NHIS Scheme
October 22, 2025
Showing posts with label NHIS. Show all posts
Showing posts with label NHIS. Show all posts
Wednesday, October 22, 2025
Friday, August 22, 2025
Wednesday, November 27, 2024
Tuesday, October 29, 2024
NHIS
October 29, 2024
NHIS NEW OFFICE ADDRESS
Saturday, October 05, 2024
Saturday, August 10, 2024
Sunday, May 05, 2024
Thursday, March 07, 2024
Wednesday, January 31, 2024
NHIS
January 31, 2024
ரூ5 லட்சத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்... விண்ணப்பிக்கும் முறை வழிகாட்டி நெறிமுறைகள்... !
ரூ5 லட்சத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்... விண்ணப்பிக்கும் முறை வழிகாட்டி நெறிமுறைகள்... !
ஆயுஷ்மான் பாரத் யோஜனா, இத்திட்டம் இந்தியாவில் தரமான மற்றும் சரியான சிகிச்சைக்கு கூட பணம் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், அரசு மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், இதன் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தைப் பற்றி இப்போது பெரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, அதில் அரசாங்கம் அதன் பாதுகாப்பை இரட்டிப்பாக்க முடியும் என்று கூறப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து மத்திய அரசு பெரிய அறிவிப்பை வெளியிடலாம் என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. இதில் இலவச சிகிச்சைக்கான வரம்பை ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய்.10 லட்சமாக உயர்த்தலாம். ஆனால், இது குறித்து அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை, கோடிக்கணக்கான மக்களிடம் ஆயுஷ்மான் அட்டைகள் உள்ளன.
இத்திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் செலவில் புற்றுநோய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது நடந்தால், நாட்டின் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக உள்ளனர். ஆண்டு வருமானம் ரூபாய் 1.80 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ளனர். pmjay.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலமும் நீங்களும் தகுதியானவரா என்பதை சரிபார்க்கலாம், நீங்கள் திட்டத்தில் சேரலாமா வேண்டாமா என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். இங்கே நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP செய்ய வேண்டும். அதன் பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் ரேஷன் கார்டு எண்ணையும் உள்ளிட வேண்டும். முதலில் உங்கள் ஆயுஷ்மான் கார்டு ஏற்கப்படுமா இல்லையா என்பதை நீங்கள் அறிய விரும்பினால், முதலில் உங்கள் தகுதியைச் சரிபார்க்கவும். தகுதியைச் சரிபார்க்க, முதலில், நீங்கள் திட்டத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்\n https://pmjay.gov.in/\ n இப்போது திரையில் தெரியும் 'நான் தகுதியானவனா' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும், உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும், அதை இங்கே உள்ளிடவும். பின்னர் இரண்டு விருப்பங்கள் உங்கள் முன் தோன்றும், அதில் நீங்கள் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் வினாடியில் உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு தேட வேண்டும். இதற்குப் பிறகு, உங்களின் தகுதி மற்றும் ஆயுஷ்மான் கார்டு கிடைக்குமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும்
Monday, January 29, 2024
NHIS
January 29, 2024
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த அரசு முடிவு
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த அரசு முடிவு
மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) கீழ் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்ட மான தேசிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொது, தனியார், அமைப்புசாராத் துறை தொழிலாளர்களும் இணைந்து பயன்பெற முடியும்.
இத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்தவும், அதிக மக்கள் இதில் விரும்பி இணையும் வகையில் சில கூடுதல் சலுகைகளை அறிவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
அதன்படி, பெரு நிறுவனங்கள் பணியாளர்களின் அடிப்படை ஊதி யம், அகவிலைப்படியில் 10 சதவீதத்தை ஓய்வூதியத் திட்டத்தில் செலுத் தும்போது வரி விலக்குச் சலுகை அளிக்கப்படும். 75 வயதை எட்டியவர் கள் தேசிய ஓய்வூதியத் திட்ட பலனைப் பெறும்போது முழுமையான இந்த ஓய்வூதியத்திட்டத்தில் உள்ள தனிநபர்கள் 80C பிரிவில்பெறும் வரித் தள்ளுபடி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர அரசு ஊழி யர்களுக்கும் இத்திட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட வாய்ப்பு உள் ளது. இது தொடர்பக ஆய்வு செய்ய கடந்த ஆண்டு நிதித் துறைச் செய லர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளிக்கும் முக்கியப் பரிந்துரைகளும் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெ றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) கீழ் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்ட மான தேசிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொது, தனியார், அமைப்புசாராத் துறை தொழிலாளர்களும் இணைந்து பயன்பெற முடியும்.
