Breaking

Showing posts with label SCIENCE FACT. Show all posts
Showing posts with label SCIENCE FACT. Show all posts

Friday, November 19, 2021

November 19, 2021

580 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட சந்திர கிரகணம்; இன்று தோன்றுகிறது

கடந்த 580 ஆண்டுகளில் தோன்றக்கூடிய உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (நவ.,19) வானில் தோன்றுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒருசில பகுதிகளில் மட்டும் இதை காணலாம் எனக் கூறப்படுகிறது.

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. பொதுவாக ஆண்டுக்கு சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணமும், நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணமும் உருவாகின்றன. அந்த வகையில், இன்று உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் தோன்றுகிறது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பிறகு 6 மணிநேரத்திற்கு மேலாக தோன்றும் இந்த நீண்ட சந்திர கிரகணம், அடுத்ததாக 2669ம் ஆண்டில் தான் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11:32 மணி முதல் மாலை 05:34 மணிவரை தோன்றும் இந்த சந்திர கிரகணம், வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் சந்திர கிரகணத்தை மக்கள் பார்க்கலாம். இந்தியாவை பொறுத்தவரையில் அருணாச்சல் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சிறிது நேரம் மட்டும் காண முடியும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தெரியாது.

Saturday, December 19, 2020

December 19, 2020

இரண்டு கோள்கள் ஒன்றாகும் அதிசயம் ; டிச.,21ல் காணலாம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சூரியனை பூமி உட்பட அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன. டிச., 21ல் வியாழன், சனி கோள்கள் அருகருகே வரும் வானியல் நிகழ்வு நடக்கிறது. இரண்டுக்குமான இடைவெளி 0.1 டிகிரி கோணம் மட்டுமே. இது பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரே நேர்கோட்டில் தெரியும். இரண்டும் சேர்ந்து ஒரே கோள் போல தெரியும்.
ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை "வியாழன் - சனி சேர்க்கை' வந்தாலும், இதே போன்ற நெருக்கம் 1623க்கு பின் தற்போது தான் நடக்கிறது.
டிச., 21ல் சனியை விட, வியாழன் 12 மடங்கு பிரகாசமாக தெரியும்.
எப்போது, எப்படி: டிச., 21 மாலை சூரிய மறைவுக்குப்பின் அடுத்த சுமார் 45 நிமிடத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தெரியும். வெறும் கண்களால் பார்க்கலாம். வியாழன்:


* சூரியனில் இருந்து 5வது கோள்.


* சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கான காலம் - 11.9 ஆண்டுகள்.


* தன்னைத்தானே சுற்றுவதற்கு - 9 மணி, 55 நிமிடம்


* பூமியில் இருந்து து?ரம் - 88.5 கோடி கி.மீ.


* சூரிய குடும்பத்தின் பெரிய கோள்.


* துணைக்கோள்கள் - 79
சனி:

* சூரியனில் இருந்து 6வது கோள்.

* சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கான காலம் - 29.5 ஆண்டுகள்.

* தன்னைத்தானே சுற்றுவதற்கு - 10 மணி, 33 நிமிடம்

* பூமியில் இருந்து து?ரம் - 160 கோடி கி.மீ.

* சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள்.

* * துணைக்கோள்கள் - 82 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Wednesday, June 17, 2020

June 17, 2020

அறிவியல் உண்மை - வைரஸ்களை முதலில் கண்டறிந்தவர் யார்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வைரஸ் எனப்படுவது ஒரு சாதாரண உயிரியைப் போல செயல்படுவது அல்ல. அது தனித்து இருக்கும் பொழுது உயிரில்லாததைப் போலவும் ஒரு செல்லினுள்ளோ அல்லது பாக்டீரியாவினுள்ளோ நுழைந்து செயல்படும்போது உயிருள்ளதைப் போலவும் இயங்கும். ஆகையால் வைரஸைத் தனித்து கண்டறிவது கடினமான செயல் 1798 ல் எட்வர்டு ஜென்னர் என்ற ஆங்கில மருத்துவ வல்லுநர் சின்னம்மை நோயால் வாடிய சிறுவனைச் சோதித்து அம்மை குத்தும் முறையை கண்டறிந்தார். 1885 ல் லூயி பாஸ்டர் ரேபிஸ் நோய்க்கு (வெறி நாய்க்கடிக்கு) வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். 1892ல் ஐவான் வோஸ்கி என்ற தாவரவியல் விஞ்ஞானி புகையிலை மொலைக் வைரஸ் (TMV) கண்டறிந்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Saturday, May 16, 2020

