Training
December 26, 2024
Showing posts with label Training. Show all posts
Showing posts with label Training. Show all posts
Thursday, December 26, 2024
Saturday, December 21, 2024
Friday, October 11, 2024
Wednesday, July 31, 2024
Wednesday, March 13, 2024
Friday, August 25, 2023
Training
August 25, 2023
எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி
எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி Training of government school teachers to teach English in a simple way எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி
அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (‘சமக்ர சிக்ஷா’), ஜாலி ஃபியூச்சா்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய முறையிலான பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
ஆசிரியா்களுக்கான ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் ‘ஜாலிஃபோனிக்ஸ்’ முறையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆக.31-ஆம் தேதி வரை 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஜாலி ஃபோனிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு வேடிக்கையான முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்கான ஒரு விளையாட்டு வழி முறையாகும். கதை மற்றும் செயல்பாடுகள் மூலம் எழுத்து ஒலிகளைக் கற்றல், எழுத்து அமைப்பு, சொற்களில் உள்ள ஒலியைக் கண்டறிதல் உள்ளிட்ட 5 அத்தியாவசிய திறன்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறையாகும். பயிற்சிக்கான பாடத்திட்டமும் இந்தத் திறன்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கில்பா்ட் ஜாலி உருவாக்கிய ‘ஜாலி ஃபோனிக்ஸ்’ முறை ஒலிகளை உச்சரிப்பதில் குழந்தைகளைத் திருத்த ஆசிரியா்களுக்கு உதவுகிறது. எழுத்து உருவாக்கம், எழுத்து ஒலிகள், கலத்தல், பிரித்தல் ஆகியவற்றை சரியாக தெரியப்படுத்த ‘கேம்கள்’ பதிவேற்றப்பட்டுள்ளன.
ஜாலி லோ்னிங் லிமிடெட் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள பயிற்சியாளா்களால் ஆசிரியா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டத்தில் ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டு எழுத்தின் ஒலிகள் மற்றும் வகுப்பில் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு ஆா்வத்தை வெளிப்படுத்தினா்.
திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ‘சமக்ர சிஷா’ மாநில திட்ட இயக்குநா் எம். ஆா்த்தி, ஜாலி ஃபியூச்சா்ஸ் திட்ட மேலாளா் எஸ்.வி.கோமதி உள்ளிட்டோா் மேற்கொண்டனா் என அவா்கள் தெரிவித்தனா்.
Friday, July 21, 2023
Thursday, July 06, 2023
Thursday, May 11, 2023
Thursday, January 26, 2023
Training for class 4 and 5 teachers
January 26, 2023
4, 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பயிற்சி Training for class 4 and 5 teachers
4, 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பயிற்சி Training for class 4 and 5 teachers
அரசுப் பள்ளிகளில் 4, 5-ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பாடம் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக முதன்மைக் கருத்தாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மதுரையில் வெள்ளிக்கிழமை (ஜன.27) முதல் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு அண்மையில் பயிற்சி தரப்பட்டது. தொடா்ந்து 4, 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பாடம் சாா்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அதன்படி, முதன்மைக் கருத்தாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், எஸ்சிஇஆா்டி பொறுப்பாளா்கள் ஆகியோருக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மதுரையில் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. இதற்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் பட்டியலும் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பட்டியலில் உள்ள ஆசிரியா்கள் உட்பட அனைவரும் பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 4, 5-ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பாடம் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக முதன்மைக் கருத்தாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மதுரையில் வெள்ளிக்கிழமை (ஜன.27) முதல் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு அண்மையில் பயிற்சி தரப்பட்டது. தொடா்ந்து 4, 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பாடம் சாா்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அதன்படி, முதன்மைக் கருத்தாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், எஸ்சிஇஆா்டி பொறுப்பாளா்கள் ஆகியோருக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மதுரையில் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. இதற்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் பட்டியலும் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பட்டியலில் உள்ள ஆசிரியா்கள் உட்பட அனைவரும் பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, January 10, 2023
Training
January 10, 2023
மருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்கராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி, கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மருந்தியல் பட்டயப் பயிற்சி (டி.ஃபாா்ம்) சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜன. 10 முதல் 20-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுவதற்கான தேதி, நேரம் குறித்த தகவல்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும்.
இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் பாடங்களை படித்து இரண்டாமாண்டு பியூசி தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-22222681 என்ற தொலைபேசி அல்லது ல்ழ்ண்ய்ஸ்ரீண்ல்ஹப்.ஞ்ஸ்ரீல்123ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்கராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி, கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மருந்தியல் பட்டயப் பயிற்சி (டி.ஃபாா்ம்) சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜன. 10 முதல் 20-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுவதற்கான தேதி, நேரம் குறித்த தகவல்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும்.
இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் பாடங்களை படித்து இரண்டாமாண்டு பியூசி தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-22222681 என்ற தொலைபேசி அல்லது ல்ழ்ண்ய்ஸ்ரீண்ல்ஹப்.ஞ்ஸ்ரீல்123ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, November 15, 2022
Training
November 15, 2022
1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி: ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்ய உத்தரவு
1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி: ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்ய உத்தரவு
தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மைகளின் சிறப்புகளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக 1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்க இருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டிடக்கலை, கல்வெட்டுகள், பாசன கட்டுமானங்கள், கலைகள் மூலம் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரங்கள், தொன்மைகளை அறிய முடிகிறது. இவற்றைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் குறித்து உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரலில் தமிழக அரசு அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக, தொல்லியல் ஆர்வமுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பயிற்சிக்கு தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அளிக்கப்பட உள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு அறிவித்திருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: தமிழர்களின் தொன்மைகளை பாதுகாக்கும் வகையிலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சியளிக்க வேண்டும் என மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அவரது பரிந்துரையின்பேரில், 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது, முதல்கட்டமாக தொல்லியல் ஆர்வமும், அனுபவமும் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,460 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.
இவர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும், இந்த பயிற்சியில், பட்டதாரி ஆசிரியர்கள் என்று சுருக்காமல் ஆர்வமுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க வேண்டும். பயிற்சிக்குப் பிறகு அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்களை அமைக்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார். இவர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மைகளின் சிறப்புகளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக 1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்க இருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டிடக்கலை, கல்வெட்டுகள், பாசன கட்டுமானங்கள், கலைகள் மூலம் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரங்கள், தொன்மைகளை அறிய முடிகிறது. இவற்றைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் குறித்து உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரலில் தமிழக அரசு அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக, தொல்லியல் ஆர்வமுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பயிற்சிக்கு தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அளிக்கப்பட உள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு அறிவித்திருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: தமிழர்களின் தொன்மைகளை பாதுகாக்கும் வகையிலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சியளிக்க வேண்டும் என மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அவரது பரிந்துரையின்பேரில், 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது, முதல்கட்டமாக தொல்லியல் ஆர்வமும், அனுபவமும் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,460 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.
இவர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும், இந்த பயிற்சியில், பட்டதாரி ஆசிரியர்கள் என்று சுருக்காமல் ஆர்வமுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க வேண்டும். பயிற்சிக்குப் பிறகு அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்களை அமைக்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார். இவர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
Sunday, November 13, 2022
Training
November 13, 2022
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத் தும் நோக்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நவ.26-ஆம் தேதி குறுவள மைய பயிற்சி நடத்தப்பட உள்ளது.
அதன்படி 1,2-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சியும்,4.5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 442 முதன்மைக் கருத்தாளர் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியை சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் திட்டமிட்டு மேற்கொள்ளும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத் தும் நோக்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நவ.26-ஆம் தேதி குறுவள மைய பயிற்சி நடத்தப்பட உள்ளது.
அதன்படி 1,2-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சியும்,4.5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 442 முதன்மைக் கருத்தாளர் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியை சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் திட்டமிட்டு மேற்கொள்ளும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
Thursday, September 15, 2022
Training
September 15, 2022
Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers - தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.
தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள். - Primary School – 3 days training for all teachers – SCERT Director's Procedures.
SCERT Director's Procedures for Providing Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers from 6th to 8th October தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006.
ந.க.எண்: 2411/ஈ2/2021 நாள். 4. .09.2022
பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் சார்பு.
இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ஈ2/2021, நாள்.09.09.2022.
பார்வை :
பார்வையில் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 27.09.2022 முதல் 29.09.2022 வரை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப தங்கள் மாவட்டங்களில் உள்ள ஒன்றியத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தகுந்த ஆர்வமிக்க, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் செயல்படும் DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி இடத்தினை தேர்வு செய்தும், ஒரு பயிற்சி அறைக்கு 40 நபர்களுக்கு மிகாமலும், பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், முதன்மை கருத்தாளர் பயிற்சி முடிந்த பின் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஓவியம், கலை மற்றும் கைவினைப்பொருள்கள் செய்யும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கற்றல் கற்பித்தல் பொருள்கள் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் DIET முதல்வர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.10.2022 முதல் 08.10.2022 வரை மூன்று நாட்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் உட்பட) நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான உத்தேச செலவினம் இணைப்பு - 1ல் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு தங்கள் '
மாவட்டத்தில் இருப்பிலுள்ள தொகை போக மீதமுள்ள செலவினத்திற்கு இந்நிறுவன Diksha நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, தங்கள் நிறுவனத்தில் திட்ட நிதி மற்றும் மானிய நிதியில் இருப்பிலுள்ள தொகையின் விவரம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை இணைப்பு 2-ல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக tnscertdsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இணைப்பு -3ல் உள்ள படிவத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகளின் விவரம் சார்ந்த அட்டவணையை பூர்த்தி செய்து உடனடியாக tnscert2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
1. அரசு முதன்மை செயலாளர். பள்ளிகல்வித்துறை, தலைமை செயலகம் .
