Breaking

Showing posts with label Counselling. Show all posts
Showing posts with label Counselling. Show all posts

Wednesday, January 31, 2024

January 31, 2024

TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) (Counselling) - PDF



TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) (Counselling) - PDF

POSTS OF ASSISTANT STATISTICAL INVESTIGATOR IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE, COMPUTOR AND STATISTICAL COMPILER IN THE TAMIL NADU PUBLIC HEALTH SUBORDINATE SERVICE INCLUDED IN COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES EXAMINATION. The candidates whose register numbers as mentioned below have beenprovisionally admitted to Physical Certificate Verification (PCV) and Counselling to the posts mentioned above based on the marks and rank position hosted in the Commission’s website on 30.08.2023, for which the written examination was conducted by the Commission on 29.01.2023 FN & AN. The PCV and Counselling for the above mentioned posts will be held o n 06 .0 2 .2024 and 07.02.2024 at the Office of the TNPSC, No.3, TNPSC Road, Chennai - 600 003.

Individual intimation regarding the table and time of PCV and Counselling will be informed through Commission’s website, SMS and e-mail only. No individual intimation will be sent to the candidates by post. The admission to PCV and Counselling is purely provisional subject to verification and acceptance of the original documents in support of all the claims made in the online application in respect of Age, Gender, Communal Category, Persons Studied in Tamil Medium, Educational Qualification, Experience, etc. Only after verification of all the claims with the original certificates, the eligibility of such candidates will become final for admission to Counselling. If he/she does not produce the required certificates or if he/she does not satisfy the eligibility criteria, his/her online application will be rejected and his/her provisional admission to PCV and Counselling will be cancelled.

CLICK HERE TO DOWNLOAD Counselling PDF
January 31, 2024

TNPSC - ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) (TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE) (Counselling)



ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) (TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE) (Counselling)

POSTS OF ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY-ENGLISH) IN TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE AND JUNIOR TECHNICAL ASSISTANT IN TEXTILE DEPARTMENT IN TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE The candidates whose register numbers are mentioned below have been provisionally admitted to Physical Certificate Verification for the posts mentioned above, based on the marks and rank position hosted on the Commission’s website on 28.11.2023, for which the written examination was conducted by the Commission on 05.10.2023 F.N. & A.N. and 06.10.2023 F.N. The Physical Certificate Verification for the said posts will be held on 08.02.2024 F.N. The Physical Certificate Verification will be held at the Office of the TNPSC, No. 3, TNPSC Road, Chennai - 600 003.

Individual intimation regarding the date and time of Physical Certificate Verification will be informed through Commission’s website, SMS and e-mail only. Individual intimation will not be sent to the candidates by post. The candidates with the following register numbers have been admitted to Physical Certificate Verification and his/her admission to Certificate Verification is purely provisional subject to verification and acceptance of the documents in support of the claims made in his/her online application in respect of Age, Gender, Communal Category, Persons Studied in Tamil Medium, Educational Qualification, Experience, etc. Only after verification of the claims with the original certificates, his/her eligibility will become final for admission to further selection process.

If he/she does not produce the required certificates or if he/she does not satisfy the eligibility criteria, his/her online application will be rejected and his/her provisional admission to Physical Certificate Verification will be cancelled

CLICK HERE TO DOWNLOAD (Counselling) PDF

Thursday, January 11, 2024

January 11, 2024

TNPSC - ASSISTANT JAILOR (MEN & WOMEN) (TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE) (Counselling) - PDF



TNPSC - ASSISTANT JAILOR (MEN & WOMEN) (TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE) (Counselling) - PDF

Certificate Verification 18.01.2024


POSTS OF ASSISTANT JAILOR (MEN) AND ASSISTANT JAILOR (WOMEN) IN PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE The candidates whose register numbers are mentioned below have been provisionally admitted to Physical Certificate Verification for the posts mentioned above, based on the marks and rank position hosted on the Commission’s website on 14.09.2023, for which the written examination was conducted by the Commission on 01.07.2023 FN & AN. The Physical Certificate Verification for the said posts will be held on 18.01.2024. The Physical Certificate Verification will be held at the Office of the TNPSC, No.3, TNPSC Road, Chennai - 600 003. Individual intimation regarding the date and time of Physical Certificate Verification will be informed through Commission’s website, SMS and e-mail only. Individual intimation will not be sent to the candidates by post. The candidates with the following register numbers have been admitted to Physical Certificate Verification and his/her admission to Certificate Verification is purely provisional subject to verification and acceptance of the documents in support of the claims made in his/her online application in respect of Age, Gender, Communal Category, Persons Studied in Tamil Medium, Educational Qualification, physical qualification, Experience, etc. Only after verification of the claims with the original certificates, his/her eligibility will become final for admission to further selection process. If he/she does not produce the required certificates or if he/she does not satisfy the eligibility criteria, his/her online application will be rejected and his/her provisional admission to Physical Certificate Verification will be cancelled. TNPSC - ASSISTANT JAILOR (MEN & WOMEN) (TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE)

