Breaking

Showing posts with label camp. Show all posts
Showing posts with label camp. Show all posts

Sunday, December 03, 2023

December 03, 2023

மாரடைப்பு ஏற்படும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க , சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம்



மாரடைப்பு ஏற்படும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க , சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம்

இளம் வயதில் மாரடைப்பு - குஜராத் அமைச்சர் அதிர்ச்சி தகவல் ! கடந்த 6 மாதங்களில் 1,052 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் , இதில் 80 % பேர் 11 -25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் குஜராத் கல்வித்துறை அமைச்சர் குபேர் டிண்டோர் தகவல் ! மாரடைப்பு ஏற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க , சுமார் 2 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக இளம் வயதினர் திடீர் திடீர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதே போல், இளைஞர்கள் பள்ளி, கல்லூரி, திருமணம் போன்ற நிகழ்வுகளில் நடனமாடும்போது உயிரிழந்தனர்.

மேலும் சில இளைஞர்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது உயிரிழந்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. இதனால் இது போன்ற சம்பவங்கள் கோவிட் தடுப்பூசியால் நிகழ்வதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னரே, மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி ICMR என்று சொல்லப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில், உயிரிழப்பு காரணம் கொரோனா தடுப்பூசி இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் அண்மைக்காலமாக இளைஞர்களுக்கு ஏற்படும் திடீர் மரணங்களுக்கான காரணம் என்ன என்று ஆய்வு மேற்கொண்டபோது, உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளதும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் தான் என்றும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் குபேர் டிண்டோர் (Kuber Dindor) பேசியதாவது, "கடந்த 6 மாதங்களில் குஜராத்தில் மட்டும் மாரடைப்பு காரணமாக 1,052 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பெரும்பாலாக, சுமார் 80% பேர் 11 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். தினமும் 108 ஆம்புலன்சுக்கு மாரடைப்பு காரணமாக அழைப்பு வருகிறது. கிரிக்கெட் விளையாடும்போது, கார்பா நடனமாடும்போது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவதை நாம் அறிகிறோம். இதனால் தற்போது மாநில அரசு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அதன்படி இதுபோன்ற திடீர் மாரடைப்பு மாணவர்களுக்கு ஏற்படும்போது, அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்க சிபிஆர் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் 2 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது வரும் டிசம்பர் 3 (நாளை) முதல் 17-ம் தேதி வரை நடைபெறும்" என்றார்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தசரா பண்டிகையின்போது குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கார்பா நிகழ்ச்சியில் நடனமாடியபோது, ஒரே நாளில் 10 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டதோடு, 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது கூடுதல் தகவல்

Monday, November 27, 2023

November 27, 2023

8698 ஆசிரியர்கள் தேவை - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் -03.12.2023



8698 ஆசிரியர்கள் தேவை - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் -03.12.2023

8698 ஆசிரியர்கள் தேவை - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது... வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்....

இடம் -

St.joesph college Hr.sec.School

சத்திரம் பேருந்து நிலையம் - திருச்சி -1

Interview நடைபெறும் நாள் 03.12.2023

Contact numbers-

82484 70862

80153 43462

86101 56109👇 Notification - CLICK HERE TO DOWNLOAD

Saturday, November 25, 2023

November 25, 2023

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - 25.11.2023 சனிக்கிழமை

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (இணைந்து நடத்தும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

நடைபெறும் நாள் 25.11.2023 சனிக்கிழமை

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை

இடம் :

புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடி

சிறப்பு அம்சங்கள் :

+ 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள்

+ 10,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள https://forms.gle/mPHsVwg7dcJkaHE89 செய்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு : 0461-2340159

மாவட்ட ஆட்சித்தலைவர் தூத்துக்குடி மாவட்டம். சுபா கிராபிக்ஸ், தூத்துக்குடி. 2 : 2328163

Tuesday, November 21, 2023

November 21, 2023

Election Special Camp - 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் சிறப்பு முகாம்

25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் சிறப்பு முகாம் Election Special Camp on 25.11.2023 and 26.11.2023

தேர்தல் சிறப்பு முகாம் நடைபெறும் நாள்கள்- பொது விளம்பரம் - 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு வாக்களார் பட்டியல் சுருக்க முறை திருத்தம்

திருவள்ளூர் மாவட்டம், 004. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 01.01.2024 தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பது தொடர்பாக, எதிர்வரும் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு வாக்களார் பட்டியல் சுருக்க முறை திருத்தம் (முகாம்) அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டோம்.

Wednesday, October 25, 2023

October 25, 2023

வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - வரும் 28ஆம் தேதி சிறப்பு முகாம்!



இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! வரும் 28ஆம் தேதி சிறப்பு முகாம்..!! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், வரும் அக்டோபர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள நிலையில், இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் புகைப்படத்தை எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Friday, September 29, 2023

September 29, 2023

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் - நாள் : 30/09/2023 - சனிக்கிழமை

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் - நாள் : 30/09/2023 - சனிக்கிழமை - 108 Placement Camp for Medical Assistant and Driver for Ambulance Service - Date : 30/09/2023 - Saturday

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது

108 ஆம்புலன்ஸ் சேவை - தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் EMRI GREEN HEALTH SERVICES நிறுவனத்துடன், அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து நமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது.

EMRI GREEN HEALTH SERVICES நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது. அதற்க்கான விவரங்கள் கீழ்வருமாறு.