சென்னை - 09 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 2. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளி கல்வி ஆணையரகம்,
சென்னை-6. தங்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. 3. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி, சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
4. தொடக்கக்கல்வி இயக்குநர் சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
SCERT Director's Procedures for Providing Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers from 6th to 8th October தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006.
ந.க.எண்: 2411/ஈ2/2021 நாள். 4. .09.2022
பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் சார்பு.
இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ஈ2/2021, நாள்.09.09.2022.
பார்வை :
பார்வையில் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 27.09.2022 முதல் 29.09.2022 வரை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப தங்கள் மாவட்டங்களில் உள்ள ஒன்றியத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தகுந்த ஆர்வமிக்க, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் செயல்படும் DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி இடத்தினை தேர்வு செய்தும், ஒரு பயிற்சி அறைக்கு 40 நபர்களுக்கு மிகாமலும், பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், முதன்மை கருத்தாளர் பயிற்சி முடிந்த பின் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஓவியம், கலை மற்றும் கைவினைப்பொருள்கள் செய்யும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கற்றல் கற்பித்தல் பொருள்கள் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் DIET முதல்வர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.10.2022 முதல் 08.10.2022 வரை மூன்று நாட்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் உட்பட) நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான உத்தேச செலவினம் இணைப்பு - 1ல் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு தங்கள் '
மாவட்டத்தில் இருப்பிலுள்ள தொகை போக மீதமுள்ள செலவினத்திற்கு இந்நிறுவன Diksha நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, தங்கள் நிறுவனத்தில் திட்ட நிதி மற்றும் மானிய நிதியில் இருப்பிலுள்ள தொகையின் விவரம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை இணைப்பு 2-ல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக tnscertdsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இணைப்பு -3ல் உள்ள படிவத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகளின் விவரம் சார்ந்த அட்டவணையை பூர்த்தி செய்து உடனடியாக tnscert2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
1. அரசு முதன்மை செயலாளர். பள்ளிகல்வித்துறை, தலைமை செயலகம் .
சென்னை - 09 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 2. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளி கல்வி ஆணையரகம்,
சென்னை-6. தங்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. 3. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி, சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
4. தொடக்கக்கல்வி இயக்குநர் சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
Tuesday, August 23, 2022
Training
August 23, 2022
கோவையில் குரூப் -1 தோ்வுக்கு இலவச பயிற்சி
கோவையில் குரூப் -1 தோ்வுக்கு இலவச பயிற்சி
கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், உதவி இயக்குநா் உள்ளிட்ட பிரிவுகளில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் -1 தோ்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரா்கள் தோ்வினை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் குரூப்-1 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் உள்ளிட்ட தோ்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மேலும், குரூப் -1 தோ்வுக்கு சம்பந்தமான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். எனவே அரசுத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், உதவி இயக்குநா் உள்ளிட்ட பிரிவுகளில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் -1 தோ்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரா்கள் தோ்வினை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் குரூப்-1 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் உள்ளிட்ட தோ்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மேலும், குரூப் -1 தோ்வுக்கு சம்பந்தமான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். எனவே அரசுத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, August 11, 2022
Training
August 11, 2022
அரசு ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் வழங்கும் கம்ப்யூட்டர் பயிற்சி