May 16, 2020

அறிவியல் உண்மை - அம்மைத் தழும்புகள் மாறக் கூடியதா? இல்லையெனில் ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அம்மைத் தழும்புகள் மட்டுமல்ல , அடிபட்ட வெட்டுகாயத் தழும்புகள் , அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் போன்ற எந்த தழும்புகளும் மாறக்கூடியது அல்ல. அம்மை கொப்புளம் வந்த பகுதிகளில் தோல் சிதைவடையும். அந்த அம்மை புண் ஆறும்போது அதிகளவு நார் புரதப் பொருள்கள் கொண்ட தழும்பாக மாறுவதால் அது மறையாது. அளவில் வேண்டுமானால் மாறுபடும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Friday, May 15, 2020

May 15, 2020

அறிவியல் உண்மை - அல்சர் எப்படி ஏற்படுகிறது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அல்சர் என்றால் பொதுவாக புண் என்று கூறலாம். உணவுப் பாதையில் ஏற்படும் புண்களைப் பற்றித்தான் அல்சர் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. வாய்ப்பகுதியிலிருந்து சிறுகுடல் வரை எங்கு வேண்டுமானாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புண்டு. மனித இரைப்பை ( வயிற்றுச்) சுவரில் இரைப்பைச் சுரப்பிகள் உண்டு. இச்சுரப்பிகளில் இருந்து நொதிகள் அடங்கிய நீர் சுரக்கிறது.
பெப்சின் என்ற நொதி உள்ளது. மேலும் இரைப்பை சுவரில் உள்ள சிறப்பு செல்கள் மூலம் செறிவு குறைந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த பெப்சின் மற்றும் ஹைட்ரோகுளேரிக் அமிலமும் உணவுப் பாதையின் உட்சுவரான கோழைப் படலத்தை பாதிக்கும்போது அங்கு புண் - அல்சர் ஏற்படுகிறது. கூடுதலான அமில சுரப்பும் , பெப்சின் சுரப்பும் அதிகமானாலும் குடல் புண் ஏற்படும் . அல்சர் வாய்க்குழியில் வந்தால் ஆப்தோஸ் அல்சர் என்றும் , தொண்டையில் உணவுக்குழலில் புண் ஏற்பட்டால் ஈசோஃபெஜிடிஸ் அல்சர் என்றும் , இரைப்பையில் ஏற்படும் புண்ணை காஸ்ட்ரிக் அல்சர் என்றும் சிறுகுடல் பகுதியில் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் என்றும் கூறலாம் . பொதுவாக உணவுப் பாதையில் ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர் என்றும் அழைப்பர்.
நல்ல ஆரோக்கியமுள்ள மனிதனிடம் அல்சருக்குக் காரணமான அமிலசுரப்பும் உணவுப் பாதையின் கோழைப்படலப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சமச்சீராய் இருக்கும் . மிளகாயும் , காட்டமான மசாலாப் பொருள்களும் வயிற்றில் அமிலத்தின் சுரப்பைத் தூண்டி , அல்சர் ஏற்பட வழிவகுக்கிறது. மசாலா சேர்ந்த உணவுப் பொருள்களைப் பார்த்தாலே கூட அமிலச் சுரப்பு தூண்டப்படும் . அதை சமன்படுத்தவே நாவில் எச்சில் ( உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது ) ஊறுகிறது. புரதப்பொருள்கள் இரைப்பை நீர் சுரப்பை அதிகரிக்கும் . காபி , மது வகைகளும் இரைப்பை நீர் சுரப்பை அதிகரித்து அல்சருக்கு வழிவகுக்கும் . தந்தைக்கு அல்சர் இருந்தால் மகனுக்கு அல்சர் வரவும் அதிக வாய்ப்புண்டு. நேரம் தவறிய உணவுப்பழக்கம் , டென்ஷன் , அதிக கவலை , எந்நேரமும் பரபரப்பு போன்றவைகளும் காரணங்களாகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Wednesday, May 13, 2020

