாகுமரி மாவட்டத்தில் 20.01.2026 அன்று திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி
ஜன.14:
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் நாடு முதலமைச்சரால் 31.12.2024ம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச் சியில் ஒவ்வோர் ஆண்டும் குறள்வாரம் கொண்டா டப்படும் என அறிவிக் கப்பட்டது. அவ்வறிவிப் பினை செயல்படுத்தும் பொருட்டு பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் (அரசு அலுவலர்கள், பணி யாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாண வியர்கள் நீங்கலாக) குறள் சார்ந்த ஓவியப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பு
வித்தல் போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக 20.01.2026 அன்று முற்பகல் 10.30 மணி முதல் 12.30 மணி வரை மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத் திலுள்ள பிரெய்லி அரங் கத்தில் வைத்து நடைபெற உள்ளது. ஓவியப் போட் டியில் பங்கேற்கும் போட் டியாளர்கள் ஓவியம் வரைவதற்கு தேவையான அனைத்து உபகரணங்க ளையும் உடன் கொண்டு வர வேண்டும். ஓவியப் போட்டிக்கான நேரம் 1 மணி நேரம் ஆகும். குறள் ஒப்புவித்தல் போட்டிக் கான விதிமுறைகள், , போட்டி தொடங்குவ தற்கு 1 மணி நேரத்திற்கு முன் அறிவிக்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Search This Blog
Thursday, January 15, 2026
Comments:0
Home
competitions
Daily Thirukkural
Thirukkural
கன்னியாகுமரி மாவட்டத்தில் 20.01.2026 அன்று திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 20.01.2026 அன்று திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி
Tags
# competitions
# Daily Thirukkural
# Thirukkural
Thirukkural
Labels:
competitions,
Daily Thirukkural,
Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.