Breaking

Showing posts with label கல்லூரிகள். Show all posts
Showing posts with label கல்லூரிகள். Show all posts

Tuesday, August 09, 2022

August 09, 2022

கவனம் பெறும் கலைக் கல்லூரிகள்: தமிழ் இலக்கியத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

தமிழகத்தில் பொறியியல் போன்ற தொழில் படிப்புகளை விட கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

சமீப ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வருகின்றன. குறைந்த கட்டணம் என்பதால் அரசு, அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் (காலை சுழற்சி வகுப்புகள்) சேர மாணவர்கள் விரும்புகின்றனர். கலைப் பிரிவுவில் தலா ஒரு வகுப்பிற்கு 60 பேரும், அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா 40 மாணவ, மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 3 அல்லது 4 மடங்கு விண்ணப்பங்கள் வருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். மதுரை, திண்டுக்கல் , தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை அடங்கிய மதுரை மண்டலத்திலுள்ள 29 அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் 2022 - 23-ம் கல்வியாண்டிற்கு பல இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 73,260 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 14, 430 மட்டுமே. 5 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதாக கல்லூரி கல்வி இணை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கல்லூரியிலும் தமிழ் இலக்கியம், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி ஐடி பாடங்களில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அரசு கல்லூரி, மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, திருமங்கலம் அரசு கல்லூரிகளில் தமிழ் இலக்கிய பாடத்தில் சேர போட்டி அதிகரித்துள்ளது. திருமங்கலம் அரசு கல்லூரியில் ஏ மற்றும் பி தமிழ் பாட பிரிவுகளுக்கு தலா 60 பேர் மட்டுமே சேர்க்க முடியும் என்றாலும், 1,200 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பிற அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் 3 மடங்கு அதிகமானோர் தமிழ் பாடப்பிரிவில் சேர விரும்பியுள்ளனர். அரசு போட்டித் தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம், எளிதில் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இப்பாடப்பிரிவை தேர்ந்தெடுகின்றனர் என, தமிழ்துறை பேராசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

தமிழ் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, போலீஸ் எழுத்துத் தேர்வுகளில் தமிழ் இலக்கியங்களில் இருந்து கூடுதல் வினாக்கள் இடம் பெறுகின்றன. அரசு வேலை வாய்ப்பிலும் தமிழுக்கான முக்கியம் கருதியே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லுாரிகளில் பி.ஏ., தமிழ் இலக்கியம், மொழியியல் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’’என்றார்.

Tuesday, July 26, 2022

July 26, 2022

ஆக.1-க்குப் பிறகு கலந்தாய்வு: அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம் , பிஎஸ்சி-ஐடி பிரிவுகளுக்கு போட்டி அதிகரிப்பு

அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி-ஐடி முதலான பாடப் பிரிவுகளுக்கு போட்டி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 1ம் தேதிக்குப் பிறகு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டாகவே பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பிட்ட ஒரு பாடத்தில் பட்டம் பெற்று, போட்டித்தேர்வு எழுதி அரசு பணிக்கு முயற்சிப்பது. பிஎட், கணினி போன்ற கூடுதல் தகுதியை வளர்த்துக்கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைக்கு போகலாம் என, திட்டமிடுகின்றனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் பிகாம், பிஏ, ஆங்கிலம், பிஎஸ்சி ஐடி, இயற்பியல், வேதியியல், மைக்ரோ பயலாஜி உட்பட கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவ்வாண்டுக்கான பிளஸ்-2 தேர்வு முடிவு ஜூன் 20-ம் தேதி வெளியான நிலையில், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 90 சதவீதம் முடிந்து, வகுப்புகளை திறக்க தயராகி விட்டன. இருப்பினும், சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதத்தால் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 5 முதல் 10 சதவீதம் இடங்களை தனியார் கல்லூரிகள் நிரப்பாமல் நிறுத்தி வைத்திருந்தன.

