Breaking

Showing posts with label Agricultural College. Show all posts
Showing posts with label Agricultural College. Show all posts

Thursday, May 08, 2025

Thursday, February 01, 2024

February 01, 2024

காளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு

Associate Director of Agriculture invites applications for mushroom production techniques training - வேளாண்மை - உழவர் நலத்துறை காளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு

2023-24ம் ஆண்டின் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வேளாண்மைத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை - விரிவாக்க சீரமைப்புத்திட்டம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம். பாப்பாரப்பட்டியுடன் இணைந்து "காளான் உற்பத்தி फ्रीलंप्पलकी" Mushroom Production Techniques என்ற தலைப்பில் 28 விவசாயிகளுக்கு 6 நாட்கள் பயிற்சியாக நடத்தப்படவுள்ளது. எனவே 18-40 வயதிற்குட்பட்ட 10 ஆம் வகுப்பு முடித்த ஆர்வமுள்ள விவசாய இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கலந்து கொண்டு பயன் பெறலாம். தருமபுரி மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றம் கிராமப்புற இளைஞர்கள் தங்களின் புகைப்படம், ஆதார் நகல், மற்றும் கல்வி மாற்றுசான்றிதழ்(TC) நகல் ஆகியவற்றுடன் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உழவர் பயிற்சி நிலையத்தை 03.02.2024-ற்குள் அணுகி விண்ணப்பித்து கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சியில் கலந்து பயன்பெற

Thursday, October 12, 2023

October 12, 2023

வேளாண் பட்டப்படிப்பில் காலி இடங்களுக்கு நாளை (அக்.13) நேரடி சேர்க்கை அறிவிப்பு.

வேளாண் பட்டப்படிப்பில் காலி இடங்களுக்கு நாளை (அக்.13) நேரடி சேர்க்கை அறிவிப்பு. Direct admission notification tomorrow (Oct 13) for vacant seats in Agriculture Degree.

வேளாண் பட்டப்படிப்பில் காலி இடங்களுக்கு நேரடி சேர்க்கை அறிவிப்பு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு நாளை மறுநாள் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப் படிப்பு ( B.Sc - Hons Agriculture (Self Supporting ) மற்றும் தோட்டக்கலை ( BSc (Hons Horticulture) படிப்புகளில், பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கும் காலி இடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை நாளை (அக்.13) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், இந்நாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் நடக்கும் சேர்க்கை நிகழ்வில் நேரடியாக பங்கேற்கலாம். பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து, கலந் தாய்வை தவறவிட்டவர்கள், சான் றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று சேர்க்கையை தவறவிட்டவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த நேரடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு தரவரிசைப்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது. மேலும் விவரங்களை, https://annamalaiuniversity.ac.in’ என்ற இணயதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை பல்கலைக் கழக பதிவாளர் சிங்காரவேல் தெரிவித்துள்ளார்.
October 12, 2023

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதல்வர் அறிவிப்பு



தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும்: பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதல்வர் அறிவிப்பு

தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: மறைந்த வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழக அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அவர் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.தஞ்சாவூர் ஈச்சாங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படுகிறது. இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி என அழைக்கப்படும். வேளாண்மை பல்கலையில் மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்

Wednesday, August 30, 2023

August 30, 2023

வேளாண் பல்கலை.யில் மூன்றாவது நேரடி கலந்தாய்வு!



வேளாண் பல்கலை.யில் நாளை மூன்றாவது நேரடி கலந்தாய்வு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 29, 30 ஆம் தேதிகளில் மூன்றாவது நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் https://tnau.ac.in/ 2023 - 24 ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கு தனியாா் கல்லூரிகளில் காலியாக உள்ள 500 இடங்களுக்கு மூன்றாவது நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்தக் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30), புதன்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை வரை பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இணையதளத்தில் வெளியிடப் பட்டிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

