Breaking

Showing posts with label JACCTO-GEO. Show all posts
Showing posts with label JACCTO-GEO. Show all posts

Monday, February 09, 2026

Saturday, January 31, 2026

Thursday, December 18, 2025

Wednesday, November 19, 2025

Wednesday, February 14, 2024

February 14, 2024

திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும்.

பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும்.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

Tuesday, January 23, 2024

January 23, 2024

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ கடிதம்



கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ கடிதம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக முதல்வருக்கு ஜாக்டோ- ஜியோ கடிதம் எழுதியுள்ளது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சார்பில் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டிலும், அதன்பின் 2016-ல் அதிமுக ஆட்சி தொடர்ந்த போதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் முதல்வரான பழனிசாமி எங்கள் வாழ்வதாரங்களுக்காக நியாயமான போராட்டங்களை தொடங்கியபோது, அவற்றை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் எங்களை உதாசீனப்படுத்தினார்.

அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தீர்கள். தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது 3 ஆண்டு முடியும் தருவாயில், எங்கள் கோரிக்கைகளில் ஒன்றின் மீது கூட தாங்கள் உத்தரவிடாத நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இனிமேலும் பொறுமையாக காத்திருப்பது அர்த்தமற்றது என்று உணர்ந்து ஜாக்டோ-ஜியோ போராட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஜன.22 முதல் 24 வரை மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம், ஜன.30-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம், பிப்.5 முதல் 9 வரை பாஜக, அதிமுக தவிர்த்து மற்ற அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது, பிப்.10-ல் மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு, பிப்.15-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சருடன் சந்திப்பு: இதற்கிடையில், நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசுவை ஜாக்டோ- ஜியோ அமைப்பின் அங்கமான தமிழ்நாடு தலைமைச்செயலக சங்க நிர்வாகிகள் கு.வெங்கடேசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது மனிதவள மேலாண்மைத் துறை அனுப்பிய கடிதத்தில் உள்ள முரண்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்ததாக சங்க நிர்வாகிகள் கூறினர்.

Sunday, January 21, 2024

January 21, 2024

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்



ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ (ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்) கூட்டமைப்பினர் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் அனுப்பியுள்ள கடிதம்: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் என அனைத்து அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக எங்களுடைய வாழ்வாதார உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறோம்.

2003ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். 2011ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக தேர்தல் அறிக்கையிலும், பிரசாரத்திலும் கூறி, எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தார்.

அவர் மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி எங்கள் கோரிக்கைகளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. தற்போது தமிழகத்தின் நிதிநிலை சரியாகும் வரை கொஞ்சகாலம் பொறுத்திருங்கள் என்று கூறி வருகிறீர்கள். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு முடியும் தருவாயில் தற்போது போராட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி 22ம் தேதி (நாளை) முதல் 24ம் தேதி வரை 3 நாள் மாநிலம் முழுவதும் ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தப்படும். 30ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும்.

பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரப்படும். 10ம் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். 16ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளனர்.

Tuesday, December 26, 2023

December 26, 2023

கோரிக்கைகளை வலியுறுத்தி 28ல் முற்றுகைப்போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி 28ல் முற்றுகைப்போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகைப் போராட்டம் 28ம் தேதி நடக்கும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்தனர். முன்னதாக கடந்த 8ம் தேதி முதல்வர் அமைத்த 3 நபர் குழுவினர் மேற்கண்ட சங்கத்தினரை அழைத்துப் பேசினர். அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது. இதையடுத்து அறிவித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், வரும் 28ம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்காக ஜாக்டோ-ஜியோ சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Monday, December 25, 2023

December 25, 2023

தொடர் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ ஆலோசனை

தொடர் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ ஆலோசனை

அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சேர்ந்து, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாக போராடி வருகின்றன. இந்த கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து, ஆட்சிக்கு நெருக்கடி தரப்பட்டது.அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., சார்பில், ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தியில் உள்ளன.இந்நிலையில், கோரிக் கைகளை வலியுறுத்தி, வரும் 28ம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அப்போது, மூன்று லட்சம் பேரை திரட்டி, சென்னையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டவும், தி.மு.க., அரசுக்கு தங்களின் வலுவை காட்டவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதன் பிறகும், கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், பொது தேர்வுகள் முடிந்ததும், லோக்சபா தேர்தலுக்கு முன், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, ஜாக்டோ ஜியோ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Friday, December 15, 2023

December 15, 2023

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 19.12.2023

Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) 15-12-2023

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அன்பிற்கினிய தோழர்களே,

வணக்கம்.

ஜாக்டோ ஜியோ உபர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் எதிர்வரும் 19.12.2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருச்சியில் பின்வரும் பொருள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால். இக்கூட்டத்தில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாள்

19.12.2023

இடம்

அருண் ஓட்டல் காங்கலி ஹால் (மத்திய பேருந்து நிலையம் அருகில்) திருச்சி

பொருள்

கடந்த 18.10.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழுக் கூட்ட முடிலின் அடிப்படையில், எதிர்வரும் 28.12.2023 அன்று கோட்டை முற்றுகை போராட்டத்தினை மிக எழுச்சியாக நடத்துவது குறித்தான ஆலோசனை

தோழமை வாழ்த்துக்களுடன் மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்காக

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுத் தலைவர்களே!!!

ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கனே!!!

அனைவரும் திருச்சியில்

கடந்த 30 மாதங்களாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்அரசு பணியாளர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தினை நிர்பந்திக்கக்கூடிய போராட்டமாக கோட்டை முற்றுகைப் போராட்டடத்தினை நடத்திடுவோம்!!!

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை வென்றெடுப்போம்!!!

பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம்!!!

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட வைப்போம்!!!

ஜாக்டோ ஜியோ 28.12.2023 கோட்டை முற்றுகை

Thursday, December 14, 2023

December 14, 2023

ஜாக்டோ ஜியோ இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு



ஜாக்டோ ஜியோ இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ சார்பாக எதிர்வரும் 28.12.2023 அன்று கோட்டை முற்றுகைத் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நாளை 14.12.2023 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு சென்னை - திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெறும் .

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைத்து செய்தி மற்றும் ஊடகங்களைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
December 14, 2023

ஜாக்டோ ஜியோ - இன்றைய ( 14.12.2023 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்



ஜாக்டோ ஜியோ - இன்றைய ( 14.12.2023 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: 14.12.2023

💥 15 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

💥இன்றைய கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு வி.எஸ்.முத்துராமசாமி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திரு அன்பரசு,தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் திரு சுரேஷ் ஆகிய மூன்று சங்க பொறுப்பாளர்கள் தலைமைதாங்கினர்.

💥இன்றைய கூட்ட முடிவில் இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.

♦️(1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை நிறைவேற்ற 28.12.2023 வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல்.

♦️(2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. 💥கோரிக்கைகள்:

🔥CPS திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

🔥இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்

🔥சரண் விடுப்பு ஊதியம், ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

🔥காலிப் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்.

🔥உட்பட கோரிக்கைகள்...

💥இன்றைய கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோவில் இணைந்துள்ள 25 சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்......

Friday, December 01, 2023

December 01, 2023

ஜாக்டோ ஜியோ சார்பில் டிச.9ல் சாலை மறியல்

ஜாக்டோ ஜியோ சார்பில் டிச.9ல் சாலை மறியல்

சிவகங்கையில் டிச.9ல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரன், நாகராஜன், ராம்குமார் தலைமை வகித்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், குமார் மாநில முடிவுகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் 2003 ஏப்.,க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும். முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு உடனே வழங்க வேண்டும். இடைநிலை, உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.


அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். கல்லுாரி பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாட்டு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயர், மேல்நிலை பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்த்த வேண்டும்.

சிறப்பு கால முறை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 9ல் சிவகங்கை அரண்மனை வாசல் முன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.

டிச., 1 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பிரசார கூட்டங்களை நடத்துவது என தீர்மானித்தனர

Sunday, November 19, 2023

November 19, 2023

மறியல் தேதி மாற்றம் - JACTTO GEO தகவல்

மறியல் தேதி மாற்றம் - JACTTO GEO தகவல்

நவம்பர் 25ஆம் தேதி மறியல் தேதி மாறுதல் - ஜாக்டோ ஜியோ

நவம்பர் 25ஆம் தேதி மறியல் தேதி மாறுதல் செய்யப்பட்டு டிசம்பர் 9ஆம் தேதி என்று மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாநில அமைப்பு கூறியுள்ளது. 25 ஆம் தேதி 1 to 5வகுப்புகளுக்கு CRC நடைபெற உள்ளதால் மற்றும் BLO Duty அன்றைய தேதியில் இருப்பதால் தேதி மாறுதல் செய்யப்பட்டுள்ளது என ஜாக்டோ - ஜியோ தகவல்

Monday, October 30, 2023

October 30, 2023

மாவட்ட தலைநகரில் நவம்பர் ஒன்றாம் தேதி ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ 4 கட்ட போராட்ட அறிவிப்பு!



ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு

மாவட்ட தலைநகரில் நவம்பர் ஒன்றாம் தேதி ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ

அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ 4 கட்ட போராட்ட அறிவிப்பு

இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF
கோரிக்கைகள்

தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு திட்டம் காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டிருப்பதை ரத்து செய்து மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

(அ) இடைநிலைஆசிரியர்களுக்கும், முதுநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை களையப்பட வேண்டும்.

(ஆ) மேலும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

- சத்துணவு, அங்கள்வாடி, ஊர்ப்புற நூலகர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்களுக்கும் மற்றும் தொகுப்பூதியம், தினக்கூலியில் பணியாற்றிவரும் எம்.ஆர்.பி. செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

- அரசு பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் களப்பணியாளர்கள் பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு (CSA) உடனடியாக வழங்கிட வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிக் காலத்தை பணிவரன்முறை செய்திட வேண்டும்.

2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்த வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

தனியார் மய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

அரசுத் துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

* தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டுமென ஜாக்டோ - ஜியோ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு

நவம்பர் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஆசிரியர் - அரசு ஊழியர் - அரசுப் பணியாளர் சந்திப்பு

போராட்ட பிரச்சார இயக்கம். நவம்பர் 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்.

டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் லட்சக்கணக்கான தோழர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போராட்டம், CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் 0 முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை (DA) சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.

தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MRS செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்புற நூலகர் O உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்

7-வது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொைைகயை வழங்கிட வேண்டும்.

இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF




Total Pageviews

Search This Blog