Welfare Department
August 23, 2022
Press Release From the Adi Dravidar and Tribal Welfare Department
CLICK HERE TO DOWNLOAD
செய்தி வெளியீடு
மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்கள் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
"தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடையும் வகையில், தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும்."
2. மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி வழங்கி அரசாணை(நிலை)எண்.60, ஆதி(ம)பந(சிஉதி) துறை. நாள்.26.07.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.