CLICK HERE

2. Notice of CV CLICK HERE

CLICK HERE TO DOWNLOAD (Counselling) - PDF

Saturday, August 26, 2023

August 26, 2023

இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை



இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இடங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

நான்கு வருட படிப்பு குறித்து மணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையே பெரும்பாலான கல்லூரிகளில் நடந்தன. போதிய கல்வித் தரம் இல்லாததே காரணமாக கூறப்படும் நிலையில் கல்லூரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.பங்கேற்ற 440 கல்லூரிகளில் 208 கல்லூரிகள் 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. இரண்டு சுற்று கவுன்சிலிங்கின் முடிவில் 37 கல்லூரிகளை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை. 176.99 முதல் 142 வரையிலான கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்த 64,286 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். இதில் 35,474 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தொழில் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், பங்கேற்ற கல்லூரிகளில் 41 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நல்ல உள்கட்டமைப்பு, மேம்பட்ட கற்றல் வசதிகள் மற்றும் வலுவான தொழில் தொடர்புகள் ஆகிய வசதிகளை கொண்டுள்ளன.

அதனால் அவ்வாறான கல்லூரிகளில் மட்டும் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன, என்றார்.நடைபெற்ற சுற்றுகளில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

Tuesday, August 15, 2023

August 15, 2023

TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN GROUP-IV SERVICES - COUNSELLING - 27 Pages - PDF

TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN GROUP-IV SERVICES - COUNSELLING - PDF

The candidates whose register numbers mentioned below have been provisionally admitted to Physical Certificate Verification and Counselling to the post of Typist based on the marks and rank position hosted in the Commission’s website on 24.03.2023, for which the written examination was conducted by the Commission on 24.07.2022 FN. The Physical Certificate Verification and Counselling for the said post will be held from 21.08.2023 FN/AN to 11.09.2023 FN/AN (except Sundays, Onam (29.08.2023) and Krishna Jayanthi (06.09.2023)). The Physical Certificate Verification and Counselling will be held at the Office of the TNPSC, No.3, TNPSC Road, Chennai - 600 003.

Intimation regarding the date and time of Physical Certificate Verification and Counselling will be informed through Commission’s website, SMS and email only. Individual intimation will not be sent to the candidates by post.

The candidates with the following register numbers have been admitted to Physical Certificate Verification and Counselling and his/her admission to Certificate Verification and Counselling is purely provisional subject to verification and acceptance of the documents in support of the claims made in his/her online application in respect of Age, Gender, Communal Category, Persons Studied in Tamil Medium, Educational Qualification, Experience, etc,. Only after verification of the claims with the original certificates, his/her eligibility will become final for admission to Counselling. If he/she does not produce the required certificates or if he/she does not satisfy the eligibility criteria, his/her online application will be rejected and his/her provisional admission to Counselling will be cancelled

CLICK HERE TO DOWNLOAD COUNSELLING - 27 Pages - PDF

Monday, July 31, 2023

July 31, 2023

TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (Counselling)



TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (Counselling)

Counselling Schedule

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV

GROUP-IV SERVICES

DOE : 24/07/2022 FN

COUNSELLING (I PHASE)



COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (NOTIFICATION NO. 07/2022)

1. Certificate Verification / Counselling Schedule

2. Notice of CV/Counselling (JA/VAO/FA/BC/SK)

3. Post-wise vacancies at the end of 9th day Counselling

4. Dept/Unit-wise vacancies at the end of 9th day Counselling

Important Note:-

The candidate summoned for counselling is not assured of selection and he / she will be admitted for counselling subject to availability of vacancies in his / her category when he / she reaches his / her turn as per the rank position.

Hence Kindly refer daily updates regarding Community wise/Post wise vacancies available in the above link during counselling days. After confirming the vacancies, candidates are requested to come for Counselling on the communicated date.