May 13, 2020

அறிவியல் உண்மை - சந்திரனை மையமாக வைத்து தோன்றும் வட்டத்திற்கும் மழை வருவதற்கும் தொடர்பு உண்டா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உண்டு! சூரியனிடமிருந்து வரும் ஒளியை சந்திரன் எதிரொளிக்கிறது. சந்திரனிடமிருந்து வரும் ஒளி , காற்று மண்டலத்திலுள்ள மூலக்கூறுகள் மற்றும் சிறுசிறு துகள்களால் சிதறடிக்கப்படுகிறது. இதனால் இரவு வானம் , வெளிச்சமாகத் தோன்றுகிறது. மேகத்தில் சிறுசிறு துகள்களாக தூசுகளும் புகையும் ( கரி , சாம்பல் ) நீர்த்துளிகளும் இருக்கின்றன. இந்தத் துகள்களின் பருமனுக்கும் ஒளி சிதறடிக்கப்படும் கோணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. பெரிய துகள் குறைந்த கோணத்திலும் சிறிய துகள் அதிகக் கோணத்திலும் ஒளியைச் சிதறடிக்கும். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சிதறடிக்கும் துகள்கள் , சந்திரனைச் சுற்றி , ஒரு வட்டத்தில் அமையும்.
வட்டம் சிறியதாகத் தெரிந்தால் பெரிய துகள்கள் இருக்கின்றன என்றும் , வட்டம் பெரியதாக இருந்தால் சிறிய துகள்கள் இருக்கின்றன என்றும் பொருள். வட்டம் ஏதும் தெரியவில்லையென்றால், மேகத்திலுள்ள துகள்கள் வெவ்வேறான எல்லாவித பருமன்களிலும் இருக்கின்றன எனக் கொள்ளலாம். துகள்களின் பருமனுக்கும் மழை உண்டாவதற்கும் தொடர்பு உண்டு. சிறிய வட்டமாக இருந்தால், கூடிய விரைவில் மழை பெய்யும் எனப் பொருள் கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Tuesday, May 12, 2020

May 12, 2020

அறிவியல் உண்மை - வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் அது நம் ரத்தத்தை உறிஞ்சிவிடுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது உண்மையல்ல. சிமெண்ட் தயாரிப்பில் 70 சதவீதம் சுண்ணாம்புக்கல் , 22 சதவீதம் சிலிக்கா , 5 சதவீதம் அலுமினா பவுடர் , 3 சதவீதம் ஃபெரிக் ஆக்ஸைடு ஆகியவற்றை நன்றாக தூளாக்கி , சலித்து , கலந்து , உலையிலிட்டு , அதிக வெப்பநிலைக்கு உயர்த்தி , பின் குளிரவைத்து , பொடி செய்து , சலித்து கிடைப்பதுதான் சிமெண்ட்.
சிமெண்ட் தூளில் அதிக அளவு சுண்ணாம்பு உள்ளதால் , கட்டட வேலை செய்பவர்களின் கை , தோல் செல்கள் சிதைவு அடைய வாய்ப்புண்டு. அவ்வளவே ! சிமெண்ட் தரையில் படுத்தால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது உண்மையல்ல.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Monday, May 11, 2020

May 11, 2020

அறிவியல் உண்மை - வேகவைத்த அரிசிக்கு மட்டும் பசைத்தன்மை எவ்வாறு ஏற்படுகிறது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரிசியில் அதிகளவு ஸ்டார்ச் என்ற மாவுப்பொருள் உள்ளது. இது நீரில் கரையக்கூடிய அமைலோஸ் என்ற மாவுப் பொருளாகவும் , நீரில் கரையாத அமைலோ பெக்டின் என்ற மாவுப்பொருளாகவும் இருக்கிறது. இவை குளுக்கோஸ் எனப்படும் பல ஆயிரக்கணக்கான ஒற்றைச் சர்க்கரை மூலக்கூறுகளால் ஆனவைதான். அரிசியை வேகவைக்கும்போது , இந்த மாவுப்பொருள்கள் நீரை உறிஞ்சி ' கனஅளவில் பெரிதாகின்றன. இதனால் ஸ்டார்ச் நெகிழ்வுத் தன்மை பெறுகிறது. இந்த நிலையில் பருக்கைகளை எடுத்து நசுக்கிப் பார்த்தால் உள்ளே நெகிழ்வான மாவுப்பொருள் ஒட்டும் தன்மையோடு இருப்பதைக் காண்கிறோம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Saturday, May 09, 2020

May 09, 2020

நெற்றியில் தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறுவதேன் ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுவாக தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறாது. குங்குமத்தில் இன்று கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு நெற்றிப் பகுதியில் சரும அழற்சி உண்டாகிறது.
தொடர்ந்து அதே கலப்படப் பொருளைப் பயன்படுத்தும்போதுதான் குங்குமம் வைக்கும் நெற்றிப் பகுதி கருப்பாக மாறுகிறது. இதே விளைவு , மற்ற கலப்படம் செய்யப்பட்ட முகப் பூச்சுக்களாலும் ஏற்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
May 09, 2020

அறிவியல் உண்மை - மேக மூட்டமாக இருக்கும்போது வியர்ப்பது ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சுற்றுப்புற வெப்பநிலை உயரும்போது , நம் உடலின் வெப்பநிலையம் உயரத் தொடங்குகிறது. அப்போது உடலின் வெப்பநிலையை 98.4°f அளவில் நிலைநிறுத்துவதற்காக வியர்வை வெளிப்படுகிறது. வியர்வை ஆவியாகும்போது உடலின் வெப்பநிலை குறையும்.
காற்றிலுள்ள ஈரப்பதத்தின் அளவு , வியர்வை ஆவியாகும் வேகத்தைப் பாதிக்கிறது. ஈரப்பதம் குறைந்தால் ஆவியாகும் வேகம் கூடும். ஈரப்பதமும் சுற்றுப்புற வெப்ப நிலையும் குறைவாக இருக்கும்போது , வியர்க்காமல் இருக்கும் , அப்படியே வியர்த்தாலும் உடனே ஆவியாகிவிடுகிற வயாகிவிடுகிறது. இதனால் உடலுக்கு இதமாகவும் இருக்கிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ( air conditional ) அறையில் இந்த நிலை ஏற்படுகிறது. மேகமூட்டமாக இருக்கும் போது வெயில் இல்லாவிட்டாலும் வெப்பநிலையும் , ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். மேகங்களில் நீர் மூலக்கூறுகள் கதிரவனின் அகச்சிவப்புக் கதிர்களை பெருமளவில் உட்கவர்ந்து காற்றின் வெப்பநிலையையும் உயர்த்துகின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
May 09, 2020

அறிவியல் உண்மை : நிழல் - இரு பரிமாணமா? முப்பரிமாணமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிழல் - இரு பரிமாணம்தான்! ஒளிக்கற்றையை ஒரு பொருள் மறைப்பதால் நிழல் உண்டாகிறது. அந்தப் பொருள் ஒரு போஸ்டராகவோ, கட்அவுட் ஆகவோ இருக்கலாம். இவை இருபரிமாணப் பொருள்கள். வீடு, மனிதன் போன்ற முப்பரிமாணப் பொருள்களும் நிழலை உருவாக்குகின்றன. இந்த நிழலும் இரு பரிமாணமே! ஒளிக்கற்றையால் ஏற்படும் பொருளில் பிம்பம் தரையில்தானே விழுகிறது. தரைப் பரப்போ, சுவர் பரப்போ இரு பரிமாணமாதலால் நிழலும் இரு பரிமாணமாகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
May 09, 2020

அறிவியல் உண்மை - தூக்கத்தில் நடப்பது என்றால் எப்படி முடியும்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் துயில் நடை ( Sleep walking ) என்று சொல்வார்கள் , தூங்கிக் கொண்டிருக்கும் போது படுக்கையில் இருந்து எழுந்து தன் உணர்வின்றி நடப்பது , பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் சில மணிகளிலேயே இது நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் வெற்றுப்பார்வையுடன் சில சாதாரண காரியங்களைச் செய்வார்கள். இது ஒரு வகை மனநோயின் வெளிப்பாடாகவே வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது. எப்படி , கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகிறதோ அந்த மாதிரியே ஆழ்மனதில் நீண்ட காலமாகப் பதிந்திருக்கும் கசப்பான அனுபவங்கள் எண்ணங்கள் , ஆசைகள் , ஆவேச உணர்ச்சிகள் போன்றவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சிதான் துயில்நடை.
தூக்கத்தில் நடப்பதற்கும் அந்த கணத்தில் அவர் காணும் கனவுக்கும் தொடர்புண்டு. கனவில் தோன்றும் உணர்வுளுக்கு ஏற்ப அவர் அசைவு கொடுக்கிறார். துயில் நடை ஓரிரு நிமிடங்கள்தான் நீடிக்கும். அதற்குள் அவர் சுயநினைவுக்கு வந்து விடுவார். ஆனால் நடந்தது செய்த செய்கைகள் எதுவுமே அவருக்கு ஞாபகமிருக்காது. பகலில் சிறிது நேரம் தூங்கினால் இரவில் அவ்வளவாகத் துயில்நடை வருவதில்லை என்று அறியப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
May 09, 2020

