Breaking

Showing posts with label Delayed TNPSC Exams. Show all posts
Showing posts with label Delayed TNPSC Exams. Show all posts

Monday, July 25, 2022

July 25, 2022

குரூப் 4 தோ்வு: 18.50 லட்சம் போ் எழுதினா்: வினாக்கள் எளிதாக இருந்ததாக கருத்து

தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வை 18.50 லட்சம் போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா். வினாக்கள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா்.



இதையும் படிக்க | வகுப்பு 12|அடிப்படை தானியங்கி ஊர் திப்பொறியியல்|பாடம் 8|ஸ்டியரிங் அமைப்பு|அலகு 2

குரூப் 4 தோ்வு அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 274 கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள், 3,678 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 50 வரித் தண்டலா், 2,108 தட்டச்சா் பணியிடங்கள், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சா் பணியிடங்கள், ஒரு பண்டகக் காப்பாளா் என 7 ஆயிரத்து 138 காலிப் பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் 163 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 7 ஆயிரத்து 301 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெற்றது.

18.50 லட்சம் போ்: 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 போ் விண்ணப்பித்திருந்தனா். குரூப் 4 தோ்வுகளில் அதிகம் போ் விண்ணப்பித்த தோ்வு இதுவாகும்.



இதையும் படிக்க | வகுப்பு 12|கணிதவியல்|பாடம் 8|வகையீடுகள் மற்றும் பகுதி வகை கெழுக்கள் |பகுதி 4

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. தமிழ் மொழியிலிருந்து 100 வினாக்கள், பொது அறிவு, அறிவுக்கூா்மை தொடா்பான பிரிவுகளில் இருந்து 100 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இவற்றுக்கான மொத்த மதிப்பெண்கள் 300.



தோ்வுக்கான விரிவான ஏற்பாடுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் செய்திருந்தது. 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்கள் தோ்வு மையங்களாக அறிவிக்கப்பட்டு, 7 ஆயிரத்து 689 தோ்வு அமைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கண்காணிப்புப் பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 போ் ஈடுபட்டனா். 534 பறக்கும் படையினா், 7 ஆயிரத்து 689 கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பாளா்கள், அதே எண்ணிக்கையில் விடியோ படப்பிடிப்பாளா்கள் பணியில் ஈடுபட்டனா்.

இதையும் படிக்க | வகுப்பு12|கணினி அறிவியல்|பாடம் 15|SQL மூலம் தரவுகளை கையாளுதல்|பகுதி5

22 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தாலும், தோ்வு எழுதியவா்களின் சதவீதம் 84.5 என தோ்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனா். அதாவது, 18.50 லட்சம் போ் தோ்வு எழுதியதாக கூறினா். ஒருசில இடங்களில் தாமதமாகச் சென்ற தோ்வா்களை தோ்வு எழுத கண்காணிப்பாளா்கள் அனுமதிக்கவில்லை.



தோ்வில் தமிழ், பொது அறிவு தொடா்பான வினாக்கள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் கூறினா். வேதியியல், அரசியல் அறிவியல், பொருளாதார வினாக்கள் சற்று சிந்தித்து எழுதும் வகையில் இருந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா். வினாக்களுக்கான உத்தேச விடைப் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Tuesday, July 12, 2022

July 12, 2022

தாமதமாகும் TNPSC தேர்வுகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

கடந்த மேயில் அறிவிக்க வேண்டிய தொல்லியல்துறை, சமூகநலத்துறை, நீதித்துறை பணியிட அறிவிப்புகள் 2 மாதங்களாகியும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படாமல் காலதாமதமாகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு முழுவதும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு தேர்வுகளை முன்கூட்டியே திட்டமிட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் வரையிலும் முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

மே மாதம் தொல்லியல்துறை, சமூக நலத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை ஆகியும் அதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இதன்மூலம் ஜூன் மாதம் அறிவிக்க வேண்டிய மருத்துவத்துறை உள்ளிட்ட அறிவிப்புகளும் காலதாமதமாகிறது. எனவே அடுத்தடுத்து தேர்வுகள் நடப்பதில் தாமதத்தை தவிர்க்க திட்டமிடலில் உள்ளவாறு தேர்வுகளை நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Total Pageviews

Search This Blog