மைக்ரோசாப்ட் நிறுவனம் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்துடனும், திறன் உருவாக்க ஆணையத்துடனும் இணைந்து பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த 25 லட்சம் ஊழியர்களுக்கு கணினி அறிவை அதிகரிக்கும் பயிற்சியினை வழங்க உள்ளது. இதன் மூலம் பொது மக்கள் சார்ந்த சேவைகளை அவர்களால் சிறப்பாக வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரம் அளிக்கும். இதன் மூலம் சமூகத்தின் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு பயனுள்ள சேவைகளை திறமையாக வழங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் செக்ஷன் அதிகாரிகள், உதவி செக்ஷன் அதிகாரிகள், கிளர்க், அப்பர் டிவிஷன் கிளர்க், லோயர் டிவிஷன் கிளர்க், கீழ்நிலை செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம், சமூக நிதி, விமானப் போக்குவரத்து, கப்பல் மற்றும் துறைமுகங்கள், தொழிலாளர் அமைச்சகம் உள்ளிட்டவற்றில் திறன் மேம்பாட்டு திட்டங்களை சிபிசி மேற்கொள்கிறது. இந்த வேலைகளில் இருப்பவர்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் செயலிகளான வேர்ட், எக்சல் மற்றும் பவர்பாய்ன்ட் சமர்பிப்பு போன்றவற்றை தொழில்முறையாக உருவாக்குவதில் பின்தங்கியுள்ளதை பார்க்கிறோம். எனவே அரசின் பங்களிப்பின் கிழ் வழங்கப்படும் பயிற்சியால், அதிகாரிகள் தங்கள் டிஜிட்டல் உற்பத்தி திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவும். அதனால் அவர்கள் பல்வேறு அமைச்சகங்களில் தங்கள் பணியினை திறம்பட நிறைவேற்ற முடியும்.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரம் அளிக்கும். இதன் மூலம் சமூகத்தின் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு பயனுள்ள சேவைகளை திறமையாக வழங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் செக்ஷன் அதிகாரிகள், உதவி செக்ஷன் அதிகாரிகள், கிளர்க், அப்பர் டிவிஷன் கிளர்க், லோயர் டிவிஷன் கிளர்க், கீழ்நிலை செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம், சமூக நிதி, விமானப் போக்குவரத்து, கப்பல் மற்றும் துறைமுகங்கள், தொழிலாளர் அமைச்சகம் உள்ளிட்டவற்றில் திறன் மேம்பாட்டு திட்டங்களை சிபிசி மேற்கொள்கிறது. இந்த வேலைகளில் இருப்பவர்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் செயலிகளான வேர்ட், எக்சல் மற்றும் பவர்பாய்ன்ட் சமர்பிப்பு போன்றவற்றை தொழில்முறையாக உருவாக்குவதில் பின்தங்கியுள்ளதை பார்க்கிறோம். எனவே அரசின் பங்களிப்பின் கிழ் வழங்கப்படும் பயிற்சியால், அதிகாரிகள் தங்கள் டிஜிட்டல் உற்பத்தி திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவும். அதனால் அவர்கள் பல்வேறு அமைச்சகங்களில் தங்கள் பணியினை திறம்பட நிறைவேற்ற முடியும்.
Saturday, July 09, 2022
Thursday, June 16, 2022
Training class for teachers of 1st to 12th class
June 16, 2022
1 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
1 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
1 முதல் 12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரும் 18ஆம் தேதி தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுதல், மின்னணு பதிவேடுகளைப் பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
1 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
1 முதல் 12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரும் 18ஆம் தேதி தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுதல், மின்னணு பதிவேடுகளைப் பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tuesday, May 17, 2022
Training Classes
May 17, 2022
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி
Elementary school teachers working in government schools have been ordered to provide one week of counting and writing training. In this regard, a circular has been sent to the Primary Education Officers on behalf of SCERT, the State Educational Research and Training Institute, the Curriculum Preparation Division of the Department of School Education:
Counting and writing training classes for the coming academic year have been arranged for government school teachers working in primary and secondary schools. As a first step, six days of training classes will be conducted in Madurai from the 23rd to the 28th for the lecturers and teachers who will act as the primary facilitators.
After the primary counselors have completed their training, training classes should be conducted for other teachers through the primary counselors as soon as the schools reopen. NCERT சார்பில் ஒரு வாரம் பயிற்சி
அரசு பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு வாரம் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையின் பாட திட்ட தயாரிப்பு பிரிவான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, முதன்மை கருத்தாளர்களாக செயல்படும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும், 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மதுரையில் ஆறு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியை முடித்த பின், பள்ளிகள் திறந்ததும், மற்ற ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர்கள் வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Counting and writing training classes for the coming academic year have been arranged for government school teachers working in primary and secondary schools. As a first step, six days of training classes will be conducted in Madurai from the 23rd to the 28th for the lecturers and teachers who will act as the primary facilitators.
After the primary counselors have completed their training, training classes should be conducted for other teachers through the primary counselors as soon as the schools reopen. NCERT சார்பில் ஒரு வாரம் பயிற்சி
அரசு பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு வாரம் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையின் பாட திட்ட தயாரிப்பு பிரிவான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, முதன்மை கருத்தாளர்களாக செயல்படும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும், 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மதுரையில் ஆறு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியை முடித்த பின், பள்ளிகள் திறந்ததும், மற்ற ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர்கள் வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது




