VIDEOS
May 24, 2022
போட்டித் தேர்வில் வெற்றி பெற்றும் வேலை வழங்காமல் இழுத்தடிப்பு - சிறப்பாசிரியர்கள் வேதனை
போட்டித் தேர்வில் வெற்றி பெற்றும், ஆண்டுக்கணக்கில் வேலை வழங்காமல் இழுத்தடிப்பதாக, சிறப்பாசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, அரசு பள்ளிகளில், தையல், ஓவியம் , உடற்கல்வி, இசை என 4 பிரிவுகளில் ஆயிரத்து 325 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், 150 பேர் விடுபட்டுள்ளனர். 2 கட்டமாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வு பட்டியலில் இடம்பெற்றபோதும், இவர்களுக்கு வேலை வழங்காமல் ஆசிரியர் தேர்வு வாரியம் இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்