Government Publication
March 08, 2026
Showing posts with label 10th Public Exam 2022. Show all posts
Showing posts with label 10th Public Exam 2022. Show all posts
Sunday, March 08, 2026
Friday, February 27, 2026
Wednesday, February 26, 2025
Wednesday, April 05, 2023
ATTENDANCE
April 05, 2023
தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் வரும் கல்வி ஆண்டில் அமல்
தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் வரும் கல்வி ஆண்டில் அமல் - 75 percent attendance to write the exam will be mandatory in the coming academic year
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, வரும் கல்வியாண்டு முதல், 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
பள்ளிக்கல்வித் துறை நடத்திய வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான, 'மெய்யறிவு கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று துவங்கியது.
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா முன்னிலை வகித்தார். அமைச்சர் மகேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளிக் கல்வி துறை கமிஷனர் நந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார். தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி நன்றி கூறினார். சமக்ர சிக் ஷா கூடுதல் இயக்குனர் ராமேஸ்வர முருகன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
வினாடி - வினா போட்டியில், மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட, 152 மாணவர்கள், வரும், 8ம் தேதி வரை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களைச் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
மாநில அளவில் வினாடி - வினா போட்டியில் தேர்வு பெற்ற, 152 மாணவர்களில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தின் ஆர்வத்தை அதிகரிக்க, இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ள மாணவர்களின் சுய விபரங்கள் வெளியே 'லீக்' ஆனதா என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. தவறு நடந்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்காக, ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் எல்லா நாட்களிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்காக குறிப்பிட்ட கால நிர்ணயம் எதுவும் கிடையாது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, திட்டமிட்ட தேதியில், ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும். ஏதாவது சூழ்நிலை ஏற்பட்டால், தேர்வு தேதி மாற்றம் குறித்து அறிவிக்கப்படும்.
பிளஸ் 2 மே, 5ம் தேதி; பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கு, மே 7ம் தேதி, தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுஉள்ளது.
கொரோனா காலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என்பதால், இந்த ஆண்டு வருகைப் பதிவுக்கான கட்டுப்பாடு இன்றி, அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் கல்வி ஆண்டு முதல், 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Monday, November 07, 2022
Sunday, October 02, 2022
EXAMS
October 02, 2022
10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!
10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தெரிவிக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக 2 பிரிவுகளாக நடத்தியது. ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து விட்டதால், பழைய படியே பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வுகள் தொடங்குவதற்கு 45 நாட்கள் முதல் ஒரு மாதம் முன்னதாக மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் தேர்வின் அட்டவணை வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் , நடப்பாண்டில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக நடப்பது போல் 100% பாடத்திட்டத்தின் படி தான் தேர்வுகள் நடக்க உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தெரிவிக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக 2 பிரிவுகளாக நடத்தியது. ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து விட்டதால், பழைய படியே பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வுகள் தொடங்குவதற்கு 45 நாட்கள் முதல் ஒரு மாதம் முன்னதாக மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் தேர்வின் அட்டவணை வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் , நடப்பாண்டில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக நடப்பது போல் 100% பாடத்திட்டத்தின் படி தான் தேர்வுகள் நடக்க உள்ளது.
Friday, April 22, 2022
Thursday, April 21, 2022
Wednesday, April 20, 2022
Issuance of hall tickets to individual selectors
April 20, 2022
தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
ஹால் டிக்கெட் வெளியீடு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தனி தேர்வர்கள், 'ஹால் டிக்கெட்'டுகளை, இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:அடுத்த மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று பிற்பகல் 2:00 மணி முதல், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
பிளஸ் 1 அரியர் பாடங்களுக்கும், தற்போது பிளஸ் 2வும் எழுத உள்ள தனி தேர்வர்களுக்கு, ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் விண்ணப்ப எண் மற்றும்நிரந்தர பதிவெண் மற்றும்பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.மேலும், பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள்
பொது தேர்வு அட்டவணை
வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ளன. செய்முறை பயிற்சி வகுப்பு நடந்த பள்ளிகளில், செய்முறை தேர்வும் நடத்தப்படும்.தங்களுக்கான செய்முறை தேர்வு தேதியை, பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு எழுத அனுமதி இல்லை; பொது தேர்வு அட்டவணையை, www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தனி தேர்வர்கள், 'ஹால் டிக்கெட்'டுகளை, இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:அடுத்த மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று பிற்பகல் 2:00 மணி முதல், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
பிளஸ் 1 அரியர் பாடங்களுக்கும், தற்போது பிளஸ் 2வும் எழுத உள்ள தனி தேர்வர்களுக்கு, ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் விண்ணப்ப எண் மற்றும்நிரந்தர பதிவெண் மற்றும்பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.மேலும், பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள்
பொது தேர்வு அட்டவணை
வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ளன. செய்முறை பயிற்சி வகுப்பு நடந்த பள்ளிகளில், செய்முறை தேர்வும் நடத்தப்படும்.தங்களுக்கான செய்முறை தேர்வு தேதியை, பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு எழுத அனுமதி இல்லை; பொது தேர்வு அட்டவணையை, www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