ஓட்டுளருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி

வயது: 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பாலிளம்: ஆண் மற்றும் பெண்

உயரம்: 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்

ஓட்டுனருக்கான தகுதிகள்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

மாத ஊதியம்: ரூ.15235/- (மொத்த ஊதியம்). உரிமம் மற்றும் அனுபவம் மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: B Sc. நர்சிங், DGNM அல்லது, ANM, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்), Life Science Graduates (B.Sc. Zoology, Botany, Bio Chemistry, Microbiology, Biotechnology)

வயது: 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

பாலினம்: ஆண் மற்றும் பெண்.

மாத ஊதியம்: ரூ.15435/- (மொத்த ஊதியம்)

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் கீழ்வருமாறு:

நாள் : 30/09/2023 - சனிக்கிழமை

நேரம் : காலை 10 முதல் 2 மணி வரை இடம் அரசு மருத்துவமனை வளாகம், வாலாஜா.

EMRI GREEN HEALTH SERVICES,

DMS Campus,

Theynampet, Anna Salai, Chennai 600018 Tel.: +91 44-2888 8060 Web: www.emri.in

Saturday, September 23, 2023

September 23, 2023

ரூ.1000 கிடைக்காத பெண்களுக்காக சிறப்பு முகாம்கள் - தமிழக அரசு!

ரூ.1000 கிடைக்காத பெண்களுக்காக சிறப்புமுகாம்கள் நடத்த தமிழக அரசு பரிசீலனை!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. 1.06 கோடி மக ளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது.நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 18ம் தேதி முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கூறப்படுகிறது.

Wednesday, July 12, 2023

Sunday, April 02, 2023

April 02, 2023

ஏப்.6-ல் வேலைவாய்ப்பு முகாம்!

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏப்.6-ல் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் கு. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி, சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கிப்பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் 6-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஐசிஐசிஐ வங்கிக்கு வாடிக்கையாளர் உறவு மேலாளர் (Relationship Manager) பணிக்கு தகுதியுள்ள பட்டதாரி மாணவர்கள் ஆண், பெண் இருபாலரையும் தேர்ந்தெடுப்பதற்கான வளாக வேலைவாய்ப்பு முகாம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சுந்தரனார் அரங்கில் வரும் 6-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 2019முதல் 2022-ம் ஆண்டு வரை ஓர் இளங்கலை பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் மட்டும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகள் நிறுவனம் மூலமாக 21 நாள் இணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் ஐசிஐசிஐ வங்கியில் பணியமர்த்தப்படுவர். பயிற்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை டிவிஎஸ் நிறுவனம் வங்கிகள் மூலமாக தவணை முறையில் செலுத்தவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர். தவணை தொகையை வங்கி பணிக்கு சென்றபின் செலுத்தினால் போதுமானது.

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவோர் பல்கலைக்கழக இணையதளத்தில் ( https://www.msuniv.ac.in/) தங்கள் சுயவிவர குறிப்பு தகவலை பதிவு செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது சுயபதிவேடு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 96000 44872 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, March 15, 2023

March 15, 2023

வரும் 17ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 17ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை:கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும், 17ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்நடக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், கல்வி சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம்.

பணி நியமன உத்தரவு, அப்போதே வழங்கப்படும்.

பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், வேலைதேடுவோர், www.tnprivatejobs.tn.gov.in மற்றும், www.ncs.gov.in என்ற இணைய தளங்களில் பதிவு செய்யலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
March 15, 2023

5 மாவட்டங்களில் வரும் வாரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் வாரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் முயற்சியாக அவ்வவ்ப்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் துறைகள் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வரும் 16ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் தனியார் துறைகள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமானது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தஞ்சாவூரில் மார்ச் 18ம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. அடுத்தாக மார்ச் 18ம் தேதி திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது . அதில் திருவள்ளூரில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தர்மமூர்த்தி ராவ் பஹதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். மேலும் இராணிப்பேட்டையில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9 – 5 மணி முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஈரோட்டில் மார்ச் 19 அன்று நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் 3 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.

மேற்சொன்ன மாவட்டங்களில் நடைபெறும் முகாம்களில் 8ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். சுமார் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 40,000 பேருக்கு வேலை வழங்க முடிவு செய்துள்ளனர். அதனால் இந்த வாய்ப்பை தவற விடாமல் முகாமிற்கு வருகை புரிபவர்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆதார், சுய விவர குறிப்பு, முன்பதிவு செய்த நகல் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 15, 2023

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 18.03.23

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 18ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகின்றன.

இந்த முகாம் பற்றி, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், நேற்று துவக்கி வைத்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Monday, March 06, 2023

March 06, 2023

மாா்ச் 10-இல் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள்

மாா்ச் 10-இல் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள்

தமிழகத்தில் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பருவகாலம் நிறைவடைந்த பிறகும் தமிழகத்தின் பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. முதியவா்கள், குழந்தைகளிடையே காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற பாதிப்பு இருப்பதாகவும், அதற்கு இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் பரவலே காரணம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த வாரத்தில் தமிழக பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்விலும் அந்தத் தொற்று கண்டறியப்பட்டு மாவட்ட நிா்வாகங்களுக்கு அதுதொடா்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம்கள் நடத்தப்படும். குறிப்பாக, காய்ச்சல் தொற்று அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாயிலாக முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

காலை 9 மணி முதல் அந்த முகாம் நடைபெறவுள்ளது. அதில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு ஆய்வக நுட்பனா், ஒரு உதவியாளா் இருப்பாா்கள். இது குளிா்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் வழக்கமான காய்ச்சல் பாதிப்புதான். இதன் அறிகுறிகள் உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சலாகவே உள்ளது.

முதியவா்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவா்கள் தவறாமல் இந்த முகாமில் பங்கேற்று, தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும். காய்ச்சல் முகாமிலேயே பொதுமக்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக, மக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம் என்று அவா் தெரிவித்தாா்

Total Pageviews

Search This Blog