UGC NET
September 23, 2025
Showing posts with label Complaint to UGC. Show all posts
Showing posts with label Complaint to UGC. Show all posts
Tuesday, September 23, 2025
Monday, April 08, 2024
Thursday, August 03, 2023
UGC letter regarding
August 03, 2023
போலி பல்கலை. பட்டம் செல்லாது: UGC எச்சரிக்கை
போலி பல்கலை. பட்டம் செல்லாது: யுஜிசி எச்சரிக்கை
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியாது. எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறித்த விவரங்களையும், போலிபல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களையும் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதேநேரம், யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியாது. எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறித்த விவரங்களையும், போலிபல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களையும் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதேநேரம், யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tuesday, October 04, 2022
UGC
October 04, 2022
ராகிங் புகாா்கள் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல்: என்எம்சி
ராகிங் புகாா்கள் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல்: என்எம்சி - Exclusive email for filing raging complaints: NMC
மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தொடா்பான புகாா்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கியுள்ளது.
அதன்படி, அந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவா்களும், அவா்களது பெற்றோரும் நேரடியாகப் புகாா்களை அனுப்பலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளைத் தடுக்க டாக்டா் அருணா வானிகா் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று தேசிய மருத்துவ ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி மாணவா்கள், அவா்களது பெற்றோா் அளித்த புகாா்கள் மீது விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான ராகிங் செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனிடையே, ராகிங் தொடா்பான புகாா்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள், தங்களது கல்லூரி வளாகங்களில் விரிவாக கொண்டு சோ்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.
மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தொடா்பான புகாா்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கியுள்ளது.
அதன்படி, அந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவா்களும், அவா்களது பெற்றோரும் நேரடியாகப் புகாா்களை அனுப்பலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளைத் தடுக்க டாக்டா் அருணா வானிகா் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று தேசிய மருத்துவ ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி மாணவா்கள், அவா்களது பெற்றோா் அளித்த புகாா்கள் மீது விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான ராகிங் செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனிடையே, ராகிங் தொடா்பான புகாா்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள், தங்களது கல்லூரி வளாகங்களில் விரிவாக கொண்டு சோ்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.
Thursday, May 12, 2022
UGC
May 12, 2022
கவுரவ விரிவுரையாளர்களை மதிக்காத தமிழக அரசு: யு.ஜி.சி., தலைவரிடம் புகார்
மதிக்காத தமிழக அரசு
'கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு கேவலமாக நடத்துகிறது. எங்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகிறது' என டில்லியில் பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) தலைவர் ஜெகதீஸ்குமாரிடம் தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.அதில் தெரிவித்துள்ளதாவது: 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை
தமிழகத்தில் 149 அரசு கலை கல்லுாரிகளில் 5500 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை. யு.ஜி.சி., தகுதியுள்ளவர்களை பணிநிரந்தரம் செய்யகோரி போராடி வருகிறோம். ஆனால் உயர்கல்வித் துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர். எங்களுக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்படுவதில்லை. கைடு ஷிப், மகப்பேறு விடுமுறை, விடுப்பு எடுப்பதில் குளறுபடி, பணிமாறுதல் போன்ற எவ்வித குறைகளையும் அரசு கண்டுகொள்வதில்லை.
யு.ஜி.சி., தலைவரிடம் புகார்
எங்களுக்கு மேஜை, நாற்காலி வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை. மிக கேவலமாக தமிழக அரசு நடத்துகிறது.அகில இந்திய அளவில் 23 மாநிலங்கள் இணைந்து தேசிய கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உரிமைகள் சலுகைகளுக்காக போராட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலும் இதுபோன்ற நிலை நீடித்தால் இக்கூட்டமைப்பு சார்பில் டில்லி யு.ஜி.சி., வளாகம், மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசிய மனித உரிமை ஆணைய அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு கேவலமாக நடத்துகிறது. எங்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகிறது' என டில்லியில் பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) தலைவர் ஜெகதீஸ்குமாரிடம் தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.அதில் தெரிவித்துள்ளதாவது: 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை
தமிழகத்தில் 149 அரசு கலை கல்லுாரிகளில் 5500 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை. யு.ஜி.சி., தகுதியுள்ளவர்களை பணிநிரந்தரம் செய்யகோரி போராடி வருகிறோம். ஆனால் உயர்கல்வித் துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர். எங்களுக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்படுவதில்லை. கைடு ஷிப், மகப்பேறு விடுமுறை, விடுப்பு எடுப்பதில் குளறுபடி, பணிமாறுதல் போன்ற எவ்வித குறைகளையும் அரசு கண்டுகொள்வதில்லை.
யு.ஜி.சி., தலைவரிடம் புகார்
எங்களுக்கு மேஜை, நாற்காலி வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை. மிக கேவலமாக தமிழக அரசு நடத்துகிறது.அகில இந்திய அளவில் 23 மாநிலங்கள் இணைந்து தேசிய கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உரிமைகள் சலுகைகளுக்காக போராட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலும் இதுபோன்ற நிலை நீடித்தால் இக்கூட்டமைப்பு சார்பில் டில்லி யு.ஜி.சி., வளாகம், மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசிய மனித உரிமை ஆணைய அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
