Employment Camp
January 20, 2023
நாளை சனிக்கிழமை மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்! District level employment camp tomorrow Saturday!
District level employment camp tomorrow Saturday!
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தனியார் கல்லூரியில் நாளை மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக , நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் வேலைவாயற்ற இளைஞர்களுக்கு (ஆண், பெண், திருநர்கள்) மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நாளை சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நல்லம்பள்ளி ஒன்றியம் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8ஆம் வகுப்பு முதல், ஐடிஐ , பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், பொறியியல் படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண், பெண், திருநர்கள்/ திருநங்கைகள்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக , நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் வேலைவாயற்ற இளைஞர்களுக்கு (ஆண், பெண், திருநர்கள்) மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நாளை சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நல்லம்பள்ளி ஒன்றியம் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8ஆம் வகுப்பு முதல், ஐடிஐ , பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், பொறியியல் படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண், பெண், திருநர்கள்/ திருநங்கைகள்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