Thursday, April 20, 2023

April 20, 2023

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கான (2023-24) மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேளாண் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி வளாகங்களில் 33 துறைகளில் முதுகலைப் படிப்பையும், 28 துறைகளில் முனைவர் பட்டப்படிப்பையும் வழங்குகிறது. 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறை 19.04.2023 அன்று முதல் தொடங்குகிறது. இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 19.04.2023 அன்று முதல் தொடங்கி 15.05.2023 (நள்ளிரவு மணி 11.59 மணி) வரை மட்டுமே விண்ணப்பதார்கள் இணையவழி வழியாக முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இளமறிவியல் (வேளாண்மை) மற்றும் அதன் சார்ந்த படிப்புகள் முடித்த மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பிற்கும் முதுகலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை எம்.டெக் (வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கும், பட்டப்படிப்பு சான்றிதழல் சமர்பிப்பதன் மூலமாக, தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும், பட்டப்படிப்பு சான்றிதழில் சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். மேலும், விபரங்களுக்கு முதுநிலை மாணவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கை குறித்த தகவல் கையேட்டை படிக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உரிய நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர் சேர்க்கை தொடர்பான ஐயப்பாடுகளுக்கு pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நேரடியாக தொடர்புக் கொள்ள 98489056710 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 09, 2023

February 09, 2023

வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை 10.2.2023 கடைசி

 வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம், வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமன செய்வதற்கான தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையவும். 

பணி: வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்) 
காலியிடங்கள்: 33+4
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

பணி: வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) 
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

பணி: தோட்டக்கலை அலுவலர்
காலியிடங்கள்: 41 + 7
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

தகுதி: வேளாண் பாடத்தில் இளங்கலை, முதுகலை பட்டம், தோட்டக்கலைப் பாடப்பிரிவில் பட்டம், முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழில் போதிய மொழிறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு அடிப்படை.யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.2.2023

Friday, January 13, 2023

January 13, 2023

தமிழ்நாடு வேளாண் அலுவலர் பணிக்கு பிப்ரவரி 10ம் தேதி விண்ணப்பம்

தமிழ்நாடு வேளாண் அலுவலர் பணிக்கு பிப்ரவரி 10ம் தேதி விண்ணப்பம்

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக் கலை அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான போட்டித் தேர்வு எழுத விரும்புவோர் பிப்ரவரி 10ம் தேதி முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்) 37 முன்கொணர்வு பணியிடங்கள், வேளாண் உதவி இயக்குநர் (விரிவாக்கம்) 8 பணியிடங்கள்,தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் 8 தோட்டக் கலை அலுவலர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டித் தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படும். இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்ரவரி 10ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். வேளாண்மை அலுவலருக்கான தேர்வு தாள்1(வேளாண்மையியல்)மே 20ம் தேதி நடக்கும். வேளாண்மை உதவி இயக்குநர் பதவிக்கான தாள் 1 தேர்வு மே 21ம் தேதி நடக்கும். வேளாண்மை அலுவலர், வேளாண் உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கான தாள்2க்கான தேர்வு மே 20ம் தேதி நடக்கும். தோட்டக்கலை அலுவலர் பணிக்கான தாள் 1 தேர்வு மே 21ம் தேதி நடக்கும். இந்த பணிக்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நடக்கும். தாள்1ல் கொள்குறி வகையில் 200 கேள்விகள் இடம் பெறும். தேர்வு நேரம் 3 மணி நேரம்,மொத்த மதிப்பெண்கள் 300, தேர்வுக்கு தகுதி பெற குறைந்த பட்சம் 204 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்சி(அ)ப.ப, மிகவும் பிற்பட்டவர், சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர்(மு), ஆகியோர் 153 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தாள் 2க்கான தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும், ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும். மொத்த மதிப்பெண்கள் 150, நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள்வழங்கப்படும். தேர்வு மையங்கள் 38 மாவட்டங்களில் அமைக்கப்படும். இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த ஆவணங்கள், சான்றுகள் மாற்ற, பதிவேற்ற, மீள்பதிவேற்றம் செய்ய மே 7ம் தேதி இரவு வரை அனுமதிக்கப்படும்.

Tuesday, November 08, 2022

November 08, 2022

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பு!!!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பு!!!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பது

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு (Offline Counselling) நவம்பர் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டில் நேரடி கலந்தாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவிடப்பட்டுள்ளது.