CLICK HERE (GROUP-IV SERVICES) (Counselling)

Saturday, April 15, 2023

April 15, 2023

Transfer counselling for teachers to start in May

Transfer counselling for teachers to start in May

Coimbatore: The school education department has decided to conduct transfer and promotion counselling for teachers soon. According to official sources, now teachers are busy in examination duty, including the board examinations and it will be completed by the end of this month. "After that, top officers of the department have decided to invite applications from teachers to take part in the counselling process and a seniority panel will be prepared in the second week of May. After completing the initial works, officers will announce the dates for the teachers. It is expected the counselling will be conducted by the end of May or the first week of June," sources added ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே மாதம் தொடங்கும்

கோவை: ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் விரைவில் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதிகாரபூர்வ வட்டாரங்களின்படி, இப்போது ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளில் மும்முரமாக உள்ளனர், வாரியத் தேர்வுகள் உட்பட, அது இந்த மாத இறுதிக்குள் முடிவடையும். அதன்பின், கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க, துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்து, மே, இரண்டாவது வாரத்தில், சீனியாரிட்டி பேனல் தயாரிக்கப்படும். முதற்கட்ட பணிகள் முடிந்த பின், அதிகாரிகள், அதற்கான தேதிகளை அறிவிப்பர். ஆசிரியர்கள், கவுன்சிலிங் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, March 07, 2023

March 07, 2023

TNPSC - FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN (TAMIL NADU SURVEY AND LAND RECORDS SUBORDINATE SERVICE & TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE ) (Counselling)

TNPSC - FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN (TAMIL NADU SURVEY AND LAND RECORDS SUBORDINATE SERVICE & TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE ) (Counselling)

CLICK HERE TO READ OFFICIAL NEWS

Saturday, August 27, 2022

August 27, 2022

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்போர் அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களும்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் க. பொன்முடி பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் நாள்கள், உள் ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் யார் சேர முடியும் என்பது குறித்து தெளிவான விவரங்களை அளித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது, செப்டம்பர் 10ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.

இந்த பொறியியல் கலந்தாய்வில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடங்கள்ஒதுக்கப்படும். அதாவது, பொறியியல் கலந்தாய்வில் ஒரு சதவீதம் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும். அதில் உள் ஒதுக்கீடாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

சமூக நீதியின்அடிப்படையில் எல்லா பிரிவுகளில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில், அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எட்டாம் வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மேலும், இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டமும் இந்த கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்யப்படுகிறது.

நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு

வரும் செப்டம்பர் 10 முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி 12ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூன்று நாள்கள் நடைபெறும். பிறகு, அக்டோபர் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 29ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரை 4வது கட்ட பொதுப் பிரிவு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.

நவம்பர் 10 முதல் 20ஆம் தேதி வரை எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்தார் அமைச்சர் க. பொன்முடி.

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு எப்போது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
August 27, 2022

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது? பொன்முடி அறிவித்தார்

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக. 25ஆம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலந்தாய்வு ஏன் ஒத்திவைக்கப்பட்டது?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக. 25ஆம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் ஒத்திவைக்கப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், தமிழகத்தில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வராமல் பொதுக் கலந்தாய்வை நடத்தும்போது, மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவம், பொறியியல் படிப்புகள் என இரண்டு கலந்தாய்வுகளுக்கும் மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். மேலும், பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவப் படிப்பை தேர்வு செய்யும் போது, பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் உருவாகும்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வர காலதாமதம் ஆனதால், முன்பு பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போனது. இப்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இணையதளம் வழியாக கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்) கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.

நீட் முடிவு எப்போது?

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 497 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் https://neet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 25, 2022

August 25, 2022

B.E 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவக்கம்: செயலாளர் தகவல்

பிஇ நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது என சேர்க்கை செயலாளர் பழனி தெரிவித்தார். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பி.இ மற்றும் பி.டெக் நேரடி இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான கவுன்சலிங்கை ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் 24ம் தேதி துவங்கி கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவங்கி செப்.12ம் தேதி வரை நடக்கவுள்ளது என மாணவர் சேர்க்கை செயலாளரும், கல்லூரி முதல்வருமான முனைவர் பழனி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி பி.இ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு 65 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு 24,062 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியுள்ள 20,574 மாணவர்களுக்கு தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை, அவர்களுக்கான இணையதள கவுன்சலிங் விவரங்கள் www.tnlea.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு கலந்தாய்வு வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்கிறது. பொது கலந்தாய்வு செப்.11ம் தேதியும், பி.எஸ்சி மாணவர்களுக்கு 12ம் தேதியும் நடக்கிறது. விபரங்களுக்கு 94436 61901, 98431 53330 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, August 24, 2022

August 24, 2022

நாளை நடைபெறவிருந்த பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு.

"நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை (ஆக.25) நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஆக.25) முதல் தொடங்குவதாக இருந்தது. நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும். இந்த கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பொருத்திருக்கிற காரணத்தால், இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன.

முதலில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது சிபிஎஸ்இ முடிவுகள் மிகவும் தாமதமாக வந்த காரணத்தால், ஏற்கெனவே கொடுத்திருந்த கால அவகாசத்திற்கு பின் 5 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தோம்.

தற்போதும் நீட் தேர்வு முடிவுகள் முதலில் வரும் என்று நினைத்தோம். 21-ம் தேதி முடிவுகள் வரும் என்று கூறினார்கள், ஆனால் இன்னும் வெளியிடமால் காலம் தாழ்த்தப்படுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானால், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பலர் அங்கு சென்றுவிடுவார்கள், அதனால்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டு பல்வேறு இடங்கள் காலியாக இருந்தன" என்று அவர் கூறினார்.

முன்னதாக, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆக.20-ம் தேதியன்று நடந்தது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.25-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Monday, August 22, 2022

August 22, 2022

இன்ஜினியரிங் கவுன்சிலிங்: அரசு பள்ளி மாணவர் 57 பேருக்கு 'சீட்'

-இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கின் முதல் நாளில், அரசு பள்ளி மாணவர்கள், ௫7 பேர் இடங்கள் பெற்று உள்ளனர்.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 443 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 1.58 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நேற்று முன்தினம் துவங்கியது. முதற்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடந்தது.இதில், 130 மாணவர்கள் பங்கேற்று, ஆன்லைனில் விருப்ப பதிவு செய்தனர். அவர்களின் விருப்பப்படி, நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஆன்லைனில் உத்தரவு வழங்கப்பட்டன.

இதன்படி, மாற்றுத் திறனாளிகள், 21; விளையாட்டு பிரிவில், 34 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில், 2 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர்.இதையடுத்து, சிறப்பு பிரிவில் உள்ள அரசு பள்ளி ஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு, 'சாய்ஸ் பில்லிங்' வசதி நேற்று துவங்கியது. இன்று இரவு, 7:00 மணிக்குள் தங்களுக்கான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கான பதிவு முடிகிறது.
இதில், 2,426 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று பதிவு செய்வோருக்கு, நாளை காலை, 8:00 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அதை நாளை இரவு, 7:00 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.உறுதி செய்தவர்களுக்கு, நாளை மறுநாள் காலையில், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது. இதையடுத்து, 25ம் தேதி பொது கவுன்சிலிங்கின் முதல் சுற்று துவங்க உள்ளது. கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்களுக்கு, 1800- 425-0110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
August 22, 2022

TNEA கவுன்சலிங்; தமிழகத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகளின் கட் ஆஃப் இதுதான்!

TNEA Engineering counseling cut off for top colleges in Tamilnadu: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், டாப் மோஸ்ட் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று தேதிகள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்படும்.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சென்னை மற்றும் கோவையில் உள்ள டாப் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.

கடந்த ஆண்டுகளில் கல்லூரியின் தரம், மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அளவில் முதலிடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம் முதல் பல்வேறு டாப் பொறியியல் கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் ஒவ்வொரு கல்லூரிக்கும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், ஒவ்வொரு இனப்பிரிவுக்கும் தனித் தனியாக கட் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது.

கட் ஆஃப் 200க்கு 200 வைத்திருக்கும் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு உள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்குத் தான் அதிகமான கட் ஆஃப் உள்ளது. மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் உள்ள கல்லூரிகளிலும், அந்த படிப்புக்கே கட் ஆஃப் அதிகமாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஐ.டி மற்றும் இ.சி.இ, சிவில் போன்ற படிப்புகள் உள்ளன. அதேநேரம் தமிழ் வழி கல்விக்கு மாணவர்களிடையே ஆர்வம் குறைவாக இருக்கிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு 20% இடஓதுக்கீடு வழங்கியுள்ள நிலையிலும், அண்ணா பல்கலைக்கழக வளாகங்களிலே அதற்கான ஆர்வம் குறைவாக இருந்து வருகிறது.

Total Pageviews

Search This Blog