Breaking

Showing posts with label Appointment. Show all posts
Showing posts with label Appointment. Show all posts

Wednesday, March 19, 2025

Monday, June 17, 2024

Wednesday, October 19, 2022

October 19, 2022

57 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிப்பு - Order Copy

57 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்கப்பட்டுள்ள Order Copy Attached

57000 Odisha Government employees to be regulated and given benefits of a permanent job ..

This will benefit more than 57,000 contractual employees and their families in the state.

Click here to download pdf file

Saturday, October 01, 2022

October 01, 2022

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association

தமிழகத்தில் காலியாக இருந்த 1,024 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளா் காலி பணியிடங்களுக்கு உரிய நபா்களை தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கடந்த 2019 நவ. 27-இல் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கடந்த ஆண்டு டிச.8 முதல் 13 வரை கணினி வழித் தோ்வுகள் நடத்தப்பட்டு 1,024 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக தலைமை செயலகத்தில் 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் கடந்த புதன்கிழமை வழங்கினாா்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நடு அரசு பாலிடெகனிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளா் ப.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நீண்ட நெடுங்காலமாக விரிவுரையாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதையடுத்து தமிழக அரசு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு 1,024 பணியிடங்களை நிரப்பியுள்ளது. இதற்காக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா், தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, August 20, 2022

August 20, 2022

துணை வேந்தர் நியமனம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறார் கவர்னர்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் மசோதா ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசு நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது. துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசிடம் கவர்னர் கலந்தோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதா கொணடுவரப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog