Education News
February 15, 2026
Showing posts with label Education News. Show all posts
Showing posts with label Education News. Show all posts
Sunday, February 15, 2026
Thursday, September 11, 2025
Sunday, September 07, 2025
Tuesday, July 15, 2025
Saturday, May 17, 2025
Thursday, April 24, 2025
Thursday, February 27, 2025
Saturday, November 09, 2024
Sunday, August 04, 2024
Friday, April 26, 2024
Monday, April 22, 2024
Friday, March 01, 2024
Sunday, February 11, 2024
Education News
February 11, 2024
வணிக மேலாண்மை படிப்புகள் Business Management Courses
வணிக மேலாண்மை படிப்புகள்.
எந்த ஒரு நிறுவனமும் சிறப்பாக செயல்பட இத்தகைய செயல்முறைகள் செவ்வனே நடைபெறுதல் அவசியம்.
திட்டமிடல்:
நிறுவனத்தில் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஒன்று. நிறுவனத்தின் நிலைமையை தற்போதைய நிலையிலிருந்து நல்ல நிலைக்கு முன்னேற்றுவதே மேலாண்மை திட்டமிடல் ஆகும். அதனை சரியான முறையில் முன்னெடுத்து சென்று குறித்த இலக்கை அடைய திட்ட மேலாளர்கள் அவசியம்.பணியமர்த்தல்: பொருத்தமான பணியாளர்களை பொருத்தமான பணிகளில் பணியமர்த்துவது, அவர்களுக்கான ஊதிய உயர்வு, போன்ற செயல்கள் அனைத்தையும் செய்வது பணியமர்த்தல் மேலாண்மை.
ஒழுங்கமைத்தல்:
நிலுவையில் உள்ள பணிகளைப் பட்டியலிட்டு, அவற்றை நிர்ணயிக்கப்பட்ட நேர அவகாசத்திற்குள் முடிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் ஒழுங்கு மேலாண்மை பணி உதவுகிறது.
குழு மேலாண்மை:
ஒரு நிறுவனத்தின் முதன்மை பொறுப்பில் உள்ளவர்கள், தங்களுடன் பணியாற்றும் குழுவினரை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வதே குழு மேலாண்மை.
அனைத்துப் பணிகளையும் சரியான நேரத்தில் முடித்து, நிறுவனத்தின் விதிமுறை மற்றும் சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதும் குழு மேலாண்மையின் பகுதியாகும்.
நிதி மேலாண்மை:
செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வருவாயை அதிகரிக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் நிதிக் கொள்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தவும் நிதிமேலாண்மை உதவுகிறது. சந்தைப்படுத்துதல்:
மார்க்கெட்டிங் துறையில் பிராண்ட் மேலாளர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் வல்லுநர்கள், சந்தை ஆய்வாளர் ஆகியோர் சந்தைப்படுத்தல் உத்திகளை உருவாக்கி, சந்தை ஆராய்ச்சி நடத்தி, வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.
சப்ளை செயின் மேலாண்மை:
தயாரிப்பாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையேயான பாலத்தை கட்டமைத்து மேம்படுத்துவதே சப்ளை செயின் மேலாண்மை.
இது லாஜிஸ்டிக்ஸ், கொள்முதல், சரக்கு மற்றும் டிஸ்ட்ரிபூஷன் சேனல்களை நிர்வகிக்கும் பணிகளை உள்ளடக்கியது.
இவ்வாறு ஒரு நிறுவனம் செயல்படுவதில் ஒவ்வொரு நிலையிலும் திறன்மிக்க பணியாளர்கள் மற்றும் மேலாளர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.
டிப்புகள்:
இத்தகைய திறனாளர்களை உருவாக்க, இளநிலையில் பி.ஏ., பி.பி.ஏ., பிஎம்.எஸ்., பி.காம்., பி.பி.எஸ்., பி.ஆர்.எம்., பி.இ.எம்., முதுநிலையில் எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., இ.எம்.பி.ஏ., உட்பட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.
Sunday, January 28, 2024
Education News
January 28, 2024
கல்வித்துறையில் புதிய உத்வேகம் - அதிரடி மாற்றங்கள் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர்
கல்வித்துறையில் புதிய உத்வேகம் - அதிரடி மாற்றங்கள் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கல்வித்துறைக்கு புதிய உத்வேகம் கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அத்துறையின் அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நியமித்தார். இளம் அதிகாரிகளையும் நியமித்தார். கல்வித்துறை வளர்ச்சி குறித்து அடிக்கடி விசாரித்தும், ஆலோசனை நடத்தியும் வருகிறார். கடந்த ஆட்சியில் கல்வித்துறை புரோக்கர்களின் மயமாக, பணம் கொடுத்தால்தான் பணி மாறுதல் என்ற நிலை இருந்தது. தற்போது பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடக்கிறது.
காலிபணியிடங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு, பணி மாறுதல்களும் கலந்தாய்வு அடிப்படையில் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கல்வித்துறையில் மேலும் புதிய யுக்தியை கையாள பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.
அவர் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேநேரத்தில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தனது நடவடிக்கைகளை அமைத்துள்ளார். அவரது அறைக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று குறைகளை கூறலாம் என்று அறிவித்தார்.
இதனால் தினமும் ஏராளமான ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியும், உதவிகளை பெற்றும் வருகின்றனர். இதனால் தற்போது கல்வித்துறையில் பெரும்பாலான குறைபாடுகள் களையப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வித்துறையில் அதிரடி மாற்றத்துக்கான அரசாணையை குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பிடும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வகுத்து அறிவுறுத்தல் வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணிநாடுநர்களில் இருந்து நேரடி பணி நியமனம் செய்யும்போது, பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணையை கீழ்க்கண்டவாறு வெளியிட்டு அரசு ஆணையிடுகிறது.
அதன்படி, பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை வருகிற மே 1க்குள் கணக்கீடு செய்ய வேண்டும். அவர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்வது மே 31க்குள் நடக்க வேண்டும், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 30க்குள் நடத்தி முடிக்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட மதிப்பீட்டை ஜூலை 1க்குள் முடிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருந்தால் அதனை அரசுக்கு ஜூலை 15க்குள் அனுப்ப வேண்டும். அதன் மீது அரசாணை செப்டம்பர் 30க்குள் வெளியிடப்பட வேண்டும், நேரடி பணி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய குழு மற்றும் நிதித்துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்த பின் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் 2024 ஜூன் 31க்குள் முடிக்க வேண்டும். முடிவுகள் ஏப்ரல் 30க்குள் வெளியிடப்பட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி பட்டியலை மே 1 முதல் 31க்குள் வழங்க வேண்டும்.
இந்த அரசாணையை பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தலைவர், தேர்வு வாரியம் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்து இதுபோன்ற அரசாணை இதுவரை வெளியிடப்பட்டது இல்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ளதால் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், பட்டதாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனால் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.
பள்ளி கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டதும் நீதிமன்ற வழக்குகளில் தடை ஏதும் இல்லாததால் உடனடியாக 2800 புதிய பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கல்வித்துறைக்கு புதிய உத்வேகம் கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அத்துறையின் அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நியமித்தார். இளம் அதிகாரிகளையும் நியமித்தார். கல்வித்துறை வளர்ச்சி குறித்து அடிக்கடி விசாரித்தும், ஆலோசனை நடத்தியும் வருகிறார். கடந்த ஆட்சியில் கல்வித்துறை புரோக்கர்களின் மயமாக, பணம் கொடுத்தால்தான் பணி மாறுதல் என்ற நிலை இருந்தது. தற்போது பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடக்கிறது.
காலிபணியிடங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு, பணி மாறுதல்களும் கலந்தாய்வு அடிப்படையில் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கல்வித்துறையில் மேலும் புதிய யுக்தியை கையாள பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.
அவர் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேநேரத்தில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தனது நடவடிக்கைகளை அமைத்துள்ளார். அவரது அறைக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று குறைகளை கூறலாம் என்று அறிவித்தார்.
