Breaking

Showing posts with label medical students. Show all posts
Showing posts with label medical students. Show all posts

Thursday, February 23, 2023

February 23, 2023

Medical Study Eligibility Proof: மருத்துவப் படிப்பு தகுதிச் சான்று: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்



மருத்துவப் படிப்பு தகுதிச் சான்று: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்

இளநிலை மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகளுக்கு தகுதிச் சான்று கோரி விண்ணப்பிக்க பிப். 28-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் cms2.tnmgrmuexam.ac.in என்ற இணையதளப் பக்கத்தின் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் மருத்துவப் படிப்புகளிலும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளிலும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அரசு பாடத்திட்டம், சிபிஎஸ்இ, சா்வதேசப் பாடத் திட்டத்தின் (ஐஎஸ்சி) கீழ் பயின்றவா்களுக்கு தகுதிச் சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போதைய சூழலில், வெளிநாட்டவா்கள், வெளிநாடுகளில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த இந்தியா்கள் ஆகியோா் மட்டும் கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை உள்ளது.

அதன்படி, ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளில் சோ்ந்துள்ளவா்கள் தங்களது கல்வி நிறுவனங்களின் மூலம் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று கோரி பிப். 28 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம், விதிமுறைகள் பல்கலைக்கழக இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, August 21, 2022

August 21, 2022

மருத்துவ மாணவர்களின் கல்வி - முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம்

உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர நடவடிக்கை: முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம்

வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கம் செயல் தலைவர் உஸ்மான்கான் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையே முண்ட போர் காரணமாக அங்கு பயிலும் சுமார் 20000 இந்திய மாணவர்கள் அதிலும் குறிப்பாக 3000 தமிழக மாணவர்கள் ஆகியோரின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது.

இந்த சூழல் நிலையில் தாங்களும் தங்களுடைய அமைச்சர்களும், மத்திய அரசோடு இணைந்து தீவிரமாக பணியாற்றி அவர்களை பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அழைத்து வந்ததை நன்றியோடு நாங்கள் நினைவு கூற விரும்புகிறோம். இந்த நிலையில் ஏறத்தாழ எட்டு மாதங்கள் கடந்தும் போர் முடிவுக்கு வராத சூழ்நிலையில் மருத்துவ மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியான நிலையில் உள்ளது. மருத்துவ கல்வியாண்டு வருகின்ற செப்டம்பர் முதல் துவங்க உள்ளது.

இந்த சூழலில் ஏற்கனவே போர் காரணமாக அங்கிருந்து திரும்பி வந்த மாணவர்கள் இணையம் மூலமாக கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மருத்துவ கல்வி என்பது நேரடியாக கள அனுபவத்தோடு பயில வேண்டிய ஒரு படிப்பாக இருக்கின்ற நிலையில் இணையம் வாயிலாக கல்வியை கற்பது என்பது அவர்களது எதிர்காலத்திற்கு போதுமானதாக இருக்காது.

ஆகவே மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையாக உடனடியாக இந்த இறுதி ஆண்டு மாணவர்கள் விஷயத்தில் அவர்களுடைய கல்வி பாதிக்காத வகையில் உடனடியாக சிறந்த தீர்வை எடுக்க வேண்டும். ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களது கல்வி தொடரத்தக்க வகையில் மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசும் அதற்கு தேவையான அழுத்தங்களை தமிழகத்தின் சார்பில் தாங்கள் முன்னேடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் துயர் துடைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog