Breaking

Showing posts with label TNPSC Exams. Show all posts
Showing posts with label TNPSC Exams. Show all posts

Friday, March 14, 2025

Friday, December 01, 2023

December 01, 2023

டிசம்பர் 9 & 10ம் தேதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் TNPSC வெளியீடு

டிசம்பர் 9 & 10ம் தேதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் TNPSC வெளியீடு

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான எழுத்து தேர்வு (கணினி வழித் தேர்வு) வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வௌியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில், ஆராய்ச்சி உதவியாளர், மேலாளர் (கால்நடை), தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான எழுத்து தேர்வு (கணினி வழித் தேர்வு) வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Sunday, November 26, 2023

November 26, 2023

TNPSC - வருடாந்திர கால அட்டவணை: டிச.2-வது வாரத்தில் வெளியீடு. TNPSC - Annual Time Table



TNPSC - வருடாந்திர கால அட்டவணை: டிச.2-வது வாரத்தில் வெளியீடு.

அடுத்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டித் தேர்வுகளுக்கான டிஎன்பிஎஸ்சியின் வருடாந்திர காலஅட்டவணை டிசம்பர் 2-வது வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசுத் துறைகளில் நிரப்பப்பட உள்ள காலிப் பணியிடங்கள், அதற்கான போட்டித் தேர்வு குறித்த விவரங்கள் அடங்கிய வருடாந்திர கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தேர்வர்கள் முறையாக திட்டமிட்டு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக ஏதுவாக இந்த அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு, காலிப் பணியிடங்கள் அடங்கிய டிஎன்பிஎஸ்சி-யின் வருடாந்திர கால அட்டவணை டிசம்பர் 2-வது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பில் 30 விதமான போட்டித் தேர்வுகள் மூலம் சுமார் 15 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான விவரங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல், எதிர்பார்ப்பில் உள்ள தேர்வர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது. முன்னதாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1, குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, November 25, 2023

November 25, 2023

TNPSC- மூலம் 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் - விரைவில் வெளியாகிறது...



TNPSC- மூலம் 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் - விரைவில் வெளியாகிறது...Notifications for 15K Vacancies by TNPSC - Coming Soon...

போட்டி தேர்வு அட்டவனை வெளியீடு

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு 2024ம் ஆண்டு அட்டவணை டிசம்பர் 15ல் வெளியாகிறது

15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

TNPSC போட்டி தேர்வு அட்டவணை வெளியீடு.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு 2024ம் ஆண்டு அட்டவணை டிசம்பர் 15ல் வெளியாகிறது

15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்

30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

Thursday, November 16, 2023

November 16, 2023

TNPSC குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி: அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அறிவிப்பு



டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி: அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக் கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அண்ணா நிர்வாகப் பணியாளர்கல்லூரி இயக்குநர் அறிவித்துள் ளார்.இதுகுறித்து அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான தகுதித் தேர்வை விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வுகளில் கிராமப்பகுதி மாணவர்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற வசதியற்ற மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறும் வகையில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ஆன்லைன் பயிற்சிவகுப்புகள் நடத்த உத்தேசிக் கப்பட்டுள்ளது.

மேலும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண் டும் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. விரும்புபவர்கள் தங்களிட முள்ள திறன் கைபேசி (ஸ்மார்ட் போன்) வாயிலாக ஆன்லைன் மூலம் இலவசமாகப் பாடங்களைக் கற்று தகுதித் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி நடத்தும்குரூப் 2, 2ஏ மற்றும் 1 பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி சார்பில் ஆன்லைன் வகுப்புகளாக நடைபெற்று வருகின்றன. இதைப் பயன்படுத்தி அதிகளவிலான கிராமப்புற மற்றும் எளிய மாண வர்கள் பயனடைந்துள்ளனர்.

அந்த வகையில் குரூப்-4 பயிற்சிவகுப்புகள், 'AIM TN' வலைதள பக்கத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது.சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டும், பாடத் திட்டங்களை தொகுதி வாரியாக வடிவமைத்தும், நெறிப்படுத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் நடத்தப்படும். ஒவ்வொரு சனிக் கிழமையன்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டு மாதிரி தேர்வு நடத்தி அதை மதிப்பீடு செய்து முடிவுகள் வெளியிடப்படும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை களில் நேரலை மூலம் வினாத்தாள் குறித்த விவாதம் நடைபெறும். இதன்மூலம் மாணவர்கள் தவறுகளைக் களையவும் அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ளவும் இயலும் என்று தெரிவித்துள்ளார்.

