Supreme Court orders
December 15, 2025
Showing posts with label Supreme Court orders. Show all posts
Showing posts with label Supreme Court orders. Show all posts
Monday, December 15, 2025
Thursday, November 06, 2025
Monday, April 07, 2025
Friday, April 04, 2025
Tuesday, December 05, 2023
Supreme Court orders
December 05, 2023
மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு விவகாரம் சென்னை ஹை கோர்ட் தீர்ப்பு.
மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு விவகாரம் சென்னை ஹை கோர்ட் தீர்ப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கே.ராஜசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சீர்காழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1986-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின்னர் 2006-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று சட்டநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.
1987-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த பாபு என்பவர் தற்போது புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் என்னைவிட பணியில் இளையவர். ஆனால், என்னை விட ரூ.4,400 அதிகமாக ஊதியம் பெற்று வருகிறார். ஊதியம் அதிகம்
எனவே, எனக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரிடம் மனு கொடுத்தேன். ஆனால் அந்த மனுவை நிராகரித்து விட்டார். என்னை விட இளையவரான பாபுவுக்கு நிகராக ஊதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வி. காசிநாத பாரதி ஆஜராகி, பணி விதிகளின்படியும், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புகளின் படியும், பணியில் இளையவரை விட மூத்தவர் குறைவான சம்பளம் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அதை அரசு சரி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரின் உத்தரவை ரத்து செய்கிறேன். பணியில் இளையவரான பாபு பெறும் ஊதியத்தை மனுதாரருக்கும் 8 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Monday, October 09, 2023
Supreme Court orders
October 09, 2023
அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்!
Pension benefits for government employees within six months - Madras High Court! - அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்!
அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் மாம்பலம் – கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றியவர் டி.வி.எஸ் பெருமாள். இவர் கடந்த 1987 -ம் ஆண்டு பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தார்.
இதனால், அவரது மனைவி ஜெயா, குடும்ப ஓய்வூதியம் கேட்டு சப் – கலெக்டரிடம் மனு அளித்தார். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக 2004 -ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயா வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2017 -ம் ஆண்டு ஜெயா பெருமாளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு நிலுவையில் இருக்கும் போதே ஜெயா இறந்துவிட்டார். இதனால் இந்த வழக்கில் அவரது மகன் பாபு சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலையாரியாக பணியாற்றிய பெருமாள் இறந்த பின்பு, அவரது மனைவிக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி கிடைக்கவில்லை. அதற்குள் அவரும் இறந்து விட்டார்.
எனவே, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் கிடைக்க வேண்டும். அதுக்கு தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் மாம்பலம் – கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றியவர் டி.வி.எஸ் பெருமாள். இவர் கடந்த 1987 -ம் ஆண்டு பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தார்.
இதனால், அவரது மனைவி ஜெயா, குடும்ப ஓய்வூதியம் கேட்டு சப் – கலெக்டரிடம் மனு அளித்தார். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக 2004 -ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயா வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2017 -ம் ஆண்டு ஜெயா பெருமாளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு நிலுவையில் இருக்கும் போதே ஜெயா இறந்துவிட்டார். இதனால் இந்த வழக்கில் அவரது மகன் பாபு சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலையாரியாக பணியாற்றிய பெருமாள் இறந்த பின்பு, அவரது மனைவிக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி கிடைக்கவில்லை. அதற்குள் அவரும் இறந்து விட்டார்.
எனவே, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் கிடைக்க வேண்டும். அதுக்கு தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Friday, September 22, 2023
Supreme Court orders
September 22, 2023
கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்ய தடை - STAY ORDER - PDF
கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்ய தடை
கணினி பயிற்றுநர் நிலை-2 லிருந்து கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு பெற்றதற்காக ஊதியம் நிர்ணயம் செய்ததற்கு (3% ஊதிய உயர்வு ) சென்னை பள்ளி கல்வி ஆணையரக தணிக்கையில் தடை விதித்ததன் காரணமாக , தலைமை ஆசிரியரால் ஊதியத்தில் பிடித்தம் செய்ய இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஊதியத்தில் பிடித்தம் செய்ய இடைக்கால தடை ஆணை ( INTERIM STAY ORDER ) பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
STAY ORDER FOR AUDIT RECOVERY
CLICK HERE TO DOWNLOAD PDF
Tuesday, August 22, 2023
Supreme Court orders
August 22, 2023
அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் - சுப்ரீம் கோர்ட்டு உருவாக்குகிறது
அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் - சுப்ரீம் கோர்ட்டு உருவாக்குகிறது
ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு வசதிகள் செய்து தருவது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை உத்தரபிரதேச மாநில அரசு நிறைவேற்றவில்லை.
இதனால், அலகாபாத் ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உத்தரபிரதேச அரசின் நிதித்துறை செயலாளர் ஷாகித் மன்சூர் அப்பாஸ் ரிஸ்வி, சிறப்பு செயலாளர் சரயு பிரசாத் சர்மா ஆகியோர் கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த ஏப்ரல் மாதம், அலகாபாத் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை காவலில் எடுக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதே சமயத்தில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2 அதிகாரிகளையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
கோர்ட்டு உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது தொடரப்படும் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை கையாள வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
வழிகாட்டு நெறிமுறைகள்
நிலுவையில் உள்ள வழக்குகளில், அரசு அதிகாரிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தாலே போதுமானது. அவர்கள் நேரில் வரத் தேவையில்லை. ஆனால், கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராவது தேவைப்படலாம்.
அத்தகைய சூழ்நிலையில், அரசு அதிகாரிகளை சம்மன் அனுப்பி அழைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு உருவாக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் இவை பொருந்துவதாக அமையும் என்று நீதிபதிகள் கூறினர்.
Thursday, February 23, 2023
Supreme Court orders
February 23, 2023
மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த வேலூர் பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்
மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த வேலூர் பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு சேர்க்கை கோரி வேலூரில் உள்ள மிஷனரி பள்ளியை தாய் நாடியுள்ளார். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி குழந்தையை சேர்க்க மறுத்துள்ளனர்.
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு சேர்க்கை கோரி வேலூரில் உள்ள மிஷனரி பள்ளியை தாய் நாடியுள்ளார். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி குழந்தையை சேர்க்க மறுத்துள்ளனர்.
Saturday, February 11, 2023
tuition fees
February 11, 2023
மாணவர்களின் கல்வி கட்டணத்தில் முறைகேடு; நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் கல்வி கட்டணத்தில் முறைகேடு; நீதிமன்றம் உத்தரவு
-
Irregularities in students' tuition fees; Court order
மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை பெற்று முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட ஒய்எம்சிஏ கல்லூரியின் திட்ட செயலாளரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஒய்எம்சிஏ கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணமாக ரூ.1 கோடியே 69 லட்சத்து 59,137 வசூல் செய்யப்பட்டது. இந்த தொகையில் ரூ. 1 கோடியை கல்லூரியின் திட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த பால் தாமஸ் ஆக்சிஸ் வங்கியில் டெபாசிட் செய்யதாகவும், மீதமுள்ள தொகையை கல்லூரி செலவு செய்ததாகவும் கணக்கு காட்டியுள்ளார்.
இதில் முறைகேடு நடந்ததாக கல்லூரியின் தாளாளர் பெஞ்சமின் பிராங்கிளின மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாத கூறப்பட்ட ரூ.1 கோடிக்கான டிடி ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, ஒரு கோடியே 69 லட்சத்து 59,137 ரூபாயை கையாடல் செய்ததாக கல்லூரி சேர்மன் லிபி பிலிப் மேத்யூ, செயலாளர் கோசி மேதியூ, திட்ட செயலாளர் பால்சன் தாமஸ், ஊழியர்கள் மலர்விழி, ரூபாதேவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த இளங்கோவன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பால்சன் தாமஸ் 2022 டிசம்பர் 26ல் கைது ெசய்யப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பால்சன் தாமஸ் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்துவருவதால் ஜாமீன் வழங்ககூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, பால்சன் தாமஸின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை பெற்று முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட ஒய்எம்சிஏ கல்லூரியின் திட்ட செயலாளரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஒய்எம்சிஏ கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணமாக ரூ.1 கோடியே 69 லட்சத்து 59,137 வசூல் செய்யப்பட்டது. இந்த தொகையில் ரூ. 1 கோடியை கல்லூரியின் திட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த பால் தாமஸ் ஆக்சிஸ் வங்கியில் டெபாசிட் செய்யதாகவும், மீதமுள்ள தொகையை கல்லூரி செலவு செய்ததாகவும் கணக்கு காட்டியுள்ளார்.
இதில் முறைகேடு நடந்ததாக கல்லூரியின் தாளாளர் பெஞ்சமின் பிராங்கிளின மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாத கூறப்பட்ட ரூ.1 கோடிக்கான டிடி ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, ஒரு கோடியே 69 லட்சத்து 59,137 ரூபாயை கையாடல் செய்ததாக கல்லூரி சேர்மன் லிபி பிலிப் மேத்யூ, செயலாளர் கோசி மேதியூ, திட்ட செயலாளர் பால்சன் தாமஸ், ஊழியர்கள் மலர்விழி, ரூபாதேவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த இளங்கோவன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பால்சன் தாமஸ் 2022 டிசம்பர் 26ல் கைது ெசய்யப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பால்சன் தாமஸ் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்துவருவதால் ஜாமீன் வழங்ககூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, பால்சன் தாமஸின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sunday, August 21, 2022
unrecognized schools
August 21, 2022
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் மற்றும் நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமலும் செயல்பட்டு வருவதாகக் கூறி, பள்ளியை 3 நாள்களில் மூடவும், மாணவா்களை அருகில் உள்ள பள்ளிகளில் சோ்க்கவும் வட்டாரக் கல்வி அலுவலா் கடந்த ஆக. 2-இல் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து பள்ளி சாா்பில் அதன் நிறுவனா் குப்புசாமி, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிறுவனா் தரப்பில் , ‘சேலம் மாவட்டத்தில் பல பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமலும் இயங்கி வருகின்றன. 2011 முதல் அங்கீகாரம் பெற முயற்சித்து வரும் நிலையில் இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அங்கீகாரம் கோரிய வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலா், தொடக்கக் கல்வி இயக்குநா், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதேசமயம், சேலம் மாவட்டத்தில் அங்கீகாரமும், நகரமைப்பு திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமலும் செயல்பட்டு வருவதாகக் கூறி, பள்ளியை 3 நாள்களில் மூடவும், மாணவா்களை அருகில் உள்ள பள்ளிகளில் சோ்க்கவும் வட்டாரக் கல்வி அலுவலா் கடந்த ஆக. 2-இல் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து பள்ளி சாா்பில் அதன் நிறுவனா் குப்புசாமி, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிறுவனா் தரப்பில் , ‘சேலம் மாவட்டத்தில் பல பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமலும் இயங்கி வருகின்றன. 2011 முதல் அங்கீகாரம் பெற முயற்சித்து வரும் நிலையில் இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அங்கீகாரம் கோரிய வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலா், தொடக்கக் கல்வி இயக்குநா், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதேசமயம், சேலம் மாவட்டத்தில் அங்கீகாரமும், நகரமைப்பு திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.


