Vice Chancellors
June 27, 2026
Showing posts with label Vice Chancellors. Show all posts
Showing posts with label Vice Chancellors. Show all posts
Saturday, June 27, 2026
Monday, August 21, 2023
Vice Chancellors
August 21, 2023
துணைவேந்தர் பணி ஒய்வு: சென்னை பல்கலை.யை நிர்வகிக்க 4 பேர் குழு நியமனம்!
துணைவேந்தர் கவுரி பணி ஒய்வு: சென்னை பல்கலை.யை நிர்வகிக்க 4 பேர் குழு நியமனம்
சென்னை பல்கலைக்கழக நிர்வாக பணிகளை கண்காணிக்க உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி எஸ்.கவுரி நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததையடுத்து அவர், நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து புதிய துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பான தேடல் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தலின்படி தமிழக அரசு விரைவில் அறிவிக்கும். அதன்பின் தேடல் குழு பரிந்துரைக்கும் நபர்களில் தகுதியான ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்வார். இந்தப் பணிகள் முடியும்வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் உயர்கல்வித் துறை செயலர் ஒருங்கிணைப்பாளராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர், சென்னை ஐஐடி பேராசிரியர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்புக் குழுவுக்கு ஒப்புதல் பெறுவதற்கான ஆட்சிமன்ற குழுக் கூட்டம் சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் பெறப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் 4 பேர் கொண்ட குழுவுக்கு பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Wednesday, August 31, 2022
Vice Chancellors
August 31, 2022
துணை வேந்தர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!
''மாநில அரசின் கொள்கைகளை பின்பற்றியே, துணை வேந்தர்களும், பல்கலைகளும் செயல்பட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 22 பல்கலைகளின் துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கம், முதல்வர் தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. ரூ.3,000 கோடிமுதல்வர் பேசியதாவது:
தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 22 பல்கலைகள் செயல்படுகின்றன. இவற்றுக்காக அரசு ஆண்டுதோறும், 3,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம், 27.1 சதவீதம். அதில் தமிழகத்தின் பங்கு, 51.4 சதவீதம். தேசிய தரவரிசையில் தமிழக நிறுவனங்கள், 16 சதவீதம் இடம் பெற்றுள்ளன; இந்த நிலை மேலும் உயர வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற திறனை வளர்க்கும், ஒருங்கிணைந்த பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.
இதற்கு ஏற்ற, ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.உலகத் தரத்துக்கு தமிழக பட்டப் படிப்புகளை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில், ஆராய்ச்சிகளை மேம்படுத்த ஆண்டுதோறும், 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை, மாணவர்கள், ஆசிரியர்களிடம் பெறப்படும்.
மேலும், 'முதல்வர் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம்' துவங்கப்படும். மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தி, இதற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு, பல்கலைகள் செயல்பட வேண்டும். அறிவியல் சிந்தனையுள்ள சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும், பல்கலைகள் உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணைய பரிந்துரைப்படி, துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். இது, மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்னை.எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில், பல்கலைகள் செயல்பட வேண்டும். துணை வேந்தர்களும் அவ்வாறே செயல்பட வேண்டும்.
கல்வியை அன்னியப்படுத்தும் அத்தனையையும் எதிர்க்க வேண்டும்.புதிய பாடங்கள்எனவே தான், 'நீட்' தேர்வு மட்டுமின்றி, புதிய தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கிறோம். மாநில கல்வி கொள்கை அமைக்க, குழு அமைத்துள்ளோம். கல்லுாரிகளில் புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள்; புதிய பட்டப் படிப்புகளை கொண்டு வாருங்கள், இந்த ஆட்சி காலத்தை உயர் கல்வியின் பொற்காலமாக திகழ வைப்பது துணை வேந்தர்களின் கடமை.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 22 பல்கலைகள் செயல்படுகின்றன. இவற்றுக்காக அரசு ஆண்டுதோறும், 3,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம், 27.1 சதவீதம். அதில் தமிழகத்தின் பங்கு, 51.4 சதவீதம். தேசிய தரவரிசையில் தமிழக நிறுவனங்கள், 16 சதவீதம் இடம் பெற்றுள்ளன; இந்த நிலை மேலும் உயர வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற திறனை வளர்க்கும், ஒருங்கிணைந்த பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.
இதற்கு ஏற்ற, ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.உலகத் தரத்துக்கு தமிழக பட்டப் படிப்புகளை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில், ஆராய்ச்சிகளை மேம்படுத்த ஆண்டுதோறும், 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை, மாணவர்கள், ஆசிரியர்களிடம் பெறப்படும்.
மேலும், 'முதல்வர் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம்' துவங்கப்படும். மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தி, இதற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு, பல்கலைகள் செயல்பட வேண்டும். அறிவியல் சிந்தனையுள்ள சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும், பல்கலைகள் உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணைய பரிந்துரைப்படி, துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். இது, மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்னை.எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில், பல்கலைகள் செயல்பட வேண்டும். துணை வேந்தர்களும் அவ்வாறே செயல்பட வேண்டும்.
கல்வியை அன்னியப்படுத்தும் அத்தனையையும் எதிர்க்க வேண்டும்.புதிய பாடங்கள்எனவே தான், 'நீட்' தேர்வு மட்டுமின்றி, புதிய தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கிறோம். மாநில கல்வி கொள்கை அமைக்க, குழு அமைத்துள்ளோம். கல்லுாரிகளில் புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள்; புதிய பட்டப் படிப்புகளை கொண்டு வாருங்கள், இந்த ஆட்சி காலத்தை உயர் கல்வியின் பொற்காலமாக திகழ வைப்பது துணை வேந்தர்களின் கடமை.இவ்வாறு அவர் பேசினார்.