Breaking

Showing posts with label Smart Classrooms. Show all posts
Showing posts with label Smart Classrooms. Show all posts

Wednesday, January 17, 2024

January 17, 2024

தொடக்கப் பள்ளிகளில் 22,418 ஸ்மார்ட் வகுப்பறைகள்

தொடக்கப் பள்ளிகளில் 22,418 ஸ்மார்ட் வகுப்பறைகள்



தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஹைடெக் கணினி ஆய்வகங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ள 22,418 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வரப்பட உள்ளன. கரும்பலகை இல்லாமல் அகன்ற டிஜிட்டல் திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். இதுதவிர 6,992 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக கோரப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த கணினி ஆய்வகத்தை மேற்பார்வையிடுவதற்கான பணியாளர்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒருவர் வீதம் 6,992 பேர் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இரும்பு கேட் அமைக்கப்படும். மேலும் இடைநிலை, பட்டதாரிகளுக்கு டேப்லெட்(கையடக்கக் கணினி) வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினர்.

Thursday, January 11, 2024

January 11, 2024

ஸ்மார்ட் ஆக மாற இருக்கும் தொடக்கக் கல்வித்துறை

ஸ்மார்ட் ஆக மாற இருக்கும் தொடக்கக் கல்வித்துறை Primary education to go smart

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஹைடெக் கணினி ஆய்வகங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ள 22,418 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வரப்பட உள்ளன. கரும்பலகை இல்லாமல் அகன்ற டிஜிட்டல் திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். இதுதவிர 6,992 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.


இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக கோரப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த கணினி ஆய்வகத்தை மேற்பார்வையிடுவதற்கான பணியாளர்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒருவர் வீதம் 6,992 பேர் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இரும்பு கேட் அமைக்கப்படும். மேலும் இடைநிலை, பட்டதாரிகளுக்கு டேப்லெட்(கையடக்கக் கணினி) வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினர்.

Friday, December 01, 2023

December 01, 2023

2000 ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை கையாள சிறப்பு வகுப்பு

2000 ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை கையாள சிறப்பு வகுப்பு

சென்னை மாநகராட்சியில் தரம் உயர்த்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய 15 பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மாநகராட்சி பள்ளிகளில் 98 ஆயிரத்து 633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3 ஆயிரத்து 13 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்கும் முறை, நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக,பிரான்ஸ் மேம்பாட்டு முகமை (AFD) நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன வசதியுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 28 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.95 கோடியே 25 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரான்ஸ் மேம்பாட்டு முகமை சார்பில் இத்திட்டத்தின் கீழ் ரூ.76 கோடியே 20 லட்சம் கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டு, 28 பள்ளிகளில் நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு கட்டமைப்புகள், கழிப்பறைகள் `ஸ்டெம்’ ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்த சிறப்பு வகுப்புகள், பணியாளர்களுக்கென தனியாக நவீன அறை என தலைமையாசிரியர் முதல் ஆசிரியர்கள் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவிக்கையில்: சென்னை பள்ளிகளை நவீனப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுப்பட்டுள்ளது. சிட்டீஸ் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் நிச்சயம் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும், மாணவர்கள் பள்ளியில் நுழையும் போதே ஆரோக்கியமான மனநிலையை உணர்வார்கள், பள்ளி படிக்கட்டுகளை வண்ண வண்ண நிறங்களால் மாற்றியுள்ளோம். மாணவர்களின் பாதுக்காப்பிற்கு சிசிடிவி கேமரா, மால்கள்,விமான நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் போன்று பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளால் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை (AFD), கூடுதலாக ரூ.36 கோடி மாநகராட்சிக்கு வழங்க இருக்கிறது. இதைக் கொண்டு மேலும் 11 பள்ளிகளை நவீன வசதிகளுடன் கட்டமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் 4 வளாகங்கள் கூடிய 7 பள்ளிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், தற்போது 11 வளாகங்கள் கூடிய 15 பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்