இத்தகவல் மாணவர்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதள வாயிலாகவும் மற்றும் 0422-6611345, 0422-6611346 என்ற தொலைபேசி உதவிச் சேவை எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

Thursday, August 11, 2022

August 11, 2022

கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!
கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரோதாஸ் குமார் பல்கலைகழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா..? என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Wednesday, August 10, 2022

August 10, 2022

முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: வேளாண் பல்கலை. அறிவிப்பு

முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1958-ம் ஆண்டு எம்.எஸ்சி படிப்புகள் தொடங்கப்பட்டன. 1960-ம் ஆண்டு முனைவர் (பி.ஹெச்டி) படிப்புகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் சார்பில், கோவை, மதுரை, மேட்டுப்பாளையம், திருச்சியில் 2 இடங்கள், தேனி, கிள்ளிக்குளம் உள்ளிட்ட 8 கல்லூரிகளில் உள்ள, 32 துறைகளில் எம்.எஸ்சி முதுநிலை பட்டப்படிப்பும், 28 துறைகளில் முனைவர் (பி.ஹெச்டி) பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகிறது.

இரண்டாண்டுகளை கொண்ட முதுநிலை பட்டமேற்படிப்பில் 400 இடங்களும், மூன்றாண்டுகளை கொண்ட முனைவர் பட்ட மேற்படிப்பில் 200 இடங்களும் உள்ளன. நடப்புக் கல்வியாண்டு முதுகலை மற்றும் முனைவர் படிப்பக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை கடந்த ஜூன் மாதம் இறுதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://admissionsatpgschool.tnau.ac.in இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததது. முதுநிலை பட்டமேற்படிப்புக்கு வரும் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்க பல்கலைக்கழகத்தின் சார்பில் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதுநிலை பட்ட மேற்ப்படிப்புக்கான இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 16-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளநிலை, முதுநிலை முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் மூலமாகவும், தற்பொழுது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வர்களிடம் பெற்ற படிப்பு முடிவுற்ற சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

Monday, July 11, 2022

July 11, 2022

வேளாண் கலந்தாய்வு - விண்ணப்பிக்கும் முறை


வேளாண் கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள வேளாண் கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான மாணவர் சேர்க்கை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு வாயிலாக நடைபெறுகிறது.

புதுடில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் நாட்டின் சிறந்த வேளாண் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள &'தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்’ கடந்த ஆண்டு தனது பொன்விழாவை கொண்டாடியுள்ளது. 

12 இளநிலை பட்டப்படிப்புகள், 35 முதுநிலை பட்டப்படிப்புகள், 30 ஆராய்ச்சி படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள், 38 ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றை கொண்ட இப்பல்கலைக்கழகத்துடன் 28 தனியார் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன. 

இளநிலை பட்டப்படிப்புகள்: 4 ஆண்டுகள்

பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) அக்ரிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) ஹார்ட்டிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) புட், நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) பாரஸ்ட்ரி, பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) செரிகல்ச்சர், பி.டெக்., -அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், பி.டெக்.,-பயோடெக்னாலஜி, பி.எஸ்சி.,-அக்ரிபிசினஸ் மேனேஜ்மெண்ட், பி.டெக்.,-புட் டெக்னாலஜி, பி.டெக்.,-எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங். அக்ரிகல்ச்சர் மற்றும்  ஹார்ட்டிகல்ச்சர் படிப்புகள் தமிழ் வழியிலும் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி:

12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும் என்றாலும், சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் சில படிப்புகளில், தொழிற்பிரிவு மாணவர்களும் சேரலாம். பி.சி., மற்றும் பி.சி.எம்., பிரிவினர் 12ம் வகுப்பில் 4 முதன்மை பாடங்களில் குறைந்தது 50 சதவீத கூட்டு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், எம்.பி.சி., மற்றும் டி.என்.சி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., மற்றும் எஸ்.டி., பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதும்.

மாணவர் சேர்க்கை முறை:

12ம் வகுப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டு பிரிவினருக்கான இடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான இடங்கள், அரசு பள்ளி ஒதுக்கீட்டு இடங்கள், என்.ஆர்.ஐ., இடங்கள் மற்றும் இதர சிறப்பு ஒதுகீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறும். 

விண்ணப்பிக்கும்  முறை:

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://tnau.ac.in/ugadmission/ எனும் பக்கத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு: 

இணையதளம்: www.tnau.ac.in

இ-மெயில்: ugadmissions@tnau.ac.in

தொலைபேசி: 0422-6611345, 6611346, 6611322, 6611328

Saturday, July 02, 2022

July 02, 2022

5,000 இடங்களுக்கு 60,000 விண்ணப்பங்கள்... வேளாண் படிப்புகளுக்கு கூடும் மவுசு: தமிழகத்தில் கூடுதல் கல்லூரிகள் அமையுமா?

