Breaking

Showing posts with label Water Resources Department. Show all posts
Showing posts with label Water Resources Department. Show all posts

Thursday, February 10, 2022

February 10, 2022

பொதுப்பணி, நீர்வளத்துறையில் 607 உதவிசெயற்பொறியாளர் பணியிடங்கள் காலி: தமிழக அரசு அறிவிப்பு

பொதுப்பணித்துறையில் புதிதாக மண்டலம், கோட்டம், உபகோட்டமும், நீர்வளத்துறைக்கு புதிதாக கோட்டம், உபகோட்டம் ஏற்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறைக்கு தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர் பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையும் படிக்க | மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

அதன்படி, பொதுப்பணித்துறையில் 6 தலைமை பொறியாளர் பணியிடங்களும் நீர்வளத்துறையில் 14 தலைமை பொறியாளர் பணியிடங்கள் என மொத்தம் 20ம், பொதுப்பணித்துறையில் கண்காணிப்பு பொறியாளர் 17 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 38 பணியிடங்கள் என மொத்தம் 55ம், பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர் 72 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 154 பணியிடங்கள் என மொத்தம் 226ம், பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர் 252 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 537 பணியிடங்கள் என மொத்தம் 789 பணியிடங்களும், பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் 730 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 1551 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான மதிப்பீடு தமிழக அரசால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீர்வளத்துறையில் உதவி செயற்பொறியாளர் 363 பணியிடங்களும், பொதுப்பணித்துறையில் 244 பணியிடங்களும் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | 'பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கல்வி

இது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில் கடந்த 5 ஆண்டுகளாக உதவி பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்கப்படாமல் வழக்கை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மதிப்பீட்டை வைத்து காலி பணியிடங்கள் நிரப்பபடும்’ என்றார்.

Total Pageviews

Search This Blog