Breaking

Showing posts with label panneerselvam. Show all posts
Showing posts with label panneerselvam. Show all posts

Wednesday, March 01, 2023

March 01, 2023

TNPSC குரூப் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை ரத்து செய்ய விட்டு, மறு தோ்வு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நகைக்கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் குளறுபடி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கியதில் குளறுபடி, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தோ்வில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி என்று குளறுபடிகளின் மொத்த உருவமாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் மூலம் முன்யோசனையற்ற திட்டமிடலற்ற, நிா்வாகத் திறமையற்றயதாக திமுக அரசு உள்ளது என்பது தெளிவாகிறது.

தற்போது நடைபெற்ற குளறுபடிகளின் காரணமாக அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தோ்வினை ரத்துசெய்துவிட்டு, மறு தோ்வு நடத்துவதே பொருத்தமாக இருக்கும். இதுதான் அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்று கூறியுள்ளாா்.

Saturday, January 21, 2023

January 21, 2023

தமிழகத்தில் கல்வி கற்கும் திறன் குறைவு - முன்னாள் முதல்வர் அறிக்கை

Lack of education in Tamil Nadu - Report of former Chief Minister
தமிழகத்தில் கல்வி கற்கும் திறன் குறைவு Education is low in Tamil Nadu

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கை:

தமிழகத்தில் கல்வித் தகுதி நிலை குறித்து, 920 கிராமங்களில் உள்ள, 3 முதல், 16 வயது வரையிலான, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதல் வகுப்பு படிக்கும், 42 சதவீத மாணவர்களால், 9 வரையிலான எண்களைக் கூட படிக்க இயலவில்லை. முதல் வகுப்பில், 53 சதவீத மாணவர்கள்; இரண்டாம் வகுப்பில், 23 சதவீத மாணவர்கள், ஆங்கிலத்தில் உள்ள பெரிய எழுத்துக்களைக் கூட படிக்க இயலவில்லை.

கல்வி அறிவில், தேசிய சராசரிக்கு கீழ் தமிழகம் உள்ளது.

ஆட்சி அமைந்து, 20 மாதங்களைக் கடந்த நிலையிலும், மாநில கல்விக் கொள்கையை அறிவிக்காதது, மாணவர்களின் கல்வி மீது, தி.மு.க., அரசுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துகிறது.

மாணவரிடையே கற்றல் திறனை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, January 08, 2023

January 08, 2023

ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம்: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம்: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் பணி அல்லாத ஊழியா்களுக்கும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியா்களுக்கான ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் கடைசிப் பணி நாளன்று அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபா் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது. நிா்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை கடந்த அக்டோபா் மாதம் நிலவியது.

இருப்பினும், இந்தச் சிக்கல் சில நாள்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இந்தப் பிரச்னை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், பணியாளா்கள் 3 மாதங்களாக ஊதியம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனா் என்பதும் தற்போது தெரியவருகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

Thursday, November 03, 2022

November 03, 2022

அரசு ஊழியா்களுக்கான 4% அகவிலைப்படிஉயா்வை வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்களுக்கான 4% அகவிலைப்படிஉயா்வை வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியிலிருந்து தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், திமுக ஆட்சியில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மத்திய அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான அகவிலைப்படி உயா்வை 14 சதவீதம் உயா்த்தி, அதாவது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி அதனை 2021 ஜூலை 1 முதல் ரொக்கமாக மத்திய அரசு வழங்கியது. ஆனால், அந்த நடைமுறையை பின்பற்றாமல் 2022 ஜனவரி 1 முதல் 14 சதவீத அகவிலைப்படி உயா்வை மாநில அரசு ஊழியா்களுக்கு வழங்கியது. இதேபோன்று மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை 3 சதவீதம் உயா்த்தி அதாவது, 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயா்த்தி 2022 ஜனவரி 1 முதல் ரொக்கமாக மத்திய அரசு வழங்கியது. ஆனால், 2022 ஜூலை 1 முதல்தான் வழங்கப்பட்டது.