Wednesday, November 08, 2023

November 08, 2023

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு 'Jaihind' at the end of the paper in TNPSC examination - Maduraiklai High Court verdict

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ என எழுதியதால் விடைத்தாள் செல்லாது என்று கூறியது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

2014ம் ஆண்டு நடந்த TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வில், இயற்கை வளங்களை காப்பதற்கான முக்கியத்துவம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முடிவில், 'ஜெய் ஹிந்த்.. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்' என எழுதியதற்காக, திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்பவரது விடைத்தாள் செல்லுபடியாகாது என கூறியது ஏற்புடையதல்ல - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு.


விடைத்தாளை மீண்டும் திருத்தி, அவரது கட் ஆஃப் குரூப் 2 பணிக்கு தகுதியுடையதா என பரிசீலிக்கவும் TNPSC-க்கு உத்தரவு!

இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதும்போது, ஒருவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, தேச பக்தியை உணர்வது இயல்புதான்.

ஜெய்ஹிந்த்' என்றால் இந்தியாவுக்கு வெற்றி என்று பொருள். அவ்வாறு எழுதியதற்காகவே விடைத்தாள் செல்லாது என்பது ஏற்கத்தக்கது அல்ல - நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

Tuesday, November 07, 2023

November 07, 2023

TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? அமைச்சர் விளக்கம்



TNPSC குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசு தேர்வாணைய செயல்திறனைவிட மாநில தேர்வாணைய செயல்திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை எனக் கூறிய அவர், மதிப்பீட்டு பணிகள் 80%க்கு மேல் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் தாமதம் என செய்தி வெளியானது. இந்நிலையில், பத்திரிகைகளில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய அரசு பணியாளர் குடிமைப்பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 5 மாதம். ஒன்றிய அரசு தேர்வாணைய செயல்திறனைவிட மாநில தேர்வாணைய செயல்திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும். மதிப்பீட்டு பணிகள் செவ்வனே நடைபெற்று 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 8,000 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணை வழங்குவார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 13,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் முதலமைச்சரால் குரூப் 4 பணியில் தேர்வு பெற்ற 10,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023-24ம் ஆண்டில் மேலும் சுமார் 10,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
குரூப் 2, 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தேர்வு பிப்.25-ல் நடைபெற்றது. இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. வேறு சில தேர்வுகளின் எழுத்துத் தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலை இருந்ததால் சற்றே தாமதமானது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2-வது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது. எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று குறிப்பிட்டார்.

Thursday, April 06, 2023

April 06, 2023

TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?

TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? How many groups are there in TNPSC? do you know

பெற்றோர்கள், இளைஞர்கள், நண்பர்கள் இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்குவாருங்கள்.

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா?

*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு?
How Many Groups in TNPSC?
குரூப் – 1,
குரூப் – 2,
குரூப் – 3,
குரூப் – 4,
குரூப் – 5,
குரூப் – 6,
குரூப் – 7,
குரூப் – 8
*குரூப் – 1 சேவைகள் (Group-I)
1)துணை கலெக்டர் (Deputy Collector)
2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police)
3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை
(District Registrar, Registration Department)
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து)
4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector)
5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)
6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் (Div. Officer in Fire and Rescue Services)
7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner)
8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies) *குரூப் – 1A சேவைகள் (Group-I A)
1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)
*குரூப் – 1B சேவைகள் (Group-I B)
1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)
*குரூப் – 1C சேவைகள் (Group-I C)
1)மாவட்ட கல்வி அலுவலர் DEO (District Educational Officer)
2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2
*குரூப் – 2 சேவைகள் (நேர்முகத்தேர்வு பதவிகள்)
(Group-II)
1)துணை வணிக வரி அதிகாரி
2)நகராட்சி ஆணையர், தரம் -2
3)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்)
4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்)
5)துணை பதிவாளர், தரம் -2
6)தொழிலாளர் உதவி ஆய்வாளர்
7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை)
8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை)

9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை)
10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு
உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர்
11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை
12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர்,
13)சிறைத் துறை
தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர்
14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு
15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்
16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை,
17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை
19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிடர் மற்றும் .... பழங்குடியினர் நலத்துறை தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர்
இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை

உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை
மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை
உதவி ஜெயிலர், சிறைத்துறை.
வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில்
நிர்வாக அதிகாரி,
தரம் -2 டி.வி.ஐ.சியில்
சிறப்பு உதவியாளர்
கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில்
சிறப்பு கிளை உதவியாளர்.
பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு தொழிலாளர் உதவி ஆய்வாளர்
தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில். *குரூப் – 2A சேவைகள் (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A)
கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர்
ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில்
உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர) இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை
தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை)
தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை)
தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு
தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம்
தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை
உதவியாளர் பல்வேறு துறைகள்
செயலகத் துறையில் உதவி (நிதித்துறை)
தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர்
தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம்
திட்டமிடல் இளைய உதவியாளர்
வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை)
சட்டத்துறையில் உதவியாளர்
தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3

*குரூப் – 3 சேவைகள்
(Group-III)
தீயணைப்பு நிலைய அதிகாரி
*குரூப் – 3A சேவைகள்
(Group-III A)
கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர்
தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2
*குரூப் – 4 சேவைகள்

(Group-IV)
ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத)
பில் கலெக்டர்
தட்டச்சு செய்பவர்
ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3
கள ஆய்வாளர் 6. வரைவாளர்
*குரூப் – 5A சேவைகள்
(Group-V A) செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
*குரூப் – 6 சேவைகள்
(Group-VI)
வன பயிற்சியாளர்
*குரூப் – 7A சேவைகள்
(Group-VII A)
நிர்வாக அதிகாரி, தரம் -1
*குரூப் – 7B சேவைகள் (Group-VII B)
நிர்வாக அதிகாரி, தரம் – 3
*குரூப் – 8 சேவைகள் (Group-VIII)
நிர்வாக அதிகாரி, தரம் – 4
*இத்தனை தேர்வுகள் பற்றிய நம்மில் பலருக்கு முறையான வழிகாட்டல் இல்லாததால் நம்மில் பலர் TNPSC தேர்வுகளைப் பற்றிய தவறான கருத்துக்களை ஒரு சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்.
*இது போட்டித் தேர்வுகளில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க செய்து வருகின்றனர். ஆகையால் போட்டித்தேர்வர்கள் தவறான தகவல்களை நம்பாமல் அனைவரும் பயின்று விரைவில் அரசு பணியில் அமர வாழ்த்துக்கள்.

Monday, March 27, 2023

March 27, 2023

TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS - DECEMBER 2022 - LIST OF REGISTER NUMBERS OF ADMITTED CANDIDATES FOR THE VIVA VOCE (TEST CODE NO.019) - PDF

DEPARTMENTAL EXAMINATIONS - DECEMBER 2022 - LIST OF REGISTER NUMBERS OF ADMITTED CANDIDATES FOR THE VIVA VOCE (TEST CODE NO.019) - PDF

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

DEPARTMENTAL EXAMINATIONS - DECEMBER 2022

SECOND CLASS LANG.TEST PART - “ A” - WRITTEN EXAMINATION

LIST OF REGISTER NUMBERS OF ADMITTED CANDIDATES FOR THE VIVA VOCE (TEST CODE NO.019)

DATE OF WRITTEN EXAMINATION : 17.12.2022 FN CLICK HERE TO DOWNLOAD PDF
March 27, 2023

ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி? பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீண் - அண்ணாமலை குற்றச்சாட்டு

ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி? பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீண் - அண்ணாமலை குற்றச்சாட்டு 2000 pass from one coaching center? Hard work of thousands of youth in vain - Annamalai allegation

தென்காசியைச் சேர்ந்த அந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான கிளைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் பயின்ற மாணவர்கள் 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திலிருந்து, அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தங்கள் மையத்திலிருந்து 2000 பேர் தேர்வானது உண்மைதான் என்றும், தேர்வானவர்களின் பட்டியலை அளிக்க தயாராக உள்ளதாகவும், அந்த பயிற்சி மையத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது.

அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
March 27, 2023

நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு? - விசாரணை நடத்த வலியுறுத்தல்



நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு நடந்ததா என விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் - 700 people who wrote the land surveyor exam in one center, the pass fraud? - Insist on investigation

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாடு அரசு துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

வாய்ப்பில்லாத இந்த சாதனை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.

அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அதுகுறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Total Pageviews

Search This Blog