Breaking

Showing posts with label general quarterly exam. Show all posts
Showing posts with label general quarterly exam. Show all posts

Tuesday, September 10, 2024

Tuesday, September 19, 2023

September 19, 2023

பொது வினாத்தாள் முறையில் இன்று முதல் 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவக்கம்

பொது வினாத்தாள் முறையில் இன்று முதல் 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவக்கம்

தமிழக அரசு பாடத் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கும் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு இன்று செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த தேர் வுகள் வருகிற 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Wednesday, September 28, 2022

September 28, 2022

இடைநிலை ஆசிரியர்களை எள்ளி நகையாடும் கல்வித் துறை - Education department making fun of secondary teachers

இடைநிலை ஆசிரியர்களை எள்ளி நகையாடும் கல்வித் துறை - Education department making fun of secondary teachers

நாசா விஞ்ஞானிகளுக்கே நாக்கு தள்ளும் ! இந்த அரிய கண்டுபிடிப்பு..!!!

*விடுமுறைக்குள் ஒரு விடுமுறை*!!! *குடைக்குள் பெய்யும் மழை போல*....

*விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதை வேலை நாட்களில் ஈடு கட்டுவதே வழக்கம். தற்போது விடுமுறை நாட்களில் செய்த வேலையை விடுமுறை நாட்களிலேயே ஈடுகட்டும் தாராளமய,தனியார்மய சிந்தனைவாதிகள்*.

பள்ளிக்கல்வித்துறையின் நாற்றங்காலே ஆரம்பக்கல்விதான் அந்த ஆரம்பக் கல்வியை போதிக்கும் இ.நி.ஆசிரியர்களை கால்பந்து போல தன் விருப்பத்திற்கு எட்டி உதைக்கிறார்கள்...

கல்விச்சூழலில் ஆசிரியர்களும்,மாணவர்களும் ஒன்றுதான்....

கற்பவர்களுக்கு எப்படி விடுமுறை தேவைப்படுகிறதோ அதே போலத்தான் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தேவைப்படும் நமது நாடு சுதந்திரம் பெற்று குடியரசு ஆன காலத்திருந்தே மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் சேர்த்தே காலாண்டு,அரையாண்டு கோடை விடுமுறையென விடப்பட்டு வருகிறது.

நம்மை ஆண்ட மாபெரும் ஆளுமைகள் படிக்காத மாமேதை கர்மவீரர் காமராசர் ,தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர்- அண்ணா,முத்துவேல் ஈன்றெடுத்த முத்தமிழ்க் கடல் கலைஞர்- கருணாநிதி, ஏழைகளின் ஏந்தல் புரட்சித் தலைவர் M.G.R ,தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி புரட்சித் தலைவி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தெரியாத ஒரு கண்டுபிடிப்பை தற்போது சில மெத்தப்படித்த மேதாவிகள் கண்டுபிடித்துள்ளார்கள்..

விடுமுறை என்பது மாணவர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர்களுக்கு கிடையாதென்று....

நித்தம் ஒரு அறிக்கை !,நிமிடத்திற்கு ஒரு அறிக்கை பாடம் நடத்தச் சொல்லுவதைத் தவிர பிற வேலைகளுக்கான அறிக்கை ....

நவீனப்படுத்துகிறோம் என்கிறோம் என்கிற பெயரில் தாய்மை குணம் கொண்ட தொடக்கக் கல்வியை சீரழிக்காதீர்கள்!!!

இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்தாதீர்கள் விடுமுறைக்குள் விடுமுறை விடாதீர்கள்.

*நீங்கள் அளித்திருப்பது ஈடுசெய்யும் விடுப்பல்ல !!!இ.நி.ஆசிரியர்களை இழிவு செய்யும் விடுப்பு* !!!

இந்தச் செயலை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி காஞ்சிபுரம் மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது

மாவட்ட மையம் .

TNPTF KANCHEEPURAM DISTRICT

Sunday, September 25, 2022

September 25, 2022

அனைத்து வினாத்தாள்களும் முதல் நாளே (26.09.2022) பள்ளிகளுக்கு வழங்க இயக்குநர் உத்தரவு

அனைத்து வினாத்தாள்களும் முதல் நாளே (26.09.2022) பள்ளிகளுக்கு வழங்க இயக்குநர் உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD

Monday, September 19, 2022

September 19, 2022

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை - சுற்றறிக்கை - முதன்மைக்கல்வி அலுவலகம், விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தும் நோக்கத்தை இலக்காகக்கொண்டு, அந்த இலக்கை அடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை நல்கி காலாண்டுத் தேர்வை நன்முறையில் நடத்தி மதிப்பீடு செய்து மாணவர்களின் நிலை அறிந்து தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க முழு முயற்சியோடு காலம் கருதாது கற்பித்தல் பணியை மேற்கொண்டுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திட திட்டமிட்டு செயல்படும் வகையில் காலாண்டுத் தேர்வை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடத்தி மதிப்பீடு செய்திட வேண்டுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

1. மாணவர்களிடம் பொதுத்தேர்வு தொடர்பான அச்சத்தை போக்கிடும் வகையில் காலாண்டுத் தேர்வை எவ்வித புகாருக்கும் இடமின்றி ஒரு முன்மாதிரி பொதுத்தேர்வாக நடத்தி விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்திட தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2. 6,7,8,9 காலாண்டுத் தேர்வு வினாத்தாட்கள் மாவட்ட தேர்வு குழுவால் வடிவமைக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. எனவே, மிகுந்த கவனத்துடன் தேர்வுகள் நடத்தவேண்டும்.

3. காலாண்டுத்தேர்வுக்கு மாணவர்களுக்கு தேர்வு அறை ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கு தேர்வுஅறை ஒதுக்கீடு, தேர்வுக்கு வருகை தராதோர், விடைத்தாள் கட்டுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் போன்றவை தொடர்பாக உரிய பதிவேடு பராமரிக்க வேண்டும்.

4. தேர்வு நாளன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அவரவர் வினாத்தாள் கட்டுக் காப்பக மையத்தில் வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் பெற்றுச் செல்லுமாறு அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலதாமதம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

5.காலாண்டுத்தேர்வுக்குரிய பாடத்திட்டம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

6. சுயநிதி/மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட அளவில் வழங்கப்படும் வினாத்தாட்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்பட்டால் துறை நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவிக்கலாகிறது.

7. 6,7,8,9 வகுப்புகளுக்கான தேர்வுகள் ஆண்டு பொதுத் தேர்வைப்போல வகுப்பறைக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப தேர்வு அறைகளை அமைக்கவேண்டும்.

8. பொதுத் தேர்வைப்போல தேர்வு தொடங்குவது முதல் முடியும் வரை மணி அடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

9. தேர்வுகால அட்டவணையை அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்பறைகளிலும், அறிவிப்பு பலகைகளிலும் கண்டிப்பாக தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்.

எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் தேர்வினை நன்முறையில் நடத்தி மாணவர்கள் கற்றல் திறன் அறிந்து அதற்கேற்ப பயிற்சியளித்து நமது மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்த ஆசிரியர்களுடன் இணைந்து பாடுபட வேண்டுமென அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு (1)6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை

(2) பாடத்திட்டம்

Thursday, September 15, 2022

September 15, 2022

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது

There is no general quarterly exam in Tamil Nadu schools this year

Action to conduct quarterly examination on different dates in each district - Department of School Education

Instruction to conduct and complete the quarterly exams by 30th of this month

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது

ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை

இம்மாதம் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தல்

Total Pageviews

Search This Blog