இத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்தவும், அதிக மக்கள் இதில் விரும்பி இணையும் வகையில் சில கூடுதல் சலுகைகளை அறிவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
அதன்படி, பெரு நிறுவனங்கள் பணியாளர்களின் அடிப்படை ஊதி யம், அகவிலைப்படியில் 10 சதவீதத்தை ஓய்வூதியத் திட்டத்தில் செலுத் தும்போது வரி விலக்குச் சலுகை அளிக்கப்படும். 75 வயதை எட்டியவர் கள் தேசிய ஓய்வூதியத் திட்ட பலனைப் பெறும்போது முழுமையான இந்த ஓய்வூதியத்திட்டத்தில் உள்ள தனிநபர்கள் 80C பிரிவில்பெறும் வரித் தள்ளுபடி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர அரசு ஊழி யர்களுக்கும் இத்திட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட வாய்ப்பு உள் ளது. இது தொடர்பக ஆய்வு செய்ய கடந்த ஆண்டு நிதித் துறைச் செய லர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளிக்கும் முக்கியப் பரிந்துரைகளும் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெ றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, December 12, 2023
NHIS
December 12, 2023
NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் - காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்
NHIS - Reimbursement of Medical Expenses for Treatment in Unrecognized Hospitals - Madurai High Court Order to Insurance Companies - Attachment : Copy of Judgment - NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் - காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்
அரசு ஊழியர், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.மணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து, 2010ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றேன். அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளேன்.
இந்நிலையில், எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதற்கு ரூ.1.25 லட்சம் செலவானது.
இந்தத் தொகையைத் திரும்பக் கேட்டு காப்பீடு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இல்லை என்பதால், மருத்துவ செலவுத் தொகையை வழங்க முடியாது என்று கிராமப்புற மருத்துவ சேவைகள் இயக்குநர் உத்தரவிட்டார். எனவே, எனக்கு மருத்துவ செலவுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவில் கூறியிருப்பதாவது:
அரசு ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே, மருத்துவ செலவுத் தொகை திரும்ப வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருக்கக் கூடாது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் கிராமப்புற மருத்துவச் சேவைகள் இயக்குநர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 6 வாரங்களில் மருத்துவ செலவுத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
>>> Click Here to Download Judgment W.P.(MD)No.25304 of 2018 & W.M.P(MD)No.22916 of 2018, Dated : 05.12.2023, BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT...
Friday, September 30, 2022
Radiotherapy Treatment for Pensioners
September 30, 2022
GO NO : 289, Date : 09.09.2022 - ஓய்வூதியதரர்களுக்கு ரேடியோதெரபி சிகிச்சை - 16 மருத்துவமனைகள் NHIS திட்டத்தில் இணைப்பு - அரசாணை வெளியீடு!
ஓய்வூதியதரர்களுக்கு ரேடியோதெரபி சிகிச்சை - 16 மருத்துவமனைகள் NHIS திட்டத்தில் இணைப்பு - அரசாணை வெளியீடு! - Radiotherapy Treatment for Pensioners - 16 Hospitals Linked to NHIS Scheme - Ordinance Issued!
New Health Insurance Scheme , 2021 for the Employees and New Health Insurance Scheme , 2022 for the Pensioners / Family Pensioners of Government Departments and other Organizations Empanelment of Accredited Tamil Nadu Medical Services Corporation Limited Radiotherapy Centres Approval of 16 Tamil Nadu Medical Services Corporation Limited operated Radiotherapy Centres based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued.
GO NO : 289, Date : 09.09.2022
CLICK HERE TO DOWNLOAD
New Health Insurance Scheme , 2021 for the Employees and New Health Insurance Scheme , 2022 for the Pensioners / Family Pensioners of Government Departments and other Organizations Empanelment of Accredited Tamil Nadu Medical Services Corporation Limited Radiotherapy Centres Approval of 16 Tamil Nadu Medical Services Corporation Limited operated Radiotherapy Centres based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued.
GO NO : 289, Date : 09.09.2022
CLICK HERE TO DOWNLOAD
Monday, July 25, 2022
தேசிய ஓய்வூதிய திட்டம்
July 25, 2022
தேசிய ஓய்வூதிய திட்டம் 2022: அரசு ஊழியர்கள் பெற்ற வருமானம் என்ன? இதோ முழு விபரம்!
அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர்
அரசுப்பத்திரங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் 2021- 2022 நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கான வருமானம் 6.91% இருப்பதாக மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நீட் தேர்வு விவகாரம் - CCTV காட்சி அடிப்படையில் 2 ஆசிரியர்கள் அதிரடி கைது
ஓய்வூதியத்திற்கான சேமிப்பைத் திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System- NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இது தனது ஓய்வுக் காலத்தில் சேமிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது. இதோடு இத்திட்டம் மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு மற்றும் காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரித்தும் வழங்குகிறது. மேலும் பணிக்காலத்தின் போது ஓய்வூதிய கார்பஸ் சேமிக்கப்படும் எனவும், ஓய்வு பெறும் போது உங்களது குடும்பத்தின் தேவைகள் மற்றும் செலவுகளை நிர்வகிக்க இந்த சேமிப்பைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பயனாளர்கள், அரசுப்பத்திரங்கள் தவிரக் கடன் பத்திரங்களில் முதலீடு, அரசுப்பத்திரங்களில் முதலீடு போன்றவற்றில் நம்முடைய பணத்தைச் சேமிக்கும் நடைமுறை உள்ளது.
இதையும் படிக்க | ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
இவை அனைத்தையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றுவரக்கூடிய நிலையில் இதுவரை அரசு ஊழியர்கள் பெற்றுள்ள சலுகைகள் என்ன? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது எழுத்துப்பூர்வமான அறிவிப்பில் நிதியமைச்சர் தெரிவிக்கையில், அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர் எனவும் 2021-2022 நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ்- ன் கீழ் இவர்களின் வருமானம் 6.91 சதவீதமாக இருந்தது எனக் கூறியுள்ளார். முன்னதாக அரசு ஊழியர்களின் NPS வருமானம் 9.33% ஆகும்.மேலும் 2021-2022 நிதியாண்டிற்கான என்பிஎஸ் வருமானம் பெரும்பாலான கடன் கருவிகளை விடச் சிறந்தது என்று அமைச்சர் மேலும் கூறினார். பொதுவாக NPS வருமானம் சந்தை நிர்ணயிக்கப்பட்டு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. வருமானத்தின் அடிப்படையில், மூன்று நிதி மேலாளர்களிடையே PFRDA மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்கள் NPS இன் கீழ் பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்கிறார்கள், அதாவது அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் கடன் கருவிகள், பணச் சந்தை கருவிகள், ஈக்விட்டி சந்தை போன்றவற்றில் முதலீட்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அரசு ஊழியா் பயிற்சி வகுப்பில் தூங்கினால் மதிப்பெண் குறைப்பு
மேலும் சந்தாதாரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு,அரசாங்கத்தின் பங்களிப்பை 10Yo of Pay + DA to 74% of Pay + DA ஆக உயர்த்தியது. ஓய்வூதிய நிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் சந்தாதாரர்களுக்கான முதலீட்டு முறை, பணம் செலுத்துதல் 2004-2012 காலகட்டத்தில் வைப்புத்தொகை செய்யாத அல்லது தாமதமான வைப்புத்தொகைகளுக்கான இழப்பீடு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு மற்றும் முந்தைய 40 ஆண்டு முதல் 60 வரை வெளியேறும்போது மொத்தமாகத் திரும்பப் பெறுவதற்கான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு செலுத்த வேண்டிய தொகையின் முழுவதுமாக திரும்பப் பெறுதலுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசுப்பத்திரங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் 2021- 2022 நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கான வருமானம் 6.91% இருப்பதாக மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நீட் தேர்வு விவகாரம் - CCTV காட்சி அடிப்படையில் 2 ஆசிரியர்கள் அதிரடி கைது
ஓய்வூதியத்திற்கான சேமிப்பைத் திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System- NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இது தனது ஓய்வுக் காலத்தில் சேமிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது. இதோடு இத்திட்டம் மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு மற்றும் காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரித்தும் வழங்குகிறது. மேலும் பணிக்காலத்தின் போது ஓய்வூதிய கார்பஸ் சேமிக்கப்படும் எனவும், ஓய்வு பெறும் போது உங்களது குடும்பத்தின் தேவைகள் மற்றும் செலவுகளை நிர்வகிக்க இந்த சேமிப்பைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பயனாளர்கள், அரசுப்பத்திரங்கள் தவிரக் கடன் பத்திரங்களில் முதலீடு, அரசுப்பத்திரங்களில் முதலீடு போன்றவற்றில் நம்முடைய பணத்தைச் சேமிக்கும் நடைமுறை உள்ளது.