* 28 பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட வகுப்பறைகளுக்கு LCD-LED இன்டராக்டிவ் பேனல்கள், ஒருங்கிணைந்த கற்றல்-கற்றல், மின் வளங்களுக்கு மாறும் அணுகல்

* அனைத்து 28 பள்ளிகளும் வைஃபை வளாகங்களாக நிறுவப்படும்

* GCC பள்ளிகள் மற்றும் GoTN ஆல் இயக்கப்படும் பிற பள்ளிகள் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் வள களஞ்சிய மேலாண்மை அமைப்பு மற்றும் பள்ளி மேலாண்மை அமைப்பு

* அனைத்து திட்ட வளாகங்களிலும் STEM ஆய்வகம் மற்றும் மொழி ஆய்வகங்களை நிறுவுதல்

* மொத்த பட்ஜெட்: ரூ.12 கோடி. விளையாட்டு மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளின் முக்கிய அம்சங்கள்

* சென்னை பள்ளிகளில் (ரூ.0.34 கோடி) சாரணர், உபகரணங்கள், பயணம் மற்றும் உணவு உட்பட 30 திறமையான மாணவர்களுக்கான சிறப்பு கிரிக்கெட் பயிற்சித் திட்டம்

* உபகரணங்கள், பயணம் மற்றும் உணவு உட்பட 3 சென்னை பள்ளிகளில் (ரூ.0.08 கோடி) 60 திறமையான மாணவர்களுக்கான சிறப்பு கால்பந்து பயிற்சித் திட்டம்மாநகராட்சி பள்ளிகள் முழுவதும் விளையாட்டுக் கருவிகளை வழங்குதல்.கூடுதல் விளையாட்டு உள்கட் டமைப்பு (வலைகள், விளக்குகள், பலகைகள் போன்றவை

* மொத்த பட்ஜெட்: ரூ.1 கோடி.

ஆசிரியர் மேம்பாடு மற்றும் கல்வியியல் கண்டுபிடிப்பு முக்கிய அம்சங்கள்

* 2000 ஆசிரியர்களுக்கு தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி (டிஜிட்டல் கருவிகளைக் கையாளுதல், கணினி, ஸ்மார்ட் வகுப்பு போன்றவை)

* 600 AEOக்கள், HMகள், AHMகள், மூத்தவர்களுக்கான பள்ளி தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம்

* அகாடமி ஆஃப் STEM எக்ஸலன்ஸ்

* மொத்த பட்ஜெட்: ரூ.9 கோடி.

சிவில் உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்

* 28 சென்னைப் பள்ளிகள் உள்கட்டமைப்புச் சீரமைப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன

* வகுப்பறைகள், கழிப்பறைகள், சமையல் & உணவு விடுதிகள், விளையாட்டுப் பகுதி போன்றவற்றைச் சீரமைத்தல்/ புதுப்பித்தல்.

* புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் போன்றவற்றைக் கட்டுதல்.

* தலைமையாசிரியர் அறைகள் மற்றும் பணியாளர் அறைகளின் புதிய தோற்றம் மற்றும் முகத்தை உயர்த்துதல்

* குழந்தை-உளவியலைக் கருத்தில் கொண்டு வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியம் வரைதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கற்றல் மற்றும் பொது உணர்வைத் தூண்டுதல்.

* மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கூடுதல் பாடத்திட்ட உள்கட்டமைப்பு

* மொத்த பட்ஜெட்: ரூ.69 கோடி.

Wednesday, April 19, 2023

April 19, 2023

Smart Classrooms in Anganwadi Centers - அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் கீதாஜீவன்



அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் கீதாஜீவன் -

Smart Classrooms in Anganwadi Centers - Minister Geethajeevan

தமிழ்நாட்டில் புதிதாக 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் வேல்முருகன் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Total Pageviews

Search This Blog