Breaking

Showing posts with label JACTTO GEO. Show all posts
Showing posts with label JACTTO GEO. Show all posts

Thursday, December 18, 2025

Thursday, January 30, 2025

Wednesday, February 14, 2024

February 14, 2024

திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும்.

பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும்.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

Friday, December 22, 2023

December 22, 2023

JACTTO GEO - கோட்டை முற்றுகை போராட்டம் - 28.12.2023

JACTTO GEO - கோட்டை முற்றுகை போராட்டம் - 28.12.2023

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தேர்தல் காலத்திலும் , ஜாக்டோ ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி டிசம்பர் 28 - ல் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் வெற்றிபெற அனைவரும் பங்கேற்போம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தேர்தல் காலத்திலும், ஜாக்டோ ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி டிசம்பர் 28-ல் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் வெற்றிபெற அனைவரும் பங்கேற்போம்.

*1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

* காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். * இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

* முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள். கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள். ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக்களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.

* சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள்,ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள். கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

*அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

* 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

* 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப் படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்

* சாலைப்பணியர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்.

Wednesday, November 29, 2023

November 29, 2023

ஜாக்டோ ஜியோவுக்கு போட்டியாக புதிய கூட்டமைப்பு .. தொடங்கியவுடன் அறிவித்த போராட்டம்

ஜாக்டோ ஜியோவுக்கு போட்டியாக புதிய கூட்டமைப்பு .. தொடங்கியவுடன் அறிவித்த போராட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு போட்டியாக 12 சங்கங்கள் ஒருங்கிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரும், 12 சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அமிர்தகுமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய கூட்டமைப்பு 9 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாவும், வரும் 21ம் தேதி பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்

ஜாக்டோ ஜியோவுக்கு போட்டியாக புதிய கூட்டமைப்பு .. தொடங்கியவுடன் அறிவித்த போராட்டம்👇

Video News - Click here

Monday, November 20, 2023

November 20, 2023

ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்ட செய்தி



ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்ட செய்தி

ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் காணொளி வாயிலாக இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தின் வாயிலாக 25.11.2023 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரில் நடைபெற இருந்த மாபெரும் மறியல் போராட்டத்தை 9.12. 2023 சனிக்கிழமைக்கு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் எப் பணியை அரசு வழங்கினாலும் புறந்தள்ளிவிட்டு பேரெழுச்சியோடு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறக்கூடிய மாபெரும் மறியல் போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோவில் இணைந்திருக்கின்ற அனைத்து சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறையை நிரப்பி கோரிக்கையை வென்றெடுப்பது என இன்றைய கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது.

ஆகவே திட்டமிட்டபடி 9.12.2023 சனிக்கிழமை அன்று மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, November 19, 2023

November 19, 2023

மறியல் தேதி மாற்றம் - JACTTO GEO தகவல்

மறியல் தேதி மாற்றம் - JACTTO GEO தகவல்

நவம்பர் 25ஆம் தேதி மறியல் தேதி மாறுதல் - ஜாக்டோ ஜியோ

நவம்பர் 25ஆம் தேதி மறியல் தேதி மாறுதல் செய்யப்பட்டு டிசம்பர் 9ஆம் தேதி என்று மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாநில அமைப்பு கூறியுள்ளது. 25 ஆம் தேதி 1 to 5வகுப்புகளுக்கு CRC நடைபெற உள்ளதால் மற்றும் BLO Duty அன்றைய தேதியில் இருப்பதால் தேதி மாறுதல் செய்யப்பட்டுள்ளது என ஜாக்டோ - ஜியோ தகவல்

Total Pageviews

Search This Blog