Breaking

Showing posts with label autonomous. Show all posts
Showing posts with label autonomous. Show all posts

Friday, August 11, 2023

August 11, 2023

தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம் – அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் – அரசு தெளிவுரை!



தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம் – அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் – அரசு தெளிவுரை!

Press News

CLICK HERE TO DOWNLOAD PDF

Sunday, October 09, 2022

October 09, 2022

கல்லூரிகளுக்கு மறுக்கப்பட்ட தன்னாட்சி அந்தஸ்து:அண்ணா பல்கலை. உத்தரவு ரத்து

கல்லூரிகளுக்கு மறுக்கப்பட்ட தன்னாட்சி அந்தஸ்து:அண்ணா பல்கலை. உத்தரவு ரத்து

தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி, ஈரோட்டைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரிகள், தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் விண்ணப்பித்தன. இந்த இரு விண்ணப்பங்களையும் பரிசீலித்த அண்ணா பல்கலைக்கழகம், தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான பல்கலைக்கழகத்தின் விதிகளைப் பூா்த்தி செய்யவில்லை எனக் கூறி, தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை எதிா்த்து இரு கல்லூரிகள் சாா்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்தாா். அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என்று உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகவும், தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் கல்லூரிகள் சாா்பில் வாதிடப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையில்தான் அண்ணா பல்கலைக்கழக விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன எனவும், தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழகம் எந்த விதிகளையும் வகுக்கவில்லை எனவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், தன்னாட்சி அந்தஸ்து கோரிய விண்ணப்பங்களை ஏற்றோ அல்லது மறுத்தோ அண்ணா பல்கலைக்கழகம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும், பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில்தான் தன்னாட்சி அந்தஸ்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரை கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடா்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அந்த விதிகளை மட்டுமே, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான அடிப்படையாகக் கருத முடியாது எனக் கூறி, இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை நிராகரித்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். அதேவேளையில், தன்னாட்சி அந்தஸ்து கோரிய இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை சுதந்திரமாக பரிசீலித்து, நேரில் ஆய்வு செய்து, 4 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

இதேபோல, தன்னாட்சி அந்தஸ்து கோரி விண்ணப்பித்த 30 நாள்களில் எந்த உத்தரவும் அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பிக்காததால், தங்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிடக் கோரி கரூரில் உள்ள வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், ஒரு வாரத்தில் விண்ணப்பம் குறித்த அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்டாா்.

அந்த அறிக்கையைப் பெற்ற 4 வாரங்களில், தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடா்பாக தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, 3 வழக்குகளையும் முடித்து வைத்தாா்

Total Pageviews

Search This Blog