Breaking

Showing posts with label Election Training. Show all posts
Showing posts with label Election Training. Show all posts

Wednesday, April 10, 2024

April 10, 2024

07.04.2024 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இரண்டாம் கட்ட மறு பயிற்சி - மாவட்ட ஆட்சியரின் கடிதம்!!!

Thursday, March 21, 2024

Tuesday, November 21, 2023

November 21, 2023

Election Special Camp - 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் சிறப்பு முகாம்

25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் சிறப்பு முகாம் Election Special Camp on 25.11.2023 and 26.11.2023

தேர்தல் சிறப்பு முகாம் நடைபெறும் நாள்கள்- பொது விளம்பரம் - 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு வாக்களார் பட்டியல் சுருக்க முறை திருத்தம்

திருவள்ளூர் மாவட்டம், 004. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 01.01.2024 தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பது தொடர்பாக, எதிர்வரும் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு வாக்களார் பட்டியல் சுருக்க முறை திருத்தம் (முகாம்) அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டோம்.

Wednesday, August 23, 2023

August 23, 2023

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் செய்தி வெளியீடு - நாள்: 23.08.2023



செய்தி வெளியீடு எண்: 1725

நாள்: 23.08.2023

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் செய்தி வெளியீடு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு கீழ்க்கண்டவாறு தேர்தல் கால அட்டவணை 24.08.2023 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அவசியமானால், 03.10.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று ஓட்டுப் பதிவு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு. வள்ளல் சீதக்காதி நகர், சென்னை 600 001-ல் நடைபெறும். 04.10.2023 (புதன்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் Press Release No: 1725

Date: 23.08.2023

ELECTION FOR THE MEMBERS OF THE TAMIL NADU WAKF BOARD IN THE CATEGORY OF MUTAWALLIS

PRESS RELEASE

Following Election programme for election of members to the Tamil Nadu Wakf Board from the Electoral College consisting of Mutawallis of waqfs has been notified in the Tamil Nadu Government Extraordinary Gazette dated: 24.08.2023.

If poll is necessary, polling will be held on 03.10.2023 (Tuesday) between 10.00 A.M to 4.00 P.M. at the Office of the Tamil Nadu Waqf Board, No.1, Jaffer Syrang Street, Vallal Seethakkathi Nagar, Chennai - 600 001 and result will be declared on 04.10.2023 (Wednesday).

Friday, February 24, 2023

February 24, 2023

ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியீடு - PDF



ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியீடு - PDF

Erode (East) Assembly Constituency By-Election Rules Release - PDF

CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday, September 27, 2022

September 27, 2022

தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்:பள்ளி, கல்லூரிகளில் நடத்த உத்தரவு

தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்:பள்ளி, கல்லூரிகளில் நடத்த உத்தரவு

தோ்தல் விழிப்புணா்வு போட்டிகளை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியது: தோ்தல் ஆணையம் சாா்பில் தோ்தல் எழுத்தறிவுப் போட்டிகள், மாவட்ட அளவில் சுவா் விளம்பரம் வரைதல், ரங்கோலி போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பள்ளிகளில் 18 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையாகக் கொண்டு சுவரொட்டி வரைதல் போட்டி நடத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் 25 பள்ளிகளைத் தோ்வு செய்து அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும். பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களின் விவரங்களை அனுப்ப வேண்டும்.

மாற்றுத்திறனாளி பள்ளிகளில் சுவரொட்டி வரைதல் போட்டியுடன், தோ்தல் ஆணையத்தால் அனுப்பப்படும் பாடல் வரிகளை பின்னணி இசையுடன் பாடவைத்து அதைத் தெளிவாகப் படம் பிடித்து விடியோ காட்சியாக அனுப்ப வேண்டும்.

கல்லூரி மாணவா்களுக்கான போட்டியில் கல்லூரிகளில் உள்ள தோ்தல் எழுத்தறிவு ஒருங்கிணைப்பாளா் மூலம் போட்டிகள் நடத்தப்படும். ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சுவரொட்டி வடிவில் சுவா் இதழ் வரைதல் வேண்டும். போட்டிகளை கல்லூரி நிா்வாகங்கள் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான சுவரொட்டி இதழ் வரைதல் போட்டியில் ஏ-3 தாளில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் படமும், அடுத்த பகுதியில் 50 முதல் 100 வாா்த்தைகளுக்குள் படத்துக்கான விளக்கமும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இதேபோல், அரசு பதிவு பெற்ற மகளிா் குழுக்களுக்கு ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தலா 20 குழுக்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்றனா்.

Monday, February 21, 2022

February 21, 2022

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2022 - வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிய இணையதள முகவரி - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு : 54/2022

நாள்: 21.02.2022
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in வாயிலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளும் வகையில் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான 21 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 மற்றும் மறுவாக்குப்பதிவு 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் 21.02.2022 ஆகிய நாட்களில் நடைபெற்றுள்ளதை தொடர்ந்து, பதிவான வாக்குகள், 268 வாக்கு எண்ணும் மையங்களில் 22.02.2022 அன்று காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால், வாக்கு எண்ணும் மையங்களில், அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரியான https://tnsec.tn.nic.in-ல் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஆணைப்படி)

Wednesday, February 16, 2022

February 16, 2022

PRO, PO-1,2,3 அலுவலர்களுக்கான பணிகள் - நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022...

PRO, PO-1,2,3 அலுவலர்களுக்கான பணிகள் - நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022...

* விதிகள் - 66, 72, 70, 71, 69 விளக்கம்

* முகவர்களிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள்

* வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை

* MOCK POLL நடத்துதல்

* வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்தல்

* வாக்குபதிவு முடிவில் தயார் செய்ய வேண்டி உரைகள்

* அனைத்திற்கும் தெளிவான விளக்கம் - PDF...

மின்னணு வாக்குப்பதிவு வாக்குச்சாவடி - வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கையேடு 2 - Download here...

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான குறிப்புகள் - Download here...

Sunday, February 06, 2022

February 06, 2022

முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேதி ரத்து அதிகாரிகளுக்கு 10ம் தேதி 2வது பயிற்சி: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேதியை ரத்து செய்து, தேர்தல் அதிகாரிகளுக்கான இரண்டாவது பயிற்சி வரும் 10ம் தேதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 26ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது.

சென்னை மாநகராட்சியை தவிர, இதர மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளில் பணி அமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வரும் 9ம் தேதி இரண்டாவது பயிற்சி அளிக்க அறிவுறுத்தி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தக்க அறிவுரைகள் ஆணையத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதர அனைத்து மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சியை நிர்வாக காரணங்களுக்காக 10.2.2022 (வியாழக்கிழமை) அன்று நடத்திட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, February 05, 2022

February 05, 2022

தேர்வு பணியா; தேர்தல் பணியா குழப்பத்தில் ஆசிரியர்கள்!

தேர்வு பணியா; தேர்தல் பணியா குழப்பத்தில் ஆசிரியர்கள்!

கல்வித்துறை திருப்புதல் தேர்வும் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பும் ஒரே நாளில் நடப்பதாக இருந்த நிலையில் பயிற்சி வகுப்பு பிப்.10க்கு மாற்றியும் குழப்பம் தீரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப். 9 ல் நடக்கும் முதல் திருப்புதல் தேர்வை ஒரு பொதுத் தேர்வு போல் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளி பின்பற்றி ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பதால் கூடுதல் வகுப்பறைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில் பயிற்சி வகுப்பை மாநில தேர்தல் கமிஷன் பிப்.10க்கு மாற்றி அறிவித்தது. ஆசிரியர்கள் கூறுகையில் “பயிற்சி வகுப்பை தேர்வு இல்லாத நாளான பிப்.8 அல்லது பிப். 12ல் நடத்தினால் தான் ஆசிரியர்கள் பங்கேற்க முடியும். இல்லாவிட்டால் தேர்வு தேதியை கல்வித்துறை மாற்றி குழப்பத்தை தீர்க்க வேண்டும்” என்றனர்.

Thursday, February 03, 2022

February 03, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பள்ளி ஆசிரியர் கள் மற்றும் பணியாளர்கள் யாரும் வாக்கு சேகரிப் பில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்பட் டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறி வுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட் டமாக நடைபெற உள் ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை அறி வித்து வருகின்றன. அவ் வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள் ளனர். ஆனால் வேட்பா ளர்களுக்கு ஆதரவாக பள்ளி ஆசிரியர்கள் மற் றும் கல்வித்துறை பணி யாளர்கள் யாரும் வாக்கு யாளர்கள் யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூ. டாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Monday, January 31, 2022

January 31, 2022

முதல் பயிற்சியின் போதே தபால் ஓட்டு படிவம் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டுக்கான படிவம்-12 ஐ வழங்க வேண்டும்'என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் ஈடுபட உள்ளனர். அதற்காக மூன்று கட்டமாக தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்று (ஜன.31) நடக்க உள்ள முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டுப்பதிவுக்கான படிவம்-12 ஐ வழங்க வேண்டும்.மேலும் தேர்தல் பணி நியமன கடிதம், வாக்காளர் அட்டை நகலை படிவத்துடன் இணைத்து தேர்தல் அலுவலரிடம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டாவது பயிற்சியின் போது தபால் ஓட்டை பதிவு செய்யவும், கையெழுத்திடவும் கெஜடெட் அலுவலரை நியமித்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருவோருக்கு தண்ணீர், உணவு, போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், என்றார்.
January 31, 2022

Election class இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு தேதி மாற்றம்


Kalvi Tv Videos 31.01.22

 


1 - 10th Std - கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் - ஒரே பக்கத்தில்👇


https://kaninikkalvi.blogspot.com/2022/01/1-10th-std-kalvi-tv-videos-310122.html 


https://www.kalviseithi.net.in/2022/01/1-10th-std-kalvi-tv-videos-310122.html 


https://www.dailydhuniya.com/2022/01/1-10th-std-kalvi-tv-videos-310122.html      


Join Telegram - https://t.me/kalviseithi  


 Visit -www.kalviseithi.net.in 


Total Pageviews

Search This Blog