இதையும் படிக்க | ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
இவை அனைத்தையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றுவரக்கூடிய நிலையில் இதுவரை அரசு ஊழியர்கள் பெற்றுள்ள சலுகைகள் என்ன? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது எழுத்துப்பூர்வமான அறிவிப்பில் நிதியமைச்சர் தெரிவிக்கையில், அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர் எனவும் 2021-2022 நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ்- ன் கீழ் இவர்களின் வருமானம் 6.91 சதவீதமாக இருந்தது எனக் கூறியுள்ளார். முன்னதாக அரசு ஊழியர்களின் NPS வருமானம் 9.33% ஆகும்.மேலும் 2021-2022 நிதியாண்டிற்கான என்பிஎஸ் வருமானம் பெரும்பாலான கடன் கருவிகளை விடச் சிறந்தது என்று அமைச்சர் மேலும் கூறினார். பொதுவாக NPS வருமானம் சந்தை நிர்ணயிக்கப்பட்டு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. வருமானத்தின் அடிப்படையில், மூன்று நிதி மேலாளர்களிடையே PFRDA மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்கள் NPS இன் கீழ் பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்கிறார்கள், அதாவது அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் கடன் கருவிகள், பணச் சந்தை கருவிகள், ஈக்விட்டி சந்தை போன்றவற்றில் முதலீட்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அரசு ஊழியா் பயிற்சி வகுப்பில் தூங்கினால் மதிப்பெண் குறைப்பு
மேலும் சந்தாதாரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு,அரசாங்கத்தின் பங்களிப்பை 10Yo of Pay + DA to 74% of Pay + DA ஆக உயர்த்தியது. ஓய்வூதிய நிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் சந்தாதாரர்களுக்கான முதலீட்டு முறை, பணம் செலுத்துதல் 2004-2012 காலகட்டத்தில் வைப்புத்தொகை செய்யாத அல்லது தாமதமான வைப்புத்தொகைகளுக்கான இழப்பீடு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு மற்றும் முந்தைய 40 ஆண்டு முதல் 60 வரை வெளியேறும்போது மொத்தமாகத் திரும்பப் பெறுவதற்கான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு செலுத்த வேண்டிய தொகையின் முழுவதுமாக திரும்பப் பெறுதலுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Thursday, July 21, 2022
NHIS
July 21, 2022
G.Os of Finance Department - PDF - Letter No.11741/Finance (HI-2) /2022 Dt: July 16, 2022 - New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees and their Spouse – Necessary Instructions - Issued - Regarding
Letter No.11741/Finance (HI-2) /2022 Dt: July 16, 2022 - New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees and their Spouse – Necessary Instructions - Issued - Regarding
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
Tuesday, April 26, 2022
Saturday, January 22, 2022
Monday, December 20, 2021
Friday, November 19, 2021
NHIS
November 19, 2021
NHIS 2021 - புதிய காப்பீடு அட்டை ஆன்லைன் மூலமாக எவ்வாறு பெறுவது?
NHIS 2021 - அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்கள் கவனத்திற்கு...
மாத சம்பளத்தில் ரூ 300 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...
பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....
நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்...
1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101
2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102
3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104
4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105
5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106
6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107
7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108
8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109
9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110
10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112
11 .Krishnagiri# 3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113
12 .Madurai# 46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114
13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164
14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116
15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117
16 .Perambalur# Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118
17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119
18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123
19 .Salem# No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124
20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125
21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126
22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127
23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128
24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135
25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136
26. Tirunelveli# 4F6/11 Akm Complex, Kailasapuram Middle St
Sunday, November 14, 2021
NHIS
November 14, 2021
NHIS 2021 - புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான விரிவான தொகுப்பு
புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 - தொடர்பான விரிவான தொகுப்பு :
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு , பணச்செலவில்லா மருத்துவ வசதியை வழங்கும்பொருட்டு , ஏற்கனவே அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -2016 , 30.06.2021 உடன் முடிவடைந்ததை தொடர்ந்து , புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , 2021 அமல்படுத்தப்பட்டு , யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , 2021 - இல் உள்ள காப்பீட்டு விவரங்கள் மற்றும் வசதிகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன :
1.காப்பீட்டு காலம் :
மருத்துவ காப்பீட்டு வசதியானது , 01.07.2021 முதல் 30.06.2025 வரையிலான 4 வருட தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும்
2. காப்பீட்டு தொகை :
அரசாணை ( பல்வகை ) எண் .160 , நிதி ( ஊதியம் ) துறை , நாள் : 29.06.2021 இணைப்பு -1 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ .5,00,000 / - ( ரூபாய் ஐந்து இலட்சம் ) வரை வழங்கப்படும்.
இணைப்பு- IA- இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 7 வகையான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ .10,00,000 / - ( ரூபாய் பத்து இலட்ச வரை வழங்கப்படும்.
மேலும் அரிதான நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு , ரூ .20,00,000 / - ( ரூபாய் இருபது இலட்சம் ) வரை , நிதிதுறைச் செயலாளர் , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர்களை கொண்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படும்.
கண்புரை சிகிச்சைக்கு அதிகபட்சமாக ஒரு கண்ணிற்கு ரூ .30,000 / வரையிலும் மற்றம் கர்ப்பப்பை நீக்கத்திற்கு அதிகபட்சமாக ரூ .50,000 / - வரையிலும் வழங்கப்படும் .
3. காப்பீட்டு சந்தா தொகை :
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் - 2021 - இல் , மாதாந்திர சந்தா ரூ .300 / ( ரூபாய் முன்னூறு மட்டும் ) ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மாநில அரசு ஊழியர்களாக இருப்பின் , இருவரில் யார் இளையவரோ , அவரது ஊதியத்தில் மட்டும் சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும்.
4.காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு தகுதியற்றவர்கள் :
கீழ்கண்ட வகையில் நியமணம் பெற்று பணிபுரிபவர்கள் , இத்திட்டத்தில் இணைவதற்கு தகுதியற்றவர்கள்.
5. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான காப்பீடு : ( i ) மேற்கண்ட அரசாணையில் உள்ள இணைப்பு- II இல் , அங்கீகரிக்கப்பட்ட 1169 மருத்துவமனைகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மருத்துவ மனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செலவில்லா இணைப்பு -IA இல் சிகிச்சை ரூ .5 இலட்சம் வரையிலும் மற்றும் வகைப்படுத்தப்பட்டுள்ள 07 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செலவில்லா சிகிச்சை ரூ .10 இலட்சம் வரையிலும் வழங்கப்படும்.
( ii ) அரசாணையின் இணைப்பு- IV இல் குறிப்பிடப்பட்டுள்ள , சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் 180 வகையான பொருட்களுக்கான செலவு தொகைகள் , பணச்செலவில்லா சிகிச்சையின் வரம்பிற்குள் வராது.
( iii ) அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 மற்றும் IA இல் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு , அச்சிகிச்சை அவசர தன்மை உடையது ( Emergency Care ) எனக் கருதப்படும் பட்சத்தில் , சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்திய பின் , அத்தொகையில் , தகுதியான செலவுத் தொகையை மீளப்பெறலாம்.
( iv ) அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 மற்றும் IA இல் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு , அச்சிகிச்சை அவசர தன்மையற்றது ( Non - Emergency Care ) எனக் கருதப்படும் பட்சத்தில் . சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்திய பின் , அச்சிகிச்சையை அங்கீகரிக்கப்பட்ட கடைநிலை ( Lowest Grade ) மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ஏற்படும் செலவீனத் தொகையில் 75 % தொகையை மீளப்பெறலாம்.
6. தகுதியான குடும்ப உறுப்பினர்கள் :
1. கணவன் ( அல்லது ) மனைவி .