நமது நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவைப்படும் நிலையில், 40 ஆயிரம் பட்டதாரிகளே படித்து முடித்து வெளியேறுகிறார்கள். தமிழகத்தில் வேளாண்மை கல்லூரிகளை அதிகமாக தொடங்க வேண்டும் என்று வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகம், அதன் கீழ் 18 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 28 தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு மாணவர்கள் வேளாண் படிப்புகள் படிக்க 5,000 இடங்கள் உள்ளன.

வேளாண் கல்வி படித்தால் வேளாண்மை அதிகாரி, தோட்டக் கலைத் துறை அதிகாரி, வங்கி அதிகாரி, ஆராய்ச்சி நிலையங்களில் பணி, மத்திய அரசு சார்ந்த ரப்பர் தொழிற்சாலை, காபி வாரியம், தென்னை வாரியம் உள்ளிட்ட பயிர் வாரியங்கள் பணி, தனியார் உரத்தொழிற்சாலை, பூச்சி மருந்து கம்பெனிகள், சர்க்கரை தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி நிலையங்களில் பணி வாய்ப்பு கிடைக்கிறது. இது தவிர சுயதொழிலும் செய்யலாம். போட்டித் தேர்வுகளில் மிக எளிதாக வெற்றிப் பெறலாம். போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் வேளாண் படிப்புகளில் உள்ளன. அதனாலே, 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தால் வெறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேளாண் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. சிறப்பாக படிக்கும் பெரும்பான்மை மாணவர்களின் முதல் தேர்வாக எம்பிபிஎஸ் படிப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் இன்ஜினிரிங் படிப்பு இருந்தது.

ஆனால், பொறியியல் படிப்பை காட்டிலும் மாணவர்கள் மத்தியில் தற்போது வேளாண் படிப்புகளுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் இன்னும் வேளாண் கல்லூரிகள் இல்லை. அதனால், கூடுதல் வேளாண் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.

வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: "அடிப்படையில் மனித இனம் உயிரோடு இருப்பதற்கு உணவு முக்கியமானது. 1947-ம் ஆண்டு 30 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 120 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், உணவு தயாரிப்பதற்காக அன்று இருந்த விளை நிலங்களில் தற்போது 60 சதவீதம்தான் தற்போது இருக்கிறது. மீதமுள்ள விளைநிலங்கள், ரோடு, விமானநிலையம், குடியிருப்புகள், ஆக்கிரமிப்பு காரணமக குறைந்துவிட்டது. மழையும் சீராக பெய்வதில்லை. நீர் ஆதாரமும் (Aquifers) குறைந்துவிட்டது. அதனால், விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. நிறையை இடங்களில் உவர் நிலங்கள், கலர் நிலங்கள் போன்ற பயன்படுத்த முடியாத நிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதனால், 120 கோடி மக்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வது எதிர்காலத்தில் பெரிய சவாலாக திகழும்.

நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 750 விவசாயிகள், விவசாயம் மீது நம்பிக்கையில்லாமல் மாற்றுத்தொழிலுக்கு செல்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, விவசாயத்தை தொழில் நுட்பத்தால் மேம்படுத்தினால் மட்டுமே உண்டு. குறைவான விளைநிலம், குறைவான நீர், குறைவான வேலையாட்களை கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு வேளாண் பட்டதாரிகள் அதிகளவு தேவைப்படுகிறார்கள். வேளாண்மை படிப்பால் மட்டுமே விவசாயத்தை தூக்கி நிறுத்த முடியும்.

விவசாயம் இல்லாமல் தொழில்துறை வளர வாய்ப்பில்லை. ஏனென்றால் எந்த ஒரு மூலப்பொருளும் விவசாயத்தில் இருந்துதான் கிடைக்கப்பெறுகிறது. நமது நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால், 40 ஆயிரம் பட்டதாரிகளே படித்து முடித்து வெளியேறுகிறார்கள். விவசாயிகளை காக்க வேண்டும் என்று சொல்கிற நமது நாட்டில்தான் ஒரு விவசாயியின் மகன் தான் நினைத்த விவசாயப் படிப்பு படிக்க முடியாமல் போகிறது. அதற்கு வேளாண்மை கல்லூரிகளை அதிகமாக தொடங்க வேண்டும்." என்று வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் கூறியுள்ளனர். விவசாய கல்லூரி தொடங்க என்ன தேவை? ஒரு வேளாண்மை கல்லூரி தொடங்குவதற்கு குறைந்தப் பட்சம் 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதில், நிலத்தடிநீர் ஆதாரத்துடன் கூடிய 80 சதவீதம் விளைநிலம் இருக்க வேண்டும். நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருக்க வேண்டும். காடு வளர்ப்பு, தோட்டப்பயிர்கள் வளரக்கூடிய சூழல் இருக்க வேண்டும். ஆய்வுக்கூட வசதிகள், வகுப்பறை கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் விவசாயப்பயிற்சி அளிக்க முடியும்.

