Breaking

Showing posts with label விண்ணப்பங்கள். Show all posts
Showing posts with label விண்ணப்பங்கள். Show all posts

Tuesday, August 02, 2022

August 02, 2022

மதுரையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பம்

மதுரையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பம்

மதுரை : மதுரை மண்டலத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் விரைவில் நடக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனரின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 29 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மூன்று கல்லுாரிகளிலுள்ள 2448 உட்பட மொத்தம் 14,430 இடங்களுக்கு 73,260 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை பி.காம், உளவியல், வரலாறு, ஆங்கிலம் உள்ளிட்ட கலைப் பிரிவு பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர் விருப்பம் தெரிவித்துள்ளனர். சம்மந்தப்பட்ட கல்லுாரிகள் சார்பில் மாணவர் மதிப்பெண்ணிற்கு ஏற்ப தரவரிசை பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. என்று மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுக்காக காத்திருந்ததால் இந்தாண்டு கவுன்சிலிங் நடத்த சற்று தாமதமாகியுள்ளது. அனைத்து கல்லுாரிகளும் கவுன்சிலிங் நடத்த தயார் நிலையில் உள்ளது என்றும். விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு, உதவி பெறும் கல்லுாரிகளில் மூவலுார் ராமமிர்தம் அம்மையார் பெயரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 16,478 பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

Thursday, July 28, 2022

July 28, 2022

விண்ணப்பமோ 22.5 கோடி..வேலைவாய்ப்போ 7,22,311 மட்டுமே

ஒன்றிய அரசு பணிக்காக கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி பேருக்கு மேல் பதிவு செய்தும் வெறும் 7 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை கிடைத்திருக்கிறது. வேலைக்காக விண்ணப்பித்தவர்களில் 1 விழுக்காட்டினருக்கும் குறைவாக மட்டுமே வேலை கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை பணியமர்த்த இருப்பதாக ஒன்றிய அரசு ஜூன் 14ம் தேதி அறிவித்தது. அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டதை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டது.

ஆனால் 18 மாதங்களில் 10 லட்சம் பேரை நியமிக்கப்போவதாக அறிவித்திருப்பதை காட்டிலும் கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., மக்களவையில் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்திருக்கிறார். 2014 முதல் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலைகளுக்காக 22 கோடியே 5 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

சராசரியாக ஆண்டுக்கு 2 கோடியே 75 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனால் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 90,288 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018 - 19ம் ஆண்டில் 38,100 பேரும், 2021- 22ம் ஆண்டில் 38,850 பேரும் மட்டுமே ஒன்றிய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு 8 ஆண்டுகளில் 7,22,311 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். 8 ஆண்டுகளிலும் விண்ணப்பித்தவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கும் குறைவாகவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, July 09, 2022

July 09, 2022

ஆரம்பக்கல்வி, உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரம்பக்கல்வி, உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரம்பக்கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கும் அரசு, அரசு மானியம்பெறும், அரசு மானியம்பெறாத கல்விப்பயிற்சி கல்லூரிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் ஆரம்பக்கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சோ்ந்து படிக்க சோ்க்கை பெறுவதற்கு தகுதியான மாணவா்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டி.பி.எட். (உடற்கல்வி) படிக்க விரும்பும் மாணவா்கள் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. அல்லது 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும்.

கல்வித்துறை, பல்கலைக்கழகம் அல்லது இளைஞா் மற்றும் விளையாட்டுத்துறை ஏற்பாடுசெய்திருந்த தேசிய அல்லது மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்கும் மாணவா்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானதாகும்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.

விண்ணப்பங்களை செலுத்தும் முறை, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்டவிவரங்களை அறிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம். மேலும் விவரங்கள் பெற 080-22483140, 22483145 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது மாவட்ட கல்விப்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களை தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது

Total Pageviews

Search This Blog