இதனால் தினமும் ஏராளமான ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியும், உதவிகளை பெற்றும் வருகின்றனர். இதனால் தற்போது கல்வித்துறையில் பெரும்பாலான குறைபாடுகள் களையப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வித்துறையில் அதிரடி மாற்றத்துக்கான அரசாணையை குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பிடும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வகுத்து அறிவுறுத்தல் வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணிநாடுநர்களில் இருந்து நேரடி பணி நியமனம் செய்யும்போது, பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணையை கீழ்க்கண்டவாறு வெளியிட்டு அரசு ஆணையிடுகிறது.
அதன்படி, பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை வருகிற மே 1க்குள் கணக்கீடு செய்ய வேண்டும். அவர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்வது மே 31க்குள் நடக்க வேண்டும், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 30க்குள் நடத்தி முடிக்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட மதிப்பீட்டை ஜூலை 1க்குள் முடிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருந்தால் அதனை அரசுக்கு ஜூலை 15க்குள் அனுப்ப வேண்டும். அதன் மீது அரசாணை செப்டம்பர் 30க்குள் வெளியிடப்பட வேண்டும், நேரடி பணி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய குழு மற்றும் நிதித்துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்த பின் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் 2024 ஜூன் 31க்குள் முடிக்க வேண்டும். முடிவுகள் ஏப்ரல் 30க்குள் வெளியிடப்பட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி பட்டியலை மே 1 முதல் 31க்குள் வழங்க வேண்டும்.
இந்த அரசாணையை பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தலைவர், தேர்வு வாரியம் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்து இதுபோன்ற அரசாணை இதுவரை வெளியிடப்பட்டது இல்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ளதால் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், பட்டதாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனால் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.
பள்ளி கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டதும் நீதிமன்ற வழக்குகளில் தடை ஏதும் இல்லாததால் உடனடியாக 2800 புதிய பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
Saturday, December 16, 2023
NEWS
December 16, 2023
Fashion Technology Courses - பேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கான மத்திய அரசு நிறுவனம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3
பேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கான மத்திய அரசு நிறுவனம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3 Central Government Institute for Fashion Technology Courses – Last Date to Apply: 3rd January
பேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கான மத்திய அரசு நிறுவனம்.
பேஷன் கல்வியை வழங்குவதன் வாயிலாக, ஜவுளி மற்றும் ஆடை துறையில் திறமையான மனிதவளத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 1986ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனம், 2006ல் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது.
கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் வடிவமைப்பில், வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.
கல்வி வளாகங்கள்:
பெங்களூரு, போபால், சென்னை, டாமன், காந்திநகர், ஹைதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடில்லி, பாட்னா, பஞ்ச்குலா, ரேபரேலி, ஷில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புபனேஷ்வர், ஸ்ரீநகர் ஆகிய 18 நகரங்களில் இக்கல்வி நிறுவன வளாகங்கள் செயல்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்:
இளநிலை பட்டப்படிப்புகள் - 4 ஆண்டுகள்:
பி.டெஸ்., - பேஷன் கம்யூனிகேஷன்பி.டெஸ்., - ஆக்ஸசரி டிசைன்பி.டெஸ்., - பேஷன் டிசைன்பி.டெஸ்., - லெதர் டிசைன்பி.எப்.டி., - அப்பேரல் புரொடக்சன்பி.டெஸ்., - டெக்ஸ்டைல் டிசைன்பி.டெக்., - பேஷன் டெக்னாலஜி
முதுநிலை பட்டப்படிப்புகள் -
2 ஆண்டுகள்: எம்.டெஸ்., - மாஸ்டர் ஆப் டிசைன்எம்.எப்.எம்., - மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மெண்ட்எம்.எப்.டெக்.,- மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி.
தேர்வு முறை:
தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வாயிலாக இந்த கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மற்றும் காகித அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுதும் 60 நகரங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை:
https://exams.nta.ac.in/NIFT/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3
தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 5
விபரங்களுக்கு:
https://nift.ac.in/ மற்றும் https://nta.ac.in/
Thursday, December 14, 2023
Free courses online
December 14, 2023
ஆன்லைனில் இலவச படிப்புகள் - Free courses online
ஆன்லைனில் இலவச படிப்புகள்
அறிமுகம்கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகம் முழுதிலும் 10 கோடி பேருக்கு ஆங்கில மொழியை கற்பித்த பிரிட்டிஷ் கவுன்சில், பிரிட்டிஷ் மியூசியம் பிரிட்டிஷ் லைப்ரரி மற்றும் 23 முன்னணி பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்பில் இந்த ஆன்லைன் கற்றல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இதன் வாயிலாக, இங்கிலாந்து உயர்கல்வி அனுபவம், புதிய திறன்களை வளர்த்தல், பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்குதல், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றம் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன.
படிப்புகள்:
கல்வியில் பாலின சமத்துவம், உள்ளடக்கிய கல்விமுறைகள், கல்வியில் தலைமைப்பண்பு, வேலைவாய்ப்பு திறன்கள், யு.கே.,வில் உயர்கல்விக்கு தயாராதல், மேம்பட்ட தொல்லியில் ரிமோட் சென்சிங் உட்பட பல்வேறு தலைப்புகளில் குறுகியகால பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவை தவிர, இயற்பியல், உளவியல், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, சூழலியல், சந்தைப்படுத்தல் போன்ற துறை சார்ந்த படிப்புகளும் பல்வேறு முன்னணி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றன.
பயிற்று மொழி:
அனைத்து படிப்புகளும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகின்றன.
பயிற்சி நேரம்:
பெரும்பாலான படிப்புகள் ஆறு முதல் பத்து வாரங்கள் வரை வழங்கப்படுகின்றன. வாரத்திற்கு 2-4 மணிநேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கும் சில குறுகிய படிப்புகளும் உள்ளன.
படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, முறையான தேர்வுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை.
ஆனால், மாணவர்கள் கல்வி கற்றதற்கு உரிய ஆவணம் வழங்கப்படுகிறது.
தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.
எனினும், அனைத்து படிப்புகளும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுவதால் ஆங்கில அறிவு அவசியம்.
விபரங்களுக்கு:
www.futurelearn.com/partners/british-council
அறிமுகம்கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகம் முழுதிலும் 10 கோடி பேருக்கு ஆங்கில மொழியை கற்பித்த பிரிட்டிஷ் கவுன்சில், பிரிட்டிஷ் மியூசியம் பிரிட்டிஷ் லைப்ரரி மற்றும் 23 முன்னணி பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்பில் இந்த ஆன்லைன் கற்றல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இதன் வாயிலாக, இங்கிலாந்து உயர்கல்வி அனுபவம், புதிய திறன்களை வளர்த்தல், பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்குதல், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றம் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன.
படிப்புகள்:
கல்வியில் பாலின சமத்துவம், உள்ளடக்கிய கல்விமுறைகள், கல்வியில் தலைமைப்பண்பு, வேலைவாய்ப்பு திறன்கள், யு.கே.,வில் உயர்கல்விக்கு தயாராதல், மேம்பட்ட தொல்லியில் ரிமோட் சென்சிங் உட்பட பல்வேறு தலைப்புகளில் குறுகியகால பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவை தவிர, இயற்பியல், உளவியல், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, சூழலியல், சந்தைப்படுத்தல் போன்ற துறை சார்ந்த படிப்புகளும் பல்வேறு முன்னணி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றன.
பயிற்று மொழி:
அனைத்து படிப்புகளும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகின்றன.
பயிற்சி நேரம்:
பெரும்பாலான படிப்புகள் ஆறு முதல் பத்து வாரங்கள் வரை வழங்கப்படுகின்றன. வாரத்திற்கு 2-4 மணிநேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கும் சில குறுகிய படிப்புகளும் உள்ளன.
படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, முறையான தேர்வுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை.
ஆனால், மாணவர்கள் கல்வி கற்றதற்கு உரிய ஆவணம் வழங்கப்படுகிறது.
தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.
