Breaking

Showing posts with label Villagers. Show all posts
Showing posts with label Villagers. Show all posts

Tuesday, October 04, 2022

October 04, 2022

2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்!

2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்! - Preliminary work for selection of 2,748 village assistants has started!

தமிழகம் முழுதும் 2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளன.ஊராட்சிகளில் உள்ள கிராம உதவியாளர்கள் வாயிலாக, அரசின் பல்வேறு திட்டங்கள், தகுதியுடைய பயனாளிகளை சென்றடைகிறது.

ஆனால், மாநிலம் முழுதும் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.தற்போது, இப்பணியிடங்களை நிரப்புவதற்கான முன்னேற்பாடு துவங்கி உள்ளது.இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக கமிஷனர் பிரபாகர் எழுதியுள்ள கடிதம்:கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை, வரும் 10ம் தேதி, தாலுகா அளவில் வெளியிட வேண்டும்.

விண்ணப்பங்களை நவ., 7 வரை பெற வேண்டும்.விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை, 14ம் தேதியும்; எழுத்து தேர்வை, 30ம் தேதியும் நடத்த வேண்டும். நேர்முக தேர்வை டிச., 15, 16ல் நடத்த வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட கிராம உதவியாளர்கள் பட்டியலை, 19ம் தேதி வெளியிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 13, 2022

August 13, 2022

அரசு பள்ளிக்கு கிராமத்தினர் சீர்வரிசை

அரசு பள்ளி மாணவர் களுக்கு தேவையான. 20 வகை பொருட்களை, பெற்றோர். சீர்வரிசையாக எடுத்து வந்து, பள்ளியில் நேற்று ஒப்படைத்தனர்.

மேல்மருவத்துார் அடுத்த ராமாபுரம் ஊராட் சியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. வேலா மூர், கீழாமூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ பயில்கின்றனர்.

மாணவியர் பள்ளி மாணவ - மாண வியருக்கு கல்வி கற்ப தற்கான தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தேவையான பொருட்களை வாங்கித்தர கிராமத்தினர் முடிவெசில், டுத்தனர்.

தொடர்ந்து பீரோ, கணினி மேஜை, மின் விசிறி, வண்ண மாணவர்களுக்கு விளையாட்டு பொருட் கள், அறிவியல் உபகரணங் கள், நோட்டு புத்தகங்கள். பென் நாற்காலிகள் போன்ற வற்றை, பள்ளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கினர்.

பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று. சோத்துப்பாக்கம் வந்த வாசி சாலையில் ஊர்வல மாக வந்தனர்.

இதை பார்த்த வியாபா ரிகள் மின்விசிறி, டியூப் லைட், நோட்டு புத்தகங் கள், பேனா, பென்சில் ஆகியவற்றை, அவர்களா கவே வந்து வழங்கினர்.

சீர்வரிசை போல் சுமந்து வந்தோருக்கு, பள்ளி மாண வர்கள் வரவேற்பு அளித்த னர். சீர்வரிசை பொருட் களை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரி யர்களிடம், கிராமத்தினர் வழங்கினர்.

Total Pageviews

Search This Blog