Breaking

Showing posts with label Insurance Scheme. Show all posts
Showing posts with label Insurance Scheme. Show all posts

Sunday, March 19, 2023

March 19, 2023

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை - கடைசி தேதி: 2.4.2023

Infrastructure Finance Corporation of India Assistant Manager Job - Last Date: 2.4.2023 - இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை!

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பணி: Assistant Manager(Grade A)

காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.80,000

வயது வரம்பு: 28.2.2023 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும் சலுகை வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம், எம்பிஏ, எல்எல்பி, சிஏ அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஏதாவதொரு நிதியியல் நிறுவனத்தில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iifcl.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 2.4.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Saturday, October 01, 2022

October 01, 2022

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்! - If you invest in this scheme you will get Rs.10 lakhs in just 3 years!

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்! - If you invest in this scheme you will get Rs.10 lakhs in just 3 years!

எஸ்பிஐயில் 3 வருட எஃப்டிக்கு 6.10 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது, அதேசமயம் தபால் அலுவலகத்தில் 3 வருட டெபாசிட்டுக்கு 6.7% வட்டி கிடைக்கிறது.

வங்கிகளில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை தருகிறது.

தபால் நிலையங்கள் அதிக வட்டியை தருகின்றன.

Unsav திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது.



பெரும்பாலான மக்கள் தங்களின் எதிர்கால நிதி தேவைகளை பூர்த்தி செய்திகொள்ள பல்வேறு முதலீடு திட்டங்களை தேர்வு செய்கின்றனர். இதற்கென்றே பல தனியார் வங்கிகள், அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகின்றன. ஆனால் இதில் எந்த நிறுவனத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்வது என்கிற குழப்பம் மக்களுக்கு இருந்து வருகிறது. முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதாக இருக்குமா, முதலீட்டின் மூலம் நிலையான வருமானம் கிடைக்குமா என பல கேள்விகள் முதலீட்டாளரின் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்போது வங்கிகளில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பையும், பலனையும் தருமா அல்லது தபால் நிலையங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு பாதுகாப்பையும், பலனையும் தருமா என்பது பற்றி விரிவாக காண்போம்.


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பிக்ஸட் டெபாசிட் என்றும், தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்படும் பணம் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் என்றும் அழைக்கப்படுகிறது. 1 முதல் 5 வருடங்கள் வரை போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம், இங்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 5.5% வட்டி கிடைக்கும், அதேசமயம் 3 வருட முதலீட்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் ரூ. 8,35,000 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.10,19,000 கிடைக்கும். இதில் ரூ.1,84,194 வட்டி சேர்த்து மொத்தம் ரூ.10,19,194 கிடைக்கும்.

எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள Unsav திட்டத்தில் அக்டோபர் 28, 2022 வரை கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருடத்திற்கு 6.10% வட்டி வழங்கப்படுகிறது, அதுவே மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.8,35,000 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.10 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். இதில் ரூ.1,66,000 வட்டி சேர்த்து மொத்தம் ரூ.10,01,296 கிடைக்கும். எஸ்பிஐயில் 3 வருட எஃப்டிக்கு 6.10 சதவிகிதம் வட்டியும், தபால் அலுவலக டெபாசிட்டுக்கு 6.7% வட்டியும் கிடைக்கிறது. இந்த இரண்டையும் வைத்து பார்க்கையில் எஸ்பிஐ வங்கி திட்டத்தில் முதலீடு செய்வதை காட்டிலும் தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக தெரிகிறது.

Thursday, September 01, 2022

September 01, 2022

ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்ப ரூ.10,000 கிடைக்கும்.. எப்படி?

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 வரை எடுக்கலாம், எப்படி என்பது இங்கே செய்தியில் பார்ப்போம்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2014 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர நாள் உரையில் ஜன் தன் ஜோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தார்.

மேலும், ஏழை எளிய மக்கள் பணம் அனுப்புதல், கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதிச் சேவைகளுக்கு தனிநபர்கள் வங்கிச் சேவைக்குள் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆகஸ்ட் 28 தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சலுகைகள்:

ஜன் தன் யோஜனா திட்டத்தில் நிறைய வசதிகளும் சலுகைகளும் உள்ளன. அதில் முக்கியமான ஒரு வசதிதான் ஓவர் டிராஃப்ட். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய ஜன் தன் யோஜனா கணக்குகளை வைத்திருப்பவர்கள் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் (ஜீரோ பேலன்ஸ்) கூட நீங்கள் ரூ.10,000 வரை எடுக்க முடியும். கணக்கில் பணம் இருந்தாலும் இதை நீங்கள் எடுக்கலாம்.

இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் ஓவர் டிராஃப்ட் முறையில் ரூ.5000 மட்டுமே எடுக்க முடியும்.

இதன் பின்னர் அது இரட்டிப்பாக்கப்பட்டு தற்போது ரூ.10,000 வரை எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. ரூ.2000 வரை மட்டுமே நிபந்தனை இல்லாமல் எடுக்க முடியும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்த குறைந்தது 6 மாதங்கள் ஜன் தன் கணக்கை பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அப்போதுதான் ரூ.10,000 எடுக்க முடியும். இல்லாவிட்டால் ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவதற்கான வயது வரம்பு 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜன் தன் யோஜனா கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் மற்றும் ரிஃபைனான்ஸ் ஏஜென்சி வங்கி திட்டத்திற்குத் தகுதியுடையவை.

Tuesday, August 23, 2022

August 23, 2022

மாற்றுத் திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்



மாற்றுத் திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Total Pageviews

Search This Blog