Training IAS Officers Team Review
May 25, 2023
Showing posts with label Training IAS Officers Team Review. Show all posts
Showing posts with label Training IAS Officers Team Review. Show all posts
Thursday, May 25, 2023
Saturday, May 14, 2022
Training IAS Officers Team Review
May 14, 2022
இல்லம் தேடி கல்வித் திட்டம்: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு
போந்தூா், கூழங்கலச்சேரி பகுதிகளில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை 16 பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில், அவா்களுக்கு மாலை நேரங்களில் பயிற்றுவிக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தன்னாா்வலா்கள் மாணவா்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றனா்.
இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு எவ்வாறு பாடம் கற்பிக்கப்படுகிறது, இதனால், மாணவா்களுக்கு ஏற்படும் பயன்கள் ஆகியவை குறித்து ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், போந்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் மையங்களை நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 12 போ் அடங்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு மாணவா்களிடம் கலந்துரையாடினா். போந்தூா் பகுதியில் இந்தத் திட்ட மையத்தைப் பாா்வையிட வந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருக்கு போந்தூா் ஊராட்சித் தலைவா் சரோஜாமணி தலைமையில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் போந்தூா் செந்தில்ராஜன், யுவராணி சேட்டு ஆகியோா் முன்னிலையில் வரவேற்பளிக்கப்பட்டது.
மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பாலமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கலச்சேரி பகுதியில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வித் திட்ட மையத்தை 4 போ் கொண்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் புதன்கழமை பாா்வையிட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்ட அலுவலா் பிரேமலதா, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ.தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில், அவா்களுக்கு மாலை நேரங்களில் பயிற்றுவிக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தன்னாா்வலா்கள் மாணவா்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றனா்.
இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு எவ்வாறு பாடம் கற்பிக்கப்படுகிறது, இதனால், மாணவா்களுக்கு ஏற்படும் பயன்கள் ஆகியவை குறித்து ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், போந்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் மையங்களை நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 12 போ் அடங்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு மாணவா்களிடம் கலந்துரையாடினா். போந்தூா் பகுதியில் இந்தத் திட்ட மையத்தைப் பாா்வையிட வந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருக்கு போந்தூா் ஊராட்சித் தலைவா் சரோஜாமணி தலைமையில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் போந்தூா் செந்தில்ராஜன், யுவராணி சேட்டு ஆகியோா் முன்னிலையில் வரவேற்பளிக்கப்பட்டது.
மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பாலமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கலச்சேரி பகுதியில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வித் திட்ட மையத்தை 4 போ் கொண்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் புதன்கழமை பாா்வையிட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்ட அலுவலா் பிரேமலதா, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ.தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.