அறிவியல் உண்மை - மனிதன் கண்ணீர் விட்டு அழும்போது மூக்கில் தண்ணீர் வரக் காரணம் என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இயல்பான நேரங்களில் கண்களில் சுரக்கும் கண்ணீர் , இமை விளிம்புகளில் உள்ள நுண்துளைகளின் வழியே கண்ணைவிட்டு நீங்கி கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையில் உள்ள கண்ணீர்ப் பையை அடைந்து , அங்கிருந்து ) தனிக்குழல் வழியாக மூக்கின் மேல் பகுதியில் சென்று வடிகிறது.
இயல்பான நிலைகளில் அளவான நீரே சுரக்கப்படுவதால் , அது மூக்குழியை அடைவதற்குள் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. ஆனால் அழும்போது அதிகமான அளவு கண்ணீர் பெருக்கம் ஏற்படுவதால் தேவை போக அதிகப்படியான நீர் மூக்கிலிருந்து வழிகிறது. இதுவே மனிதன் கண்ணீர்விட்டு அழும்போது மூக்கில் தண்ணீர் வரக் காரணமாகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
May 09, 2020

அறிவியல் உண்மை : வயதானால் காது கேட்கும் சக்தியை இழக்கிறதே எதனால்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நம் உடலில் உள்ள செல்கள் பழுதடையும்போது அவற்றுக்குப் பதிலாக புதிய செல்கள் வளர்சிதை மாற்றத்தின்மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் பழுதடைந்தாலும் , சிதைவுற்றாலும் , புதிய செல்கள் மூளையில் உருவாக வாய்ப்பில்லை. மூளை உறுப்பின் தனிப்பண்பே இதுதான். மூளையின் எந்தப் பகுதிச் செல்கள் பழுதடைகின்றதோ , சிதைவடைகின்றதோ அல்லது முதுமையால் செயல்திறன் குன்றி செயல் இழக்கிறதோ , அந்த ( மூளைப் ) பகுதி , எந்த உடல் உறுப்பை கட்டுப்படுத்துகிறதோ அந்த கட்டுப்பாட்டுச் செயல் பாதிப்பு அடையும்.
முதுமையால் மூளையின் எடையும் குறையும். மூளையின் இரத்த ஓட்டமும் 30 விழுக்காடு குறைந்துவிடும் , செல்களில் அதிக கழிவுப் பொருள்கள் தேங்கிவிடுவதால் செல்கள் விரைவில் செயல்திறனை இழந்து விடுகின்றன. மேலும் , வயதாகும்போது தலைமுடி நரைத்தல் , வழுக்கைவிழுதல் , பார்வை , குறைதல் , மறதி அதிகமாதல் , உடல் மெலிதல் , தோல் சுருங்குதல் போல காதின் உள்ளமைப்புகளும் வலுவிழப்பதால் வயதானால் காது கேட்கும் திறனை ( Adult deaf ) இழக்கிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
May 09, 2020