இதையும் படிக்க | மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

கடந்த வாரம் தேர்வு முடிவு வெளிவந்ததால் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் ஓரவுக்கு மாணவர் சேர்க்கை முடிந்தாகி விட்டது. பெரும்பாலான கல்லூரிகளில் சுய நிதி பிரிவு பாடங்களுக்கான சேர்க்கையும் நிறைவு பெற்றுதாக கூறப்படுகிறது. விரைவில் முதலாமாண்டு வகுப்புகளை திறக்கும் நடவடிக்கையில் முதல்வர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, ஜூலை 27ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிறகு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி வெளியாகும் சூழல் உள்ளது. அரசுக் கல்லூரிகளை நம்பிய ஏழை, நடுத்தர மாணவர்கள் பிற அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2வது சுழற்சி மற்றும் தனியார் கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர வாய்ப்பு கிடைத்தாலும், கட்டணத்தை கருத்தில் கொண்டு சேர முடியாமல் காத்திருக்கின்றனர். அரசு கல்லூரிகளில் விரைவில் கலந்தாய்வு நடத்தவேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து அரசு கல்லூரி முதல்வர்களிடம் கேட்டபோது,

‘‘அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்த ஆன்லைன் விண்ணப்ப விவரம் மொத்தமும் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் சேகரிக்கப்படுகிறது. இன சுழற்சி இடஒதுக்கீடு முறை குறித்த ரேங்க் பட்டியல் வெளியீடு தொடர்பாக உயர் கல்வித் துறை வழிகாட்டுதலின்படி, ஆகஸ்டு 1ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | 'ஆசிரியருடன் அன்பில் நம்மில் ஒருவர்' நிகழ்ச்சி | இடம்: சூலூர், கோவை - Full Video

முதலில் விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் முன்னுரிமை ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை முடிந்தபின், 3ம் தேதிக்கு மேல் பிற ஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் எப்போதும் போன்று இவ்வாண்டும் அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம், பிபிஏ, பிஎஸ்சி ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனர். குறிப்பிட்ட சில பாடத்தை படிக்க விரும்பியவர்கள் கட்டணத்தை பொருட்படுத்தாமல் 2-வது சுழற்சிக்கும் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, July 16, 2022

July 16, 2022

தேசிய தரவரிசை பட்டியலின் ‘டாப்’ இடங்களில் தமிழகக் கல்லூரிகள் எத்தனை? - முழு விவரம்

தேசிய தரவரிசை பட்டியலின் ‘டாப்’ இடங்களில் தமிழகக் கல்லூரிகள் எத்தனை? - முழு விவரம்

கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் டாப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஓட்டு மொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுள்ளது. இதில் தமிழக கல்லூரிகள் முக்கிய இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகளில் டாப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

> ஓட்டு மொத்த தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 18 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 21 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 32 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 10 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 16 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> பார்மலஸி தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> பல் மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 9 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

> சட்ட கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 30 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

> கட்டிடக் கலை கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 30 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 6 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

ஒட்டு மொத்த தரவரிசை

முதல் இடம் - ஐஐடி சென்னை

16வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம் , கோவை

18வது இடம் - விஐடி, வேலூர்

பல்கலைக்கழகம்

5வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

9வது இடம் - விஐடி, வேலூர்

15வது இடம் - பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

கல்லூரிகள்

3வது இடம் - மாநிலக் கல்லூரி, சென்னை

4வது இடம் - லயோலா கல்லூரி, சென்னை

6வது இடம் - பிஜி கிருஷ்ணாம்மாள் கல்லூரி, கோவை

ஆராய்ச்சி நிறுவனங்கள்

2வது இடம் - ஐஐடி, சென்னை

10வது இடம் - விஐடி, வேலூர்

21வது இடம் - அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

பொறியியல் கல்லூரிகள்

முதல் இடம் - ஐஐடி சென்னை

8வது இடம் - என்ஐடி திருச்சி

12வது இடம் - விஐடி வேலூர்

19 வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

மேலாண்மை கல்லூரிகள்

10வது இடம் - ஐஐடி சென்னை

18வது இடம் - என்ஐடி திருச்சி

27வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

பார்மஸி கல்லூரிகள்

6வது இடம் - ஜெஎஸ்எஸ் பார்மஸி கல்லூரி ஊட்டி

12வது இடம் - எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை

14வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

மருத்துவக் கல்லூரிகள்

3வது இடம் - கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூர்

8வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கோவை

12வது இடம் - சென்னை மருத்துவ கல்லூரி சென்னை

பல் மருத்துவக் கல்லூரிகள்



முதல் இடம் - சவீதா கல்லூரி சென்னை

8வது இடம் - எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை

13வது இடம் - ராமசந்திர கல்லூரி சென்னை

கட்டிடக் கலைக் கல்லூரிகள்

5வது இடம் - என்ஐடி திருச்சி

11வது இடம் - எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி சென்னை

23வது இடம் - தியாகராஜர் கல்லூரி மதுரை

Total Pageviews

Search This Blog