Breaking

Showing posts with label Government Employees. Show all posts
Showing posts with label Government Employees. Show all posts

Monday, November 03, 2025

Wednesday, October 22, 2025

Friday, March 14, 2025

Wednesday, February 26, 2025

Monday, April 08, 2024

Sunday, April 07, 2024

Tuesday, March 19, 2024

Tuesday, March 12, 2024

Friday, January 19, 2024

January 19, 2024

அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்



அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல் Insisting on transfer of government employees

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இம்மாத இறுதிக்குள் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு.

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இம்மாத இறுதிக்குள் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்...

Thursday, January 04, 2024

January 04, 2024

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு



Order to collect details of government employees working in the same place for more than three years - மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், போலீசாரின் விவரங்கள் சேகரிப்பு இம்மாதத்திற்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர், ஜன.3: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், போலீசாரின் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடக்க உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக இத்தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பணிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்பும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக தற்போது ஒவ்வொரு துறை வாரியாக பட்டியல் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 3 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் அதிகாரிகளை வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய அனைத்து தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய ஜனவரி 31ம் தேதி வரை தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மாவட்ட அளவிலான அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அதேபோல் சொந்த மாவட்டங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தண்டனை நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறுபவர்கள் ஆகியோருக்கு தேர்தல் பணியை வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படியே தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Monday, December 25, 2023

December 25, 2023

அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது

அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது - கலெக்டர் அதிரடி அறிவிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது. தற்போது, மழை நின்று வெள்ளநீர் வடிந்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 18-ம் தேதியில் இருந்து இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது என்று அம்மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடப்பதால் அரசு விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

Friday, December 15, 2023

December 15, 2023

ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் எதிர்ப்பு

ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் எதிர்ப்பு

முதல்வரின் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட ஊழியா்களின் ஒப்புதல் பெறாமல் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்வதற்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்து, கடும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், தனியாா் நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள் சாா்பிலும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள் சாா்பில் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. சங்கத்தின் உறுப்பினா்களிடம் ஆலோசிக்காமல் நிா்வாகிகளின் தனிச்சையான இந்த முடிவுக்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மத்தியில் எதிா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக அரசு ஊழியா்கள் தரப்பில் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களாக பணிபுரிந்து வருகிறோம். சங்கத்தில் இடம் பெற்றிருந்தாலும், தனி நபரின் கருத்தைக் கேட்காமல், தங்களின் சுய விளம்பரத்துக்காக சில நிா்வாகிகள் முதல்வரின் நிவாரண நிதி தொடா்பாக தனிச்சையாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனா். அரசு ஊழியா்களின் பிரதான கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயா்வு, அகவிலைப்படி நிலுவை உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காணப்படவில்லை. தோ்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்த கோரிக்கைகளை, ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்களாகியும் இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால், அரசு ஊழியா்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனா்.

அரசின் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதில் மாற்றுக் கருத்தில்லை. முதல்வரின் நிவாரண நிதி வழங்க விருப்பக் கடிதம் வழங்கும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களிடம் மட்டுமே ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரின் ஊதியத்திலும் பிடித்தம் செய்ய வேண்டும். சங்க நிா்வாகிகளின் தனிப்பட்ட விருப்பத்தை, ஒட்டுமொத்த ஊழியா்களும் ஏற்க முடியாது என்றனா்.

Total Pageviews

Search This Blog