Breaking

Showing posts with label central and state governments. Show all posts
Showing posts with label central and state governments. Show all posts

Wednesday, March 29, 2023

March 29, 2023

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் மாநில அரசுகளையே சார்ந்தது: மத்திய அரசு

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் மாநில அரசுகளையே சார்ந்தது: மத்திய அரசு - The responsibility for implementing the Right to Compulsory Education Act also rests with the State Governments: the Central Government

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு, மாநில அரசுகளை சார்ந்தது என்ற தகவல் மக்களவையில் வெளியாகி உள்ளது. இதை விழுப்புரம் தொகுதி எம்.பி.யான டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமான பதிலாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதான் அளித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், ''இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2009, இயற்றப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் குழந்தைகளின் தரநிலைகளின்படி கற்றல் இடைவெளி இருக்கிறதா? அப்படியானால், அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் குறைந்தபட்ச கற்றல் அளவை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஜனவரி, 2020 முதல் டிசம்பர் 2022 வரை, சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்தோர்/குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?'' எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலாக மக்களவையில் கல்வி அமைச்சர் அளித்த விரிவான அறிக்கையில், ''கல்வி என்பது அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டம், 2009ன் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே பொருத்தமான அரசாங்கங்களாகும். மேலும், ஆர்டிஇ-யின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி பள்ளிகளில் பள்ளிக் கட்டமைப்புகளை வழங்குவதற்கான பொறுப்பும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கே உள்ளது'' எனக் கூறியிருக்கிறார்.

Thursday, March 23, 2023

March 23, 2023

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல் - Increasing Corona Incidence: Central Govt instructs State Governments to follow 5 tier plan

நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சோதனை செய்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், கோவிட் நடைமுறையை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அடுக்குத் திட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும். கரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக விரைவில் நாங்கள் பயிற்சி சோதனையை மேற்கொள்வோம். இந்தச் சோதனை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும். மேலும், அனைத்து மாநிலங்களும் இன்ஃப்ளூயன்சா மற்றும் கரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கான மருந்துகள், உபகரணங்கள் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இவை தவிர அனைத்து மாநிலங்களில் போதிய அளவிற்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், சுகாதாரப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிதரமர் ஆலோசனை: நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை இந்த அறிவுத்தலை வழங்கியுள்ளது.
நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில், கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. எனவே, நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

ஒரு நாளில் 1,300 பேர் பாதிப்பு: இந்தநிலையில், கடந்த 140 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் புதன்கிழை ஒரே நாளில் 1,300 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,605 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒருவர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 816 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Monday, July 04, 2022

July 04, 2022

மத்திய - மாநில அரசுகளின் அரசியல் சண்டையில் சிக்கித் தவிக்கும் பல்கலைக்கழகங்கள்

மத்திய - மாநில அரசுகளின் அரசியல் சண்டையில் சிக்கித் தவிக்கும் பல்கலைக்கழகங்கள்br>
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளுக்கும் இடையேயான அரசியல் சண்டையில் பல்கலைக்கழகங்கள் சிக்கித் தவிப்பதாக கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். br>
‘குறிப்பாக மாநில அரசுக்கும் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கும் இடையேயான மோதல்போக்கு காரணமாக மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. திறமையின்அடிப்படையில் அல்லாமல் அரசியல் செல்வாக்கின் கீழ் சில பல்கலைக்கழகங்களில் நியமனங்கள் செய்யப்படுவதாக புகாா்கள் எழுகின்றன. அந்த வகையில், அரசியல் போா்க்களமாக பல்கலைக்கழகங்கள் மாற்றப்படுகின்றன. மத்திய உயா்கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை குடியரசுத் தலைவா் கெளரவத் தலைவராக உள்ளாா். அதன்படி, மத்திய கல்வி அமைச்சகம் அமைக்கும் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தலைமை நிா்வாகியை குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வருகிறாா். br>
ஆனால், மாநிலங்கள் அளவில் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் உள்ளாா். சில மாநிலங்களில் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனங்களை ஆளுநா் நேரடியாகவும், வேறுசில மாநிலங்களில் மாநில அரசு சாா்பில் நியமிக்கப்படும் தோ்வுக் குழு பரிந்துரையின்அடிப்படயில் துணைவேந்தரை ஆளுநா் நியமனம் செய்வது நடைமுறையில் உள்ளது. br>
இந்தச் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்து வருவது, துணைவேந்தா்கள் நியமனத்தை பாதிப்பதோடு, கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்று கல்வியாளா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து மிராண்டா ஹவுஸ் பேராசிரியரும், தில்லி பல்கலைக்கழக கல்விக் குழு முன்னாள் உறுப்பினருமான அபா தேவ் ஹபீப் கூறுகையில், ‘துணைவேந்தா்கள் நியமனங்கள் என்பது அரசியல் நியமனங்களாக மாறிவிட்டன. பாஜகவைச் சோ்ந்தவா்கள்தான் ஆளுநா்களாக நியமிக்கப்பட்டு, மாநிலங்களில் அமா்ந்துள்ளனா். br>
அவா்கள், தங்களுக்கு நெருக்கமானவா்களை மட்டுமே துணைவேந்தா்களாக நியமிக்கின்றனா். பல்கலைக்கழகங்களின் கலாசார நடைமுறைகளுக்கு மதிப்பளித்து நியமனங்கள் செய்யப்பட வேண்டும். மாறாக, மாநிலங்களை ஒடுக்கும் நிலை தொடா்ந்தால், இரு அரசுகளுக்கு இடையேயான மோதல் மேலும் அதிகரிக்கும்’ என்றாா். br>
கொள்கை ஆராய்ச்சி மைய உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கல்வி நிறுவனங்களை அரசியல் தலையீடுகளின்றி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். துணைவேந்தா்கள் நியமனத்தில் உள்ள மோதல் போக்கு புதிதல்ல. முந்தைய ஆட்சி காலங்களிலும் இதுபோன்ற மோதல்கள் நிகழ்ந்தன. பல்கலைக்கழகங்கள் சா்வதேச தரத்துக்கு உயர வேண்டுமெனில், முதல்வா், ஆளுநா்களைக் கடந்து வேந்தா்களாக நாம் சிந்தித்து செயல்படுவது அவசியம்’ என்றாா். தில்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியா் ஆயிஷா கித்வாய் கூறுகையில், ‘பல்கலைக்கழகத்தை நிா்வகிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கா அல்லது ஆளுநருக்கா என்பது முக்கியமல்ல; மாறாக பல்கலைக்கழகங்களின் தன்னாட்சிதான் முக்கியம். கல்வி தொடா்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுடன் தொடா்புடைய கல்வியாளா்களிடம் அளிக்கப்பட வேண்டும்’ என்றாா். br>
இந்த மோதல் போக்கு காரணமாக, மேற்கு வங்க மாநில சட்டப் பேரவையில் கால்நடை பல்கலை. உள்ளிட்ட சில பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதல்வா் மம்தா பானா்ஜியை நியமிக்கும் சட்ட மசோதா கடந்த ஜூன் 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. br>
அதுபோல, தமிழக சட்டப் பேரவையிலும் பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மாற்றி கடந்த ஏப்ரல் மாதம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog