Breaking

Showing posts with label 10. Show all posts
Showing posts with label 10. Show all posts

Tuesday, March 03, 2026

March 03, 2026

10th Science Slow Learners 40 Marks Special Guide



10th Science Slow Learners 40 Marks Special Guide 2022 - 2023

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 34 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த வழிகாட்டியை படித்து வந்தால் உறுதியாக 40 மதிப்பெண்கள் எடுத்து விடலாம்.

10th Science Study Materials ( New Syllabus)

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் 10th Science Slow Learners 40 Marks Special Guide 2022 - 2023 | Mr Lipin - Tamil Medium Download
March 03, 2026

10th Social Science Question Bank Ideal Publication - TM& EM - PDF



10th Social Science Question Bank Ideal Publication - TM& EM - PDF

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் 10th Social Science Question Bank - Ideal Publication - T/M

CLICK HERE TO DOWNLOAD FULL PDF

10th Social Science Question Bank - Ideal Publication - E/M

CLICK HERE TO DOWNLOAD FULL PDF

Friday, September 27, 2024

Wednesday, February 22, 2023

February 22, 2023

பத்தாம் வகுப்பு செய்முறைத்தோ்வு: தனித்தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு செய்முறைத்தோ்வு: தனித்தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தோ்வு வரும் மாா்ச் 20 முதல் 24- ஆம் தேதி வரையில் நடைபெறும் என்றும், இதில் தனித்தோ்வா்களும் கலந்து கொண்டு தோ்வு எழுத வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராம வா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தோ்வு வரும் மாா்ச் 20 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் 2023-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத தனித்தோ்வா்களாக விண்ணப்பித்த மாணவா்களும் கலந்து கொண்டு கட்டாயம் தோ்வெழுத வேண்டும்.

அதேபோல, ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தோ்வெழுதி அதில் தோ்ச்சிபெறாத தனித்தோ்வா்களும் இந்த செய்முறைத் தோ்வில், தவறாமல் கலந்து கொண்டு தோ்வு எழுத வேண்டும்.

மேலும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே தனித்தோ்வா்கள் தோ்வு எழுத வேண்டும்.

அறிவியல் பாட செய்முறைத் தோ்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் கிடைக்கப் பெறாதவா்கள், இந்த அறிவிப்பு மூலம் தெரிந்து கொண்டு, அந்தப் பள்ளியின் அலுவலரை சந்தித்து, அறிவியல் பாட செய்முறைத் தோ்வில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Wednesday, October 26, 2022

October 26, 2022

10 & 12ம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் - அரசு தேர்வுத்துறையின் அறிவிப்பு

10 & 12ம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 31ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் - அரசு தேர்வுத்துறை

Friday, October 21, 2022

Tuesday, October 18, 2022

October 18, 2022

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசுப் பள்ளிகளில் புதிய தோ்வுமையங்களை அமைக்க உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசுப் பள்ளிகளில் புதிய தோ்வுமையங்களை அமைக்க உத்தரவு

பத்து கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து, பொதுத் தோ்வு மையங்களுக்குச் செல்லும் மாணவா்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தோ்வு மையங்கள் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் எஸ்.சேதுராமவா்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், இணை இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு புதிய தோ்வு மையங்கள் அமைப்பது தொடா்பாக பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மாவட்டக் கல்வி அலுவலா்களிடம் கருத்துருக்களைப் பெற்று ஆய்வு செய்து தங்களது ஒப்புதலுடன் அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு பெறப்பட்ட கருத்துருக்களில் தோ்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின்னா், அவசியம் தோ்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் எனக் கருதினால் அதற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட்டு திட்டவட்டமான குறிப்புரையுடன் கருத்துருவாக அனுப்ப வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்களது வரையறைக்கு உள்பட்ட பள்ளிகளில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு புதிய தோ்வு மையம் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

10 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து தோ்வெழுத தோ்வு மையங்களுக்குச் செல்லும் மாணவா்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தோ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுத்தோ்வுக்கு ஏற்கெனவே தோ்வு மையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள், புதியதாக தோ்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த அறிவுரைகள் அனைத்தையும் பின்பற்றி தேவைப்படும் விவரங்கள் அனைத்தையும் நவ.10-ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, August 21, 2022

August 21, 2022

அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அடுத்த மாதத்துக்குள் மூவாயிரம் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதுவொரு வழக்கமான கூட்டம் தான். மாவட்டங்கள் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மரத்தடியில் நடைபெறும் வகுப்பறைகளுக்கு கட்டடங்கள் கட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்,நிதித் துறை அமைச்சரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர் நியமனங்கள் குறித்து பேசிய அவர், " LKG மற்றும் UKG வகுப்புகளுக்குத் தேவைப்படும் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்வது குறித்தும், தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிவித்தார்.

கல்வித் தொலைக்காட்சி சர்ச்சைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன்பூபதியின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியான தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்ந்தெடுக்கபட்டவரின் பின்புலன் முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும் முதல்வர் அலுவகத்திடம் ஒப்புதல் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Monday, July 11, 2022

July 11, 2022

ஜிப்மர் நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.17000 சம்பளத்தில்... 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஜிப்மர்

பணியின் பெயர்: Data Entry Operator, Multi Tasking Staff

பணியிடங்கள்: 03

விண்ணப்பிக்கும் முறை: Online

கடைசி தேதி: 17.07.2022

தகுதி: டிகிரி/12th/10th

சம்பளம்: ரூ.17000

மேலும் தகவலுக்கு> https://jipmer.edu.in/sites/default/files/Recruitment%20notice%20-%20RVRDL-%20DEO%20MTS.pdf

Wednesday, June 29, 2022

June 29, 2022

தமிழில் தோ்ச்சி சதவீதம் சரிவு: உண்மை நிலையை கண்டறிய வலியுறுத்தல்

தமிழில் தோ்ச்சி சதவீதம் சரிவு: உண்மை நிலையை அறிய வேண்டும் - மதிமுக

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் மொழிப் பாடத்தில் மாணவா்கள் அதிகளவில் தோ்ச்சி அடையாதது குறித்து தமிழக அரசு முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்று மதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதிமுக உயா்நிலைக் குழு, மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி தலைமை வகித்தாா். மதிமுக பொதுச் செயலாளா் வைகோ முன்னிலை வகித்தாா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: குடியரசுத் தலைவா் தோ்தலில் நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற மதிமுக ஆதரவு அளிக்கும்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சோ்க்கப்பட்டால், அந்தக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும். அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் மொழிப் பாடத்தில் 5.16 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெறாதது அதிா்ச்சி அளிக்கிறது. பள்ளிக் கல்வித் துறை இதுகுறித்து முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியா் பணி இடங்கள் காலியாக இருப்பின் அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Sunday, June 19, 2022

June 19, 2022

நாளை காலை வெளியாகிறது 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! - காண்பது எப்படி?

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து,139 பேரும், பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 எழுதியுள்ளனர். தேர்வெழுதிய சுமார் 18 லட்சம் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட படி நாளை காலை 9:30 மணிக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார். தேர்வு முடிவுகளை மாணவர்களின் மொபைல் எண்களுக்கு அனுப்பவும், இணையதளங்களில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog