Breaking

Showing posts with label PROVISIONAL RANK LIST. Show all posts
Showing posts with label PROVISIONAL RANK LIST. Show all posts

Monday, June 26, 2023

Tuesday, October 04, 2022

October 04, 2022

திருத்தப்பட்ட பொதுநுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

திருத்தப்பட்ட பொதுநுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு - Release of Revised Public Entrance Examination Rank List

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, திருத்தப்பட்ட பொது நுழைவுத்தோ்வு தரவரிசைப் பட்டியலை மாநில அரசு வெளியிட்டது.

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, 2022-23-ஆம் ஆண்டில் தொழில் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்குத் தகுதியான மாணவா்களின் திருத்தப்பட்ட பொது நுழைவுத்தோ்வு தரவரிசைப் பட்டியலை கா்நாடக தோ்வு ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் காணலாம்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம், உயா்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா கூறியது:

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பொதுநுழைவுத் தோ்வின் திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிட்டிருந்த தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருந்த 1 முதல் 500 வரையிலான மாணவா்களின் முடிவில் மாற்றமில்லை. கா்நாடக உயா்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த சூத்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் தோ்ச்சிபெற்று, 2022-ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத்தோ்வை 24 ஆயிரம் மாணவா்கள் எழுதியிருந்தனா்.

உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தரவரிசைப் பட்டியல் தயாரிப்பின் முதல் சுற்றில், 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் இம்மாணவா்கள் பெற்றிருந்த மதிப்பெண்களில் 6% குறைக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில், இம்மாணவா்கள் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் பெற்றிருந்த மதிப்பெண்களில் 50%, பொதுநுழைவுத்தோ்வில் பெற்றிருந்த மதிப்பெண்களில் 50% மதிப்பெண்களை கூட்டி, அதில் கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தரவரிசைப்பட்டியலில் 501 முதல் 1000 வரையிலான இடத்தில் 14 மாணவா்களும், 1000 முதல் 10,000 வரையிலான இடத்தில் 2063 மாணவா்களும், 10,001 முதல் 1,00,000 வரையிலான இடத்தில் 22,022 மாணவா்களும் இடம்பெற்றுள்ளனா். திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 2021-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. மாணவா்கள் பொறியியல், வேளாண்மை, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புகளுக்கு மட்டும் சோ்க்கை பெறலாம். கால்நடை மற்றும் மருந்தியல் படிப்புகளுக்குபொது நுழைவுத்தோ்வில் பெற்ற மதிப்பெண்களின்படி தரவரிசைப் பட்டியல்கள் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளன என்றாா்.

Saturday, October 01, 2022

October 01, 2022

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Publication of Admission Rank List for Young Science Course in Agricultural University - வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு, இளம்அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 200-க்கு200 தரவரிசை பெற்று 7 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு இளம்அறிவியல் பாடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கு இளம்அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 6,980 இடங்களுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்புக் கல்லூரிகளில் 2,567 இடங்களும், இப்பல்கலைக்கழகத்தை சார்ந்த 28 இணைப்புக் கல்லூரிகளில் 4,413 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. இணைப்புக் கல்லூரிகளில் அரசு இடம், மேனேஜ்மென்ட் இடம் என இரு பிரிவுகள் உள்ளன.

65 சதவீத அரசு இடத்தில் 2,868 பேரும், மேனேஜ்மென்ட் இடத்தில் 1,545 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தரவரிசைப் பிரிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 200-க்கு 200 தரத்தை 7 பேர் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஆன்லைன் முறையில் கலந்தாய்வு: மருத்துவக் கலந்தாய்வு முடிந்தவுடன், வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இதுதொடர்பான அனைத்து விவரங்களும் www.tnau.ac.in என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜி.கோபி, ஈரோடு மாவட்டம் எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஆர்.சுப, புதுக்கோட்டை மாவட்டம் சவுடாம்பிகா மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தமாணவர் ஆர்.கார்த்திக் ராஜா,சேலம் ஏஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிதாரணி செங்கோட்டு வேலு, ஈரோடு மாவட்டம் யுஆர்சி பள்ளி மாணவர் டி.முத்துப்பாண்டி, தருமபுரி மாவட்டம் அவ்வை மெட்ரிக் பள்ளி மாணவி எம்.ஹரிணிகா, ராமநாதபுரம் மாவட்டம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.ராஜ ஐஸ்வர்ய காமாட்சி ஆகிய 7 பேர் 200-க்கு200 தரம் பிடித்து முதலிடம் பிடித்துள்ளனர்.

Tuesday, August 16, 2022

Total Pageviews

Search This Blog