தற்போது 2022 ஜூலை 1 முதல் மேலும் 4 சதவீதம் அகவிலைப்படி உயா்வை அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயா்த்தி மத்திய அறிவித்து ஒரு மாதத்துக்கு மேலாகியுள்ளது. ஆனால், திமுக அரசு வழக்கம்போல மௌனமாகவே உள்ளது. இது கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாக தலையிட்டு அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜூலை 1 முதல் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

Monday, April 25, 2022

April 25, 2022

'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி?

AIADMK co-ordinator Panneer Selvam has stressed that the Chief Minister should take immediate action to increase the internal rate of return for Tamil Nadu government employees as well as central government employees. His statement: Last, in 2020, as the corona epidemic began to spread, a complete curfew was imposed across the country. As a result, the revenues of the central and state governments fell. The increase in the internal rate of return for Central Government employees was suspended; The federal government announced that a decision on that would be taken later. Currently, the central government has announced an increase in the internal rate of return for central government employees from 31 per cent to 34 per cent. However, the Tamil Nadu government has not issued any notice for the increase in the internal rates for state government employees. Tamil Nadu government employees expect the central government to announce an increase in the rate of increase to 34 per cent in the current assembly session, as announced by the central government. The Chief Minister should immediately intervene and take action to increase the internal rate of return for Tamil Nadu government employees in parallel with the central government employees, said Panneer Selvam. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படியை உயர்த்த, முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒபன்னீர்செல்வம் வலியுறுத்தல்ருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த, 2020-ல், கொரோனா தொற்று பரவல் துவங்கியதால், நாடு முழுதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால், மத்திய - மாநில அரசுகளின் வருவாய் சரிந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது; அதுபற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக

தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான எந்த அறிவிப்பையும், தமிழக அரசு வெளியிடவில்லை.

மத்திய அரசு அறிவித்தது போல, அகவிலைப்படி உயர்வை, 34 சதவீதமாக உயர்த்தி, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று, தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் உடனே தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Sunday, April 24, 2022

April 24, 2022

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "கொரோனா தொற்று காரணமாக 01-01-2020 முதல்‌ மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு, இந்த அகவிலைப்படி உயர்வை - வழங்குவது குறித்து 01-07-2021-க்கு பிறகு முடிவு எடுக்கப்படும்‌ என்றும்‌, அவ்வாறு முடிவு எடுக்கும்போது 01-01-2020 முதல்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு அதன்‌ பணப்‌ பயன்‌ 01-07-2021 முதல்‌ அளிக்கப்படும்‌ என்றும்‌ அறிவித்தது, மத்திய அரசின்‌ இந்த அறிவிப்பினைத்‌ தொடர்ந்து தமிழ்நாடு அரசும்‌ இதனை நடைமுறைப்படுத்தியது. ஓபிஎஸ் வலியுறுத்தல்

இதனைத்‌ தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மறுபரிசீலனை செய்து 01-01-2020 முதல்‌ 21 விழுக்காடு, 01-07-2020 முதல்‌ 25 விழுக்காடு, 01-01-2021 முதல்‌ 28 விழுக்காடு, 01-07-2021 முதல்‌ 31 விழுக்காடு என உயர்த்தி, அதன்‌ பணப்‌ பயனை 01-07-2021 முதல்‌ வழங்கியது. இதனைத்‌ தொடர்ந்து 01-01-2022 முதல்‌ மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 34 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

அதே சமயத்தில்‌, தமிழ்நாட்டில்‌ ஏற்பட்ட ஆட்சிமாற்றம்‌ காரணமாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக 01-01-2022 முதல்‌ தான்‌ ரொக்கமாக வழங்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 01-07-2021 முதல்‌ வழங்கப்பட்ட 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 01-01-2022 முதல்‌ வழங்கப்பட்டது. ஆறு மாத காலம்‌ தாமதமாக வழங்கப்பட்டது.

