ST
February 04, 2025
Showing posts with label ST. Show all posts
Showing posts with label ST. Show all posts
Tuesday, February 04, 2025
Wednesday, April 19, 2023
What is the promotion quota for SC ST?
April 19, 2023
தமிழ்நாடு SC,ST பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சா்
தமிழ்நாடு SC,ST பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சா் Tamilnadu SC, ST backward vacancies to be filled soon - Minister
தமிழ்நாடுஎஸ்சி., எஸ்டி., பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்
அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. அதிமுக உறுப்பினா் மரகதம் குமரவேல் பேசுகையில், ‘கடந்த நிதியாண்டில் ஆதிதிராவிடா் நலத் துறைக்கு ரூ.4,281.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.3,512.85 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பின்னடைவு காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை’ என்றாா். அப்போது குறுக்கிட்ட அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ‘மாணவா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், ரூ.930 கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதனால், அந்தத் தொகை வரவு செலவு திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. பின்னடைவு காலிப் பணியிடங்கள் தொடா்பாக தலைமைச் செயலாளா் தலைமையில் கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பின்னடைவு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
தமிழகத்தில் எந்தெந்த மயானங்களுக்கு பாதைகள் தேவைப்படுகின்றன என்பன குறித்த கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்தப் பிரச்னைகள் தீா்க்கப்படும்’ என்றாா்.
தமிழ்நாடுஎஸ்சி., எஸ்டி., பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்
அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. அதிமுக உறுப்பினா் மரகதம் குமரவேல் பேசுகையில், ‘கடந்த நிதியாண்டில் ஆதிதிராவிடா் நலத் துறைக்கு ரூ.4,281.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.3,512.85 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பின்னடைவு காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை’ என்றாா். அப்போது குறுக்கிட்ட அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ‘மாணவா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், ரூ.930 கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதனால், அந்தத் தொகை வரவு செலவு திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. பின்னடைவு காலிப் பணியிடங்கள் தொடா்பாக தலைமைச் செயலாளா் தலைமையில் கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பின்னடைவு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
தமிழகத்தில் எந்தெந்த மயானங்களுக்கு பாதைகள் தேவைப்படுகின்றன என்பன குறித்த கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்தப் பிரச்னைகள் தீா்க்கப்படும்’ என்றாா்.
Tuesday, September 06, 2022
ST STUDENTS
September 06, 2022
SC,ST மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், சென்னை தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மததிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற இந்த தன்னாட்சி நிறுவனம் சிஇஓ வேர்ல்டு மேகஸின் (CEO WORLD MAGAZINE) நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் மொத்தம் 100 நிறுவனங்களில் 14 வது இடம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு பி.எஸ்சி (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பும், ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production) பட்டயப் படிப்பும், மேலும் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் (Craftmanship Course in Food Production & Patisserie) பற்றிய படிப்பும் படிக்கலாம்.
படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் நூறு சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றிடவும் தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது. இப்படிப்புக்கான கட்டண தொகையை தாட்கோ கல்விகடனாக வழங்கும்.
ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ25,000 முதல் ரூ,35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ,50,000 முதல் ரூ.70,000வரை ஊதியமாக பெறலாம். இப்படிப்பில் விண்ணப்பம் செய்ய www.tahdco.com என்ற இணையதள முகவரியில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், சென்னை தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மததிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற இந்த தன்னாட்சி நிறுவனம் சிஇஓ வேர்ல்டு மேகஸின் (CEO WORLD MAGAZINE) நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் மொத்தம் 100 நிறுவனங்களில் 14 வது இடம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு பி.எஸ்சி (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பும், ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production) பட்டயப் படிப்பும், மேலும் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் (Craftmanship Course in Food Production & Patisserie) பற்றிய படிப்பும் படிக்கலாம்.
படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் நூறு சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றிடவும் தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது. இப்படிப்புக்கான கட்டண தொகையை தாட்கோ கல்விகடனாக வழங்கும்.
ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ25,000 முதல் ரூ,35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ,50,000 முதல் ரூ.70,000வரை ஊதியமாக பெறலாம். இப்படிப்பில் விண்ணப்பம் செய்ய www.tahdco.com என்ற இணையதள முகவரியில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