எனினும், அனைத்து படிப்புகளும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுவதால் ஆங்கில அறிவு அவசியம்.
விபரங்களுக்கு:
www.futurelearn.com/partners/british-council
Wednesday, October 11, 2023
Saturday, October 07, 2023
NID
October 07, 2023
National Institute of Design (NID] வடிவமைப்பு குறித்து படிக்க ஆர்வம் உள்ளதா? - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 1, 2023
வடிவமைப்பு குறித்து படிக்க ஆர்வம் உள்ளதா? தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
Interested in studying Design at National Institute of Design (NID)?- Last date to apply is December 1, 2023 - National Institute of Design (NID] வடிவமைப்பு குறித்து படிக்க ஆர்வம் உள்ளதா? - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 1, 2023 National Institute of Design (NID] தேசிய வடிவமைப்பு நிறுவனம்
வடிவமைப்பு குறித்து படிக்க ஆர்வம் உள்ளதா?
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் நிறுவனத்தில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான நான்கு வருட B.Des படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 1, 2023
National Institute of Design (NID) - https://www.nid.edu/
விண்ணப்பிக்க - CLICK HERE TO Watch The Videos (Choose Telegram App)
Interested in studying Design at National Institute of Design (NID)?- Last date to apply is December 1, 2023 - National Institute of Design (NID] வடிவமைப்பு குறித்து படிக்க ஆர்வம் உள்ளதா? - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 1, 2023 National Institute of Design (NID] தேசிய வடிவமைப்பு நிறுவனம்
வடிவமைப்பு குறித்து படிக்க ஆர்வம் உள்ளதா?
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் நிறுவனத்தில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான நான்கு வருட B.Des படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 1, 2023
National Institute of Design (NID) - https://www.nid.edu/
விண்ணப்பிக்க - CLICK HERE TO Watch The Videos (Choose Telegram App)
Saturday, September 30, 2023
Tamil Nadu Governor
September 30, 2023
விஸ்வகர்மா திட்டம் குலக் கல்வி திட்டம் இல்லை: கவர்னர் கருத்தும் எதிர்க் கருத்துக்களும்!
விஸ்வகர்மா திட்டம் குலக் கல்வி திட்டம் இல்லை: கவர்னர் கருத்தும் எதிர்க் கருத்துக்களும்!
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க., எதிர்க்கும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வெள்ளியன்று விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கவர்னர் ரவி, “விஸ்வகர்மா ஒன்றும் குலக்கல்வித் திட்டம் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக நஞ்சை பரப்புகின்றனர்” என விமர்சித்தது சமூக வலைதளங்களில் விவதாத்தை கிளப்பியுள்ளது. விஸ்வகர்மா திட்டம் என்றால் என்ன?
கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது செங்கோட்டை உரையில் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். குடும்பத்தின் பாரம்பரிய தொழில்களை குறிப்பாக அழிந்து வரும் கைவினை தொழில்களை வலுப்படுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இத்திட்டத்திற்காக 2023 முதல் 2028 வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கைவினைப் பொருட்களின் தரத்தை உயர்த்தி, அவற்றை உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்ல இத்திட்டம் ஊக்குவிக்கும். இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கைவினைக் கலைஞர்கள், பிற தொழில் செய்வோருக்கு முதல் தவணையாக ரூ.1 லட்சம், இரண்டாம் தவனையாக ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படும். குறிப்பாக இவற்றிற்கான வட்டி வெறும் 5% மட்டுமே.
இவைத் தவிர பயனாளிகளுக்கு திறன் மேம்பாடு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை, சந்தைப்படுத்த உதவி, கருவிகளுக்கு ஊக்கத்தொகை ஆகியவையும் வழங்கப்படும்.
பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் மொத்தம் 18 தொழில்கள் உள்ளன. தச்சர், படகு கட்டுபவர், கொல்லர், சுத்தியல் போன்ற இரும்புக் கருவிகள் செய்பவர், பூட்டு தயாரிப்பவர், குயவர், சிற்பி, செருப்புத் தைக்கும் தொழிலாளி, செருப்பு தயாரிப்பவர், மீன்பிடி வலை பின்னுபவர் போன்றவை அதில் அடக்கம். கவர்னர் பேசியது என்ன?
சிலர் எல்லாவற்றையும் அரசியல் கண்ணாடி அணிந்து பார்க்கின்றனர். அப்படி தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைக் குலக் கல்வித் திட்டம் என்று விமர்சிக்கின்றனர். இந்தத் திட்டம் அத்தியாவசிய தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மிகவும் சிறந்த முறையில் உதவும். அவர்கள் புதிய உபகரணங்களை வாங்கவும், தொழிலை பெருக்கவும் கடன் கிடைக்கும். தச்சர், கொல்லர் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களை விட்டுவிட முடியாது. ஆனால் இதனைக் குலக்கல்வி திட்டம் என்று சொல்லி மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். இவ்வாறு கூறினார்.
தி.மு.க., பெயரைக் குறிப்பிடாமல் கவர்னர் இவ்வாறு பேசியிருந்தார். இதற்கு தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் எதிர்கருத்துக்களைக் கூறி வருகின்றனர். “யார் என்ன தொழில் செய்கிறார்களோ அத்தொழில் தொடர்பான கருவிகள் வாங்கவும், விரிவாக்கத்திற்கும் தான் கடன் தரப்படுகிறது. கேட்டால் பாரம்பரிய குடும்பத் தொழிலின் அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதாக கூறுகின்றனர். அப்படி இல்லாமல் யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் தேர்வு செய்யலாம், மானிய வட்டியில் கடன் தருகிறோம், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம் என்றால் பிரச்னை இல்லை.” போன்ற கருத்துக்களை தங்கள் தரப்பாக முன் வைக்கின்றனர்.
Thursday, September 28, 2023
Education News
September 28, 2023
இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு
இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு
தனிநபர்கள் முதல் சர்வதேச அளவிலான மிகப் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும், டிஜிட்டல் தளங்கள் வாயிலாக தங்களுடைய பொருட்கள் அல்லது சேவையை விளம்பரப்படுத்துவதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனும் இணைய வழி சந்தைப்படுத்துதல். முக்கியத்துவம் சர்ச் இன்ஜின்கள், இணையதளங்கள், சமூக ஊடக தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் மொபைல் போன்கள் ஆகிய பல்வேறு பரிமாணங்கள் வாயிலாகவே டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்படுகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் எளிய முறையாகவும், கட்டணம் குறைவாகவும் உள்ளதால், இதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் பயனாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வேகமாக வளர்ந்து வரும் இத்துறையின் சந்தை அளவு 2015ல், இந்தியாவில் 47 பில்லியனாக இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் 199 பில்லியனை எட்டியது. 2024ம் ஆண்டில் 539 பில்லியன் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 2030ம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச படிப்பு
குறுகியகால இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை கூகுள் உட்பட பல்வேறு தளங்கள் வழங்குகின்றன. இணையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்படுத்தும் வழிமுறைகள் உட்பட பல்வேறு வகையான செயல்பாடுகள் கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்பின் வாயிலாக டிஜிட்டல் உலகில் சந்தைப்படுத்துதலின் அடிப்படை திறன்களை கற்றுக்கொள்ளலாம். பாடத்திட்டங்கள்
சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் - எஸ்.இ.ஓ., கன்டன்ட், மற்றும் யு-டியூப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு, ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூகுள் நிறுவனம் சான்றிதழை வழங்குகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் இ-காமர்ஸ் உத்திகளை உருவாக்குதல், சர்ச் இன்ஜின்கள், கன்டன்ட் மார்க்கெட்டிங் மற்றும் மின்னஞ்சல் போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்தல் மற்றும் ஈடுபடுத்துதல், சந்தைப்படுத்தல் பகுப்பாய்வுகளை அளவிடுதல் மற்றும் ஷேரிங் இன்சைட்ஸ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
கூகுள் டிஜிட்டல் கேரேஜ், ஆட்-வேர்ட்ஸ், ஆட்ஸ் சர்ச் அட்வர்டைசிங், சர்ச் நெட்வர்க், ஆட்ஸ் டிஸ்பிளே அட்வர்டைசிங், மொபைல் அட்வர்டைசிங், வீடியோ புரமோஷனல் ஆட்ஸ், ஆட்வேர்ட்ஸ் கீவேர்ட் பிளானர் மற்றும் மை பிசினஸ் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளவும் இப்படிப்பு உதவுகிறது.
பயன்கள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாயிலாக, பல்வேறு ஆன்லைன் சேனல்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பொருட்களை வாங்க ஊக்குவிக்கவும், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை வளர்க்கவும் முடிகிறது. ஆன்லைன் ஸ்டோர்களை வடிவமைத்தல், தயாரிப்பு பட்டியலை உருவாக்குதல், சந்தை ஆராய்ச்சி நடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவையும் இதில் சாத்தியம்.
தனிநபர்கள் முதல் சர்வதேச அளவிலான மிகப் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும், டிஜிட்டல் தளங்கள் வாயிலாக தங்களுடைய பொருட்கள் அல்லது சேவையை விளம்பரப்படுத்துவதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனும் இணைய வழி சந்தைப்படுத்துதல். முக்கியத்துவம் சர்ச் இன்ஜின்கள், இணையதளங்கள், சமூக ஊடக தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் மொபைல் போன்கள் ஆகிய பல்வேறு பரிமாணங்கள் வாயிலாகவே டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்படுகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் எளிய முறையாகவும், கட்டணம் குறைவாகவும் உள்ளதால், இதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் பயனாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வேகமாக வளர்ந்து வரும் இத்துறையின் சந்தை அளவு 2015ல், இந்தியாவில் 47 பில்லியனாக இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் 199 பில்லியனை எட்டியது. 2024ம் ஆண்டில் 539 பில்லியன் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 2030ம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச படிப்பு
குறுகியகால இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை கூகுள் உட்பட பல்வேறு தளங்கள் வழங்குகின்றன. இணையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்படுத்தும் வழிமுறைகள் உட்பட பல்வேறு வகையான செயல்பாடுகள் கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்பின் வாயிலாக டிஜிட்டல் உலகில் சந்தைப்படுத்துதலின் அடிப்படை திறன்களை கற்றுக்கொள்ளலாம். பாடத்திட்டங்கள்
சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் - எஸ்.இ.ஓ., கன்டன்ட், மற்றும் யு-டியூப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு, ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூகுள் நிறுவனம் சான்றிதழை வழங்குகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் இ-காமர்ஸ் உத்திகளை உருவாக்குதல், சர்ச் இன்ஜின்கள், கன்டன்ட் மார்க்கெட்டிங் மற்றும் மின்னஞ்சல் போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்தல் மற்றும் ஈடுபடுத்துதல், சந்தைப்படுத்தல் பகுப்பாய்வுகளை அளவிடுதல் மற்றும் ஷேரிங் இன்சைட்ஸ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
கூகுள் டிஜிட்டல் கேரேஜ், ஆட்-வேர்ட்ஸ், ஆட்ஸ் சர்ச் அட்வர்டைசிங், சர்ச் நெட்வர்க், ஆட்ஸ் டிஸ்பிளே அட்வர்டைசிங், மொபைல் அட்வர்டைசிங், வீடியோ புரமோஷனல் ஆட்ஸ், ஆட்வேர்ட்ஸ் கீவேர்ட் பிளானர் மற்றும் மை பிசினஸ் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளவும் இப்படிப்பு உதவுகிறது.
பயன்கள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாயிலாக, பல்வேறு ஆன்லைன் சேனல்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பொருட்களை வாங்க ஊக்குவிக்கவும், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை வளர்க்கவும் முடிகிறது. ஆன்லைன் ஸ்டோர்களை வடிவமைத்தல், தயாரிப்பு பட்டியலை உருவாக்குதல், சந்தை ஆராய்ச்சி நடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவையும் இதில் சாத்தியம்.



