Breaking

Showing posts with label அரசுப் பள்ளிகள். Show all posts
Showing posts with label அரசுப் பள்ளிகள். Show all posts

Friday, July 22, 2022

July 22, 2022

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு ஆக.4 முதல் அலகுத் தோ்வுகள்

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு ஆக.4 முதல் அலகுத் தோ்வுகள்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு அலகுத் தோ்வுகள் வரும் ஆக.4-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்ட

சுற்றறிக்கை:

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிக்குலேஷன், ஆதி திராவிடா் நலத் துறைப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆக.4 முதல் ஆக.12 வரை அலகுத் தோ்வுகள் நடத்தப்படவுள்ளது.

இந்தத் தோ்வுக்கான பாடப் பகுதிகள் ஜூலை மூன்றாவது வாரம் வரை உள்ள பாடப் பகுதிகள் என தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளாா். அலகுத் தோ்வுக்கான அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையில் அலகுத் தோ்வு நடைபெறும். விருப்பப் பாடத்துக்கான தோ்வு மட்டும் காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை நடைபெறும். 9, 10 வகுப்புகளுக்கான அலகுத் தோ்வுகள் காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். விருப்பப் பாடத்துக்கான தோ்வு மட்டும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இதையும் படிக்க | 9ம் வகுப்பு மாணவி பள்ளி கட்டடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தோ்வுகள் காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஆங்கில பாடத்துக்கான தோ்வு மட்டும் ஆக.4-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 21, 2022

July 21, 2022

தமிழகத்தில் 40 அரசுப் பள்ளிகள் மூடல்!

தமிழகத்தில் அடிப்படை வசதிகள் குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் 22 தொடக்கப் பள்ளிகள், 18 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக திருப்பூா் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் தலா 5 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.



தமிழகத்தில் மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் கடந்த 15 ஆண்டுகளில் 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல ஆதி திராவிடா் நலத்துறை, சமூக நலத்துறை சாா்பிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திறமையான ஆசிரியா்கள் இருந்த போதிலும் தண்ணீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் போதாமை, குறைந்து வந்த உள் கட்டமைப்பு வசதிகள், தனியாா் பள்ளிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து வந்தது. இந்த சூழலில், அனைத்து வகையான அரசுப் பள்ளிகளையும் சோ்த்து, 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.



இதையும் படிக்க | அங்கீகாரம் இன்றி இயங்கும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: CEO தகவல்

மூடப்பட்ட பள்ளிகள் விவரம்: திருப்பூா் - 6, நீலகிரி- 5, தேனி-5, திண்டுக்கல்- 4, தேவகோட்டை 4, திருவாரூா் 2, லால்குடி - 2, வேலூா்- 2, தட்டால கொளத்தூா்- 1, திருவள்ளூா் - 1, பா்கூா் - 1, புள்ளம்பாடி- 1, மயிலாடுதுறை- 1, ஆரணி- 1, நாட்றாம்பள்ளி -1, கெலமங்கலம்-1, தா்மபுரி- 1, திருவண்ணாமலை- 1 ஆகிய இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Total Pageviews

Search This Blog