தற்போது 01-01-2022 முதல்‌ மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு 31-03-2022 அன்றே அறிவித்துவிட்டது, இந்த அகவிலைப்படி - உயர்வு அறிவிக்கப்பட்டு 24 நாட்கள்‌ கடந்துள்ள நிலையில்‌, தமிழ்நாடு அரசு ஊழியர்‌ சங்கங்கள்‌ அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில்‌, அகவிலைப்படிக்கான நிதி - ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டும், இது குறித்து எந்த அறிவிப்பையும்‌ தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் இந்த விஷயத்தில்‌ அரசு மவுனமாக இருப்பதைப்‌ பார்க்கும்போது, சென்ற முறை ஆறு மாதம்‌ காலந்தாழ்த்தியதைப்‌ போல்‌ இந்த முறையும்‌ அரசு தாமதப்படுத்துமோ என்ற சந்தேகம்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ மத்தியில்‌ மேலோங்கியுள்ளது. கொரோனா தொற்று ஓரளவு குறைந்து, அரசின்‌ வருமானமும்‌ அதிகரித்துள்ள நிலையில்‌, 15 நாட்கள்‌ ஈட்டிய விடுப்பை ஒப்புவித்து பணமாக்கும்‌ முறையும்‌ ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்‌, மத்திய அரசு அறிவித்துள்ளது போல்‌, அகவிலைப்படி உயர்வையாவது 01-01-2022 முதல்‌ 34 விழுக்காடாக உயர்த்தி, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி நடப்பு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரிலேயே அறிவிக்க வேண்டும்‌ என்று அரசு ஊழியர்கள்‌ எதிர்பார்த்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 01-01-2022 முதல்‌ 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Monday, April 04, 2022

April 04, 2022

12 ஆம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்வுக்கான தகுதித் தேர்வு அல்ல; சியுஇடி தேர்வை திரும்பப் பெறுவீர்!

"If the CUET allows the entrance test, the score of 12 will not be valid. Class 12 will be like a qualifying test for the entrance test. This will severely affect the poor, simple and rural students. Therefore, action should be taken to withdraw the entrance notice immediately," the AIADMK coordinator said. O. Panneerselvam insisted.

In a statement, he said, "The Union Ministry of Education has announced that the entrance examination for admission to courses in Central Universities will be held from the academic year 2022-2023, in the face of the inability to cancel the NEED examination for medical admissions, which has caused great dissatisfaction among students, parents and academics. Has caused.

Variety in 45 Central Universities across India and its affiliated colleges In order to fill the 1.8 lakh seats for undergraduate and postgraduate courses, the Central University Eligibility Test (CUET) CEET examination will be conducted from the academic year 2022-2023. The Central Ministry of Education has stated that the news has come in the press. Although the DMK government has objected to the examination being conducted on the basis of the National Education Policy, it has been reported that the registration for the entrance examination has begun and applications for the entrance examination can be submitted till the 30th of this month and the examination will be conducted in 13 languages, including Tamil. This confirms that admission to Central Universities and its affiliated colleges is through entrance examinations.

If this situation continues, I would like to inform you that in the future, admission to undergraduate and postgraduate courses in all universities and its affiliated colleges may become compulsory and there will be no value for the marks obtained in Class XII. Also, Class XII will be like a qualifying exam for the entrance exam. Poor, simple, rural students will be severely affected by this.

The DMK government should immediately take the necessary constructive steps to withdraw this entrance test without nominally objecting to it. The DMK has the responsibility to pinch this on the bud. The government has. Poor, simple rural student, students are currently suffering due to the tail wagging left in the NEET exam. Apart from that, in the case of this entrance examination, keeping in mind that this is the right moment, DMK will take necessary steps to withdraw the entrance examination notice without delay. There is an expectation among students, alumni and academics that the government should take over.

Therefore, I urge the Chief Minister to bring this issue to the notice of the Central Government immediately, to put the necessary pressure on it and to take immediate action to withdraw the entrance examination notice. ” "சியுஇடி நுழைவுத் தேர்வை அனுமதித்தால் 12 ஆம் மதிப்பெண்ணிற்கு மதிப்பு இருக்காது. 12 ஆம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர். ஆகையால், நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 இலட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக, 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, அதாவது Central University Eligibility Test (CUET) சியுஇடி தேர்வு நடத்தப்படும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு திம.க அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டதாகவும், நுழைவுத் தேர்வுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்தத் தேர்வு தமிழ் மொழி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும் என்பதோடு மட்டுமல்லாமல் பன்னிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணிற்கு ஒரு மதிப்பு இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த நுழைவுத் தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு உண்டு. நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத் தேர்வு விஷயத்திலாவது, இதுதான் சரியான தருணம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, காலந்தாழ்த்தாமல் நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை திமுக. அரசு எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உள்ளது.

எனவே, முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog