Breaking

Showing posts with label Industry Policy Note. Show all posts
Showing posts with label Industry Policy Note. Show all posts

Friday, March 31, 2023

March 31, 2023

உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பு 2023-2024 - English - Policy Note of Higher Education Department - PDF



உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பு 2023-2024 - English - Policy Note of Higher Education Department - PDF CLICK HERE TO DOWNLOAD PDF

Sunday, October 02, 2022

October 02, 2022

வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு இந்த மாதிரியான பாலிசிகளை எடுங்கள்.. மொத்த செலவும் குறையும்!

வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு இந்த மாதிரியான பாலிசிகளை எடுங்கள்.. மொத்த செலவும் குறையும்!

நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வழங்கப்படும் குழு காப்பீடு திட்டத்தில் உங்கள் பெற்றோரை இணைத்துக் கொள்ளலாம்.

மருத்துவ செலவுகள் அதிகரித்து விட்ட இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் அவசியமானதாகிறது. குறிப்பாக, வயது சார்ந்த நோய்களை எதிர்கொள்ளும் முதியவர்களுக்கு மருத்துவக் காப்பீடு கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், பெரும் செலவுகள் ஏற்படும் வரையிலும் பலர் இதை உணருவதே கிடையாது.

ஒருவேளை நம் தாய், தந்தைக்கு மருத்துவக் காப்பீடு வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மிடம் இருந்தாலும் கூட, நாம் பணியாற்றும் நிறுவனத்தில் வழங்கப்படும் காப்பீட்டை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறோம். திடீரென்று வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டால் என்ன ஆவது? புதிய நிறுவனத்திற்கு செல்லுகையில் அவர்களும் தற்போதுள்ளதைப் போல ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை நமக்கு வழங்குவார்களா? எதுவும் நிச்சயம் கிடையாது.

ஆக, மூத்த குடிமக்களுக்கு எப்போதுமே தனிநபருக்கான மருத்துவக் காப்பீடு எப்போதுமே அவசியமானது. சிலர் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தையும் தேர்வு செய்கின்றனர். ஆனால், தனிநபர் காப்பீட்டை காட்டிலும் குரூப் இன்சூரன்ஸ் என்னும் குழு காப்பீடு திட்டம்தான் அதிக பலன்களை கொண்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

குழு காப்பீடு திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் :

உத்தரவாதம் அளிக்கப்படும் காப்பீடு :

நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வழங்கப்படும் குழு காப்பீடு திட்டத்தில் உங்கள் பெற்றோரை இணைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் உங்கள் பெற்றோருக்கு ஏற்கனவே என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் ஆராயமல் காப்பீடு வழங்கப்படும். ஆனால், இது மினிமம் என்ரோல்மெண்ட் ரேசியோ என்ற வரம்புக்கு உட்பட்டதாகும்.

காத்திருப்பு காலம் கிடையாது :

குழு காப்பீடு திட்டத்தில் உள்ள மற்றொரு பலன் என்னவென்றால் இதில் காத்திருப்பு காலம் கிடையாது. நீங்கள் மருத்துவமனையில் சேரும் முதல் நாளில் இருந்தே அனைத்து செலவுகளும் இதில் கவர் செய்யப்படும். உங்கள் நோய் பாதிப்பு ஏற்கனவே இருந்ததா அல்லது புதிதாக வந்ததா என்றெல்லாம் பார்க்கப்பட மாட்டாது. ஆனால், வழக்கமான பாதிப்புகளில் 2 ஆண்டு காத்திருப்பு காலம் உண்டு.

பெரும்பாலான பில்கள் கவர் செய்யப்படும் :

கோ-பே என்றொரு வாய்ப்பு குழு காப்பீடு திட்டத்தில் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையில் கோ-பே பலனை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இந்த கோபே என்பது 20 முதல் 30 சதவீதமாக இருக்கிறது.

அதிகரிக்கப்பட்ட உள்வரம்புகள்

குழு காப்பீடு திட்டத்தில் உள்ள 4ஆவது பலன் என்னவென்றால் இதில் உள் வரம்புகள் அதிகரிக்கப்படும் என்பதுதான். குறிப்பாக, குழு காப்பீடு திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவமனை அறை வாடகைக்கு கூடுதல் பணம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, எந்த நோய்க்கு சிகிச்சை பெற்றாலும், அதே பலனை பெற முடியும். நோய் வாரியாக அறை வாடகை மாறும் என்ற நிபந்தனை மூத்த குடிமக்களுக்கு பொருந்தாது.

இது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் நோ-கிளைம் போனஸ், உங்கள் கிளைம் ஹிஸ்டரியை பொருட்படுத்தாமல் செய்யப்படும் தனிநபர் திட்டம், மூன்றாவதாக கணிக்கத்தக்க ரினீவல் தொகை போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.

Wednesday, September 21, 2022

September 21, 2022

மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும் தமிழக கல்விக் கொள்கை குழு தலைவர் தகவல்

மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும் தமிழக கல்விக் கொள்கை குழு தலைவர் தகவல் - Tamil Nadu Education Policy Committee Chairman informs that good education policies of Central Government will be adopted

''மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும்,'' என, திருநெல்வேலியில் நடந்த தென் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மாநில கல்விக் கொள்கை உயர் மட்டக்குழு தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார். தமிழக கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை அமல்படுத்துவதற்காக நீதிபதி டி.முருகேசன் தலைமையில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் ஜூனில் அறிவித்தார். குழுவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 12 பேர் உள்ளனர்.

தென்மண்டல அளவில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் சவிதா, பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வு பெற்ற பேராசிரியர் ராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், யூனிசெப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்தினம், கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் பங்கேற்றனர்.

திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.முடிவில் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது: இதே போல ஏழு மண்டல கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். கல்வியின் தரம் எல்லா மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற பேசியவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

கூட்டங்கள் முடிந்ததும் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.பள்ளி மாணவர்களின் ஏற்றத் தாழ்வு, நிதி ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்கப்படும். கூட்டத்திற்கு மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனர். வரும் கூட்டங்களில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்வோம். கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் கருத்துக்களையும் கேட்போம். தேவைப்பட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கருத்து கேட்கப்படும்.

அதிக படிப்பு சுமையால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.மாநில கல்விக் கொள்கையில் தமிழக கலாசாரம், சமூகம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படும். மத்திய கல்விக் கொள்கையில் நல்ல கொள்கைகள் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வி பயிற்சியளிக்கப்படும்.

ஆசிரியர்களின் சம்பளம், வேலை தொடர்பான வழக்குகளில் இந்த குழு தலையிடாது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தரம் உயர்ந்துள்ளது. தரத்தை உயர்த்த இக்குழு பரிந்துரைக்கும்.

கல்வி கொள்கை குறித்த ஆலோசனைகளை stateeducation policy@gmail.com என மின்னஞ்சல் முகவரியிலும், 3வது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கும் அக்.,15க்குள் அனுப்பலாம் என்றார்.

ஆறு உறுப்பினர்கள் ஆப்சென்ட்

கல்விக் கொள்கை உயர் மட்ட குழுவில் உறுப்பினர்களான எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராமானுஜம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் ச.மாடசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.

Total Pageviews

Search This Blog