ஆனால், தற்போது அமையும் பெரும்பான்மை வேளாண் கல்லூரிகள், தரமான பேராசிரியர்கள், கட்டிட வசதி, விளைநிலங்கள் வசதியில்லாமல் அமைகின்றன. அதனால், மாணவர்களுக்கு வெறும் வகுப்பறை கல்வி மட்டுமே கற்றுக்கொடுத்து காகித சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், தரமில்லாத வேளாண்பட்டதாரிகள் உருவாகி கொண்டிருக்கின்றனர். வேளாண் படிப்புகளுக்கு மவுசு இருக்கிறது என்பதற்காக புற்றீசல் போல் தரமில்லாமல் கல்லூரிகள் அமைவதை தடுக்க வேண்டும்.

Wednesday, April 20, 2022

April 20, 2022

கரூர் வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

Admission of students has started in the newly started Karur Agricultural College.

State Electricity, Prohibition and Excise Minister V Senthilpalaji had promised before the election that steps would be taken to set up a government agricultural college in Karur district. Accordingly, after the DMK took over the administration, it was announced that 4 agricultural colleges will be declared in 4 districts including Karur in the academic year 2021-2022 and the admission of students will be done in the academic year 2021 and 2022. It has been announced that the College of Agriculture will be functioning temporarily at the Karur Corporation Multipurpose Center.

Balasubramanian took over as Nodal Officer, Karur Agricultural College and Research Station last September. College of Agriculture 2021-2022 Student Admission Consultation Due to NEED Exam and Corona last Apr. Expired on the 10th.

Following this, enrollment began yesterday (Apr. 18) at 18 Government Agricultural Colleges and Research Centers, including 4 in Karur, Nagapattinam, Chettinad and Krishnagiri. Admission of students at the Karur District Agricultural and Research Station, which is functioning at the Karur Corporation Multipurpose Center, has been going on since yesterday. Looks like 50 to 60 seats will be offered.

It is learned that Chief Minister MK Stalin will soon start the first year classes of the new Agricultural College and the ceremony will be held with the participation of State Electricity, Prohibition and Excise Minister V. Senthilpalaji, Collector. Following this, the site for the Agricultural College in Karur district will be selected and new buildings will be constructed.
வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

புதிதாக தொடங்கப்பட்ட கரூர் வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2021 2022ம் கல்வியாண்டில் 4 வேளாண்மைக் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டு 2021, 2022ம் கல்வியாண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. கரூர் மாநகராட்சி பன்நோக்கு மையக்கட்டிடத்தில் தற்காலிகமாக வேளாண்மைக் கல்லூரி செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

கரூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நோடல் அலுவலராக பாலசுப்பிரமணியன் கடந்த செப்டம்பரில் பொறுப்பேற்றுக் கொண்டார். நீட் தேர்வு, கரோனா ஆகியவற்றின் காரணமாக வேளாண்மைக் கல்லூரி 2021-2022ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஏப். 10 ஆம் தேதி முடிவுற்றது. கரூர் வேளாண் கல்லூரி

இதையடுத்து புதிதாக தொடங்கப்பட்ட கரூர், நாகப்பட்டினம், செட்டிநாடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 உள்ளிட்ட 18 அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் நேற்று (ஏப். 18ம் தேதி) மாணவர் சேர்க்கை தொடங்கியது. கரூர் மாநகராட்சி பல்நோக்கு மையக்கட்டிடத்தில் செயல்படும் கரூர் மாவட்ட வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நேற்று தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 50 முதல் 60 இடங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய வேளாண்மைக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும், மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஆட்சியர் பங்கேற்கும் வகையில் விழா நடைபெறும் என்று தெரியவருகிறது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் எனத் தெரிகிறது.

Total Pageviews

Search This Blog