2.குழந்தைகள் 25 வயது பூர்த்தி அடையும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை - ( இதில் எது முன்னரோ
3. திருமணம் ஆகாத அரசு ஊழியர்களின் பெற்றோர்கள் . ( அரசு ஊழியருக்கு திருமணம் ஆகும் வரை )
4. விவாகரத்து குழந்தைகள் இல்லாத பெற்ற அரசு ஊழியருக்கு பட்சத்தில் , அவரது பெற்றோர்கள் . ( விவாகரத்து பெற்ற அரசு ஊழியர் மறுமணம் செய்துகொள்ளும் வரை )
5. அரசு ஊழியரை சார்ந்திருக்கும் குறைந்தபட்சம் 40 % சதவீத அளவில் உடல் ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் வயது வரம்பின்றி .
7. காப்பீட்டு தொகை தொடர்பான குறைதீரப்பு முறையீடு :
இத்திட்டத்தில் சந்தாதாரர்கள் சிகிச்சை மற்றும் காப்பீட்டு தொகை பெறுவதில் ஏற்படும் குறைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநரிடம் தொடர்புடைய மருத்துவ ஆவணங்களின் நகல்கள் மற்றும் தொகை மீளப்பெறுவதற்கான படிவத்துடன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மனு செய்து முறையிடலாம். முறையீடு தொடர்பாக , மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் அவர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு , தொகை மீளப்பெறுவது தொடர்பான தகுதி அறிக்கையுடன் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நடைபெறும் மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழு கூட்டத்தின் பரிந்துரைக்கு மேலனுப்பப்படும். மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழுவில் கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் , சந்தாதாரர் மேல்முறையீடு செய்ய விரும்பினால் , மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழுவிடமிருந்து பதில் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் , சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரிடம் மேல்முறையிடலாம்.
8.உதவி தொலைபேசி எண் மற்றும் தொடர்பு அதிகாரிகள் :
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - 2021 இன் விவரங்கள் அறிய , அரசாணையின் இணைப்பு- v இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ( 1800 233 5666 ) தொடர்பு கொள்ளலாம். அவ்விணைப்பில் , காப்பீட்டு நிறுவனத்தின் தலைமையிட முகவரியும் தெரிவிக்கப்பட்டுள்ளன . மேலும் இணைப்பின் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரிகளின் ( Nodal Officers ) அலைபேசி சி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன . இணைப்பு : மேற்கண்டவாறு...
NHIS 2021 Full Details pdf - Download here...
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு , பணச்செலவில்லா மருத்துவ வசதியை வழங்கும்பொருட்டு , ஏற்கனவே அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -2016 , 30.06.2021 உடன் முடிவடைந்ததை தொடர்ந்து , புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , 2021 அமல்படுத்தப்பட்டு , யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , 2021 - இல் உள்ள காப்பீட்டு விவரங்கள் மற்றும் வசதிகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன :
1.காப்பீட்டு காலம் :
மருத்துவ காப்பீட்டு வசதியானது , 01.07.2021 முதல் 30.06.2025 வரையிலான 4 வருட தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும்
2. காப்பீட்டு தொகை :
அரசாணை ( பல்வகை ) எண் .160 , நிதி ( ஊதியம் ) துறை , நாள் : 29.06.2021 இணைப்பு -1 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ .5,00,000 / - ( ரூபாய் ஐந்து இலட்சம் ) வரை வழங்கப்படும்.
இணைப்பு- IA- இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 7 வகையான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ .10,00,000 / - ( ரூபாய் பத்து இலட்ச வரை வழங்கப்படும்.
மேலும் அரிதான நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு , ரூ .20,00,000 / - ( ரூபாய் இருபது இலட்சம் ) வரை , நிதிதுறைச் செயலாளர் , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர்களை கொண்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படும்.
கண்புரை சிகிச்சைக்கு அதிகபட்சமாக ஒரு கண்ணிற்கு ரூ .30,000 / வரையிலும் மற்றம் கர்ப்பப்பை நீக்கத்திற்கு அதிகபட்சமாக ரூ .50,000 / - வரையிலும் வழங்கப்படும் .
3. காப்பீட்டு சந்தா தொகை :
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் - 2021 - இல் , மாதாந்திர சந்தா ரூ .300 / ( ரூபாய் முன்னூறு மட்டும் ) ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மாநில அரசு ஊழியர்களாக இருப்பின் , இருவரில் யார் இளையவரோ , அவரது ஊதியத்தில் மட்டும் சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும்.
4.காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு தகுதியற்றவர்கள் :
கீழ்கண்ட வகையில் நியமணம் பெற்று பணிபுரிபவர்கள் , இத்திட்டத்தில் இணைவதற்கு தகுதியற்றவர்கள்.
5. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான காப்பீடு : ( i ) மேற்கண்ட அரசாணையில் உள்ள இணைப்பு- II இல் , அங்கீகரிக்கப்பட்ட 1169 மருத்துவமனைகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மருத்துவ மனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செலவில்லா இணைப்பு -IA இல் சிகிச்சை ரூ .5 இலட்சம் வரையிலும் மற்றும் வகைப்படுத்தப்பட்டுள்ள 07 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செலவில்லா சிகிச்சை ரூ .10 இலட்சம் வரையிலும் வழங்கப்படும்.
( ii ) அரசாணையின் இணைப்பு- IV இல் குறிப்பிடப்பட்டுள்ள , சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் 180 வகையான பொருட்களுக்கான செலவு தொகைகள் , பணச்செலவில்லா சிகிச்சையின் வரம்பிற்குள் வராது.
( iii ) அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 மற்றும் IA இல் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு , அச்சிகிச்சை அவசர தன்மை உடையது ( Emergency Care ) எனக் கருதப்படும் பட்சத்தில் , சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்திய பின் , அத்தொகையில் , தகுதியான செலவுத் தொகையை மீளப்பெறலாம்.
( iv ) அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 மற்றும் IA இல் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு , அச்சிகிச்சை அவசர தன்மையற்றது ( Non - Emergency Care ) எனக் கருதப்படும் பட்சத்தில் . சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்திய பின் , அச்சிகிச்சையை அங்கீகரிக்கப்பட்ட கடைநிலை ( Lowest Grade ) மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ஏற்படும் செலவீனத் தொகையில் 75 % தொகையை மீளப்பெறலாம்.
6. தகுதியான குடும்ப உறுப்பினர்கள் :
1. கணவன் ( அல்லது ) மனைவி .
2.குழந்தைகள் 25 வயது பூர்த்தி அடையும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை - ( இதில் எது முன்னரோ
3. திருமணம் ஆகாத அரசு ஊழியர்களின் பெற்றோர்கள் . ( அரசு ஊழியருக்கு திருமணம் ஆகும் வரை )
4. விவாகரத்து குழந்தைகள் இல்லாத பெற்ற அரசு ஊழியருக்கு பட்சத்தில் , அவரது பெற்றோர்கள் . ( விவாகரத்து பெற்ற அரசு ஊழியர் மறுமணம் செய்துகொள்ளும் வரை )
5. அரசு ஊழியரை சார்ந்திருக்கும் குறைந்தபட்சம் 40 % சதவீத அளவில் உடல் ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் வயது வரம்பின்றி .
7. காப்பீட்டு தொகை தொடர்பான குறைதீரப்பு முறையீடு :
இத்திட்டத்தில் சந்தாதாரர்கள் சிகிச்சை மற்றும் காப்பீட்டு தொகை பெறுவதில் ஏற்படும் குறைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநரிடம் தொடர்புடைய மருத்துவ ஆவணங்களின் நகல்கள் மற்றும் தொகை மீளப்பெறுவதற்கான படிவத்துடன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மனு செய்து முறையிடலாம். முறையீடு தொடர்பாக , மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் அவர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு , தொகை மீளப்பெறுவது தொடர்பான தகுதி அறிக்கையுடன் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நடைபெறும் மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழு கூட்டத்தின் பரிந்துரைக்கு மேலனுப்பப்படும். மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழுவில் கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் , சந்தாதாரர் மேல்முறையீடு செய்ய விரும்பினால் , மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழுவிடமிருந்து பதில் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் , சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரிடம் மேல்முறையிடலாம்.
8.உதவி தொலைபேசி எண் மற்றும் தொடர்பு அதிகாரிகள் :
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - 2021 இன் விவரங்கள் அறிய , அரசாணையின் இணைப்பு- v இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ( 1800 233 5666 ) தொடர்பு கொள்ளலாம். அவ்விணைப்பில் , காப்பீட்டு நிறுவனத்தின் தலைமையிட முகவரியும் தெரிவிக்கப்பட்டுள்ளன . மேலும் இணைப்பின் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரிகளின் ( Nodal Officers ) அலைபேசி சி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன . இணைப்பு : மேற்கண்டவாறு...
NHIS 2021 Full Details pdf - Download here...