அறிவியல் உண்மை - உலகின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வெப்பநிலை நிலவுவதில்லையே ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சூரியனிடமிருந்து பூமி வெப்பத்தைப் பெறுகிறது. அதிக வெப்பம் பெறும் இடங்களில் வெப்பநிலை அதிகமாகவும், வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். சூரியனிடமிருந்து பூமி வெகு தொலைவில் இருப்பதால் சூரியனின் வெப்பக் கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக வந்து பூமியில் விழுகின்றன.
பூமி உருண்டை ஆதலால் , நில நடுக்கோட்டுப் பகுதியில் அதிகக் கதிர்களும் துருவங்களில் குறைவான கதிர்களும் விழுகின்றன. இதனால் , துருவங்களில் வெப்ப நிலை குறைவாகவும் , நிலநடுக்கோட்டில் வெப்பநிலை அதிகமாகவும் இருக்கும் . மேலும் , பூமியைச் சூழ்ந்து இருக்கும் காற்று மண்டலத்தின் சலனத்தாலும் காற்றில் கலந்துள்ள வளிமப் பொருள்களின் தன்மையாலும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் சென்றடையும் சூரிய ஆற்றலின் அளவு வேறுபடுகிறது . காற்றிலுள்ள சில வளிமங்கள் ஒளிசக்தியை வெப்ப சக்தியாக மாற்றுகின்றன.
சில வளிமங்கள் பூமிக்கு வந்த வெப்பத்தைத் தப்பிச் செல்லாதவாறு தடுக்கின்றன ; நீராவியானது குளிர்ந்த மழையாகப் பெய்து வெப்பத்தைத் தணிக்கிறது. காற்று வீசுவதால் வெப்பம் கடத்தப்படுகிறது. ஆக , பூமி உருண்டையாக இருப்பதாலும் , சூரியனின் கதிர்கள் சில இடங்களில் செங்குத்தாகவும் வேறு சில இடங்களில் சாய்வாக விழுவதாலும் , பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் பல நிகழ்வுகளாலும் பூமியின் வெப்ப நிலை இடத்துக்கு இடம் , நேரத்திற்கு நேரம் மாறுபடுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
May 09, 2020

அறிவியல் உண்மை - பூமிக்கு ஈர்ப்புவிசை எங்கிருந்து கிடைக்கிறது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பூமியின் பொருண்மையால் ( Mass ) தான் பூமிக்கு ஈர்ப்புவிசை கிடைக்கிறது. எல்லாப் பொருளுக்கும் பொருண்மை உண்டு. பொருண்மையுள்ள ஒரு பொருளானது பொருண்மையுள்ள இன்னொரு பொருளை இழுக்கிறது. இந்த ஈர்ப்புவிசையானது பொருண்மைகளுக்கு நேர்விகிதத்திலும் அவற்றுக்கிடையே உள்ள தொலைவின் வர்க்கத்திற்கு எதிர்விகிதாத்திலும் இருக்கிறது. இந்த ஈர்ப்பு விசையால்தான் கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன. நிலவுகள் கோள்களைச் சுற்றுகின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
May 09, 2020

அறிவியல் உண்மை - நிலநடுக்கம் வருவது விலங்குகளுக்கு தெரிவது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பூமியின் அடிப்பாகத்தில் குளிர்ச்சி அடையாமல் இருக்கும் நெருப்புக் குழம்பானது சில சமயங்களில் பூமியின் மென்மையான பரப்பின் மீது வரும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் வந்த பிறகு அதனால் ஏற்படும் விளைவுகளை ரிக்டர் அளவில் எடுக்கும் முயற்சிகளை மட்டுமே மனிதனால் எடுக்க முடிகிறது. ஆனால் நிலநடுக்கம் வருவதற்கு முன்கூட்டியே விலங்குகள் மற்றும் பறவைகளால் உணர முடியும் என்று நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே கூறி வருகின்றார்கள்.
நிலநடுக்கம் வருவது விலங்குகளுக்கு தெரிவது எப்படி?
பொதுவாக விலங்குகள் அனைத்தும் பூமியில் தரையின் மீது தன்னுடைய காதுகளை வைத்து தூங்குகிறது. எனவே தரைக்கும் விலங்குகளுக்கு தொடர்பு உள்ளதால், தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளை கூட விலங்குகளினால் உணர முடிகிறது.X மேலும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு நிலத்தின் மீது கந்தக வாசனை வீசும். கடல் நீர் கலங்கி இயற்கையான கடல் நீர் நிறத்தில் இருந்து, வேறுபட்டுக் கணப்படும். இந்த மாற்றங்களை எல்லாம் பறவைகள் உணர்ந்து வேறு இடங்களுக்கு சென்று விடும் என்று நம் முன்னோர்களின் காலத்தில் இருந்து கூறி வருகின்றார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog