Press Release
April 06, 2022
Showing posts with label MK Stalin. Show all posts
Showing posts with label MK Stalin. Show all posts
Wednesday, April 06, 2022
Thursday, March 03, 2022
Ukraine
March 03, 2022
பிளஸ் 2 தேர்வில் 97% மதிப்பெண்கள் பெற்றும், மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இழப்பு -முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பிளஸ் 2 தேர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டிற்குச் சென்று படித்த கர்நாடக மாநில மாணவன் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமலும்- மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையிலும், பெரும் இன்னல்களை சந்தித்து வரும் மாணவர்கள் குறித்து ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கருத்துகள், ஒன்றிய அமைச்சர்களின் பேட்டிகள், ஒன்றிய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என சமூக வலைதளங்களில் போடப்படும் பதிவுகள் எல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
இந்த போக்கை உடனடியாக கைவிட்டு, உக்ரைன் - ரஷ்ய போரால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி, நாள்தோறும் உயிர் பயத்தில் தவித்து வரும் ஒவ்வொரு மாணவரையும் காப்பாற்ற வேண்டிய தன் கடமையை முனைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு ஒன்றிய அரசு வர வேண்டும். இது பரப்புரை செய்வதற்கோ, விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும், தங்களது எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களை காப்பாற்ற வேண்டிய தருணம். அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அழைத்து வர வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் என்பதை நினைவூட்டுகிறேன். அதைவிடுத்து, இங்கு படிக்க முடியாமல், வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளை விற்று சொந்த சேமிப்புகளை கரைத்து மேல்படிப்பிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்களின் உணர்வையும் கொச்சைப்படுத்தும் வகையிலான ஏட்டிக்கு போட்டியான பேட்டிகளையும், கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர்களுக்கும், பாஜவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் மிக முக்கியக் கடமையாகும்.
இதையும் படிக்க | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது நிறைவடையும்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி!
நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவக் கல்வி ஏழை எளியவர்களுக்கு, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆகிவிடும் ஆபத்தை போக்கவே, அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி இதே கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். இன்னும் சில மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள அனைத்து மாணவர்களுக்காகவுமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதற்கான ஆதரவை கோரி மாநில முதலமைச்சர்களுக்கும் நீட் தேர்வு பாதிப்பு தொடர்பான அறிக்கையை அனுப்பி ஆதரவு கோரினேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும், இப்போது மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ள நீட் விலக்கு மசோதாவும் இந்த அடிப்படை நோக்கத்தை முன்வைத்தே என்பதை உக்ரைன் போரில் மருத்துவம் படிக்கச் சென்று உயிரழந்த மாணவர்களின் அவல நிலைமை, துயர நிலைமை மீண்டும் உணர்த்துகிறது. நீட் தேர்வை அறவே அகற்றி பள்ளிக்கல்வி மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று திமுக அரசும் தொடர்ந்து போராடி வருகின்ற சூழ்நிலையில் தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல இது. உக்ரைன் மாணவர்களை பாதுகாப்பாக மீட்பதும் - உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும். அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பாதுகாக்க நடவடிக்கை ‘நெருக்கடி மிகுந்த இந்நேரத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. போர்த் தாக்குதல்களையும் எல்லைப்பகுதிகளில் எதிர்ப்பையும் நமது மாணவர்கள் சந்தித்து வரும் வேளையில், ஒன்றிய அரசு அவர்களைக் குற்றங்கூறுவதை நிறுத்திக்கொண்டு, அவர்களை விரைவாக மீட்பதில் கவனம் செலுத்தவேண்டும். இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றுள்ள இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பாகும். பிரதமர், தமது அமைச்சரவையை சேர்ந்தவர்கள் தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதைத் தடுத்து, இந்த
பிளஸ் 2 தேர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டிற்குச் சென்று படித்த கர்நாடக மாநில மாணவன் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமலும்- மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையிலும், பெரும் இன்னல்களை சந்தித்து வரும் மாணவர்கள் குறித்து ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கருத்துகள், ஒன்றிய அமைச்சர்களின் பேட்டிகள், ஒன்றிய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என சமூக வலைதளங்களில் போடப்படும் பதிவுகள் எல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
இந்த போக்கை உடனடியாக கைவிட்டு, உக்ரைன் - ரஷ்ய போரால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி, நாள்தோறும் உயிர் பயத்தில் தவித்து வரும் ஒவ்வொரு மாணவரையும் காப்பாற்ற வேண்டிய தன் கடமையை முனைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு ஒன்றிய அரசு வர வேண்டும். இது பரப்புரை செய்வதற்கோ, விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும், தங்களது எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களை காப்பாற்ற வேண்டிய தருணம். அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அழைத்து வர வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் என்பதை நினைவூட்டுகிறேன். அதைவிடுத்து, இங்கு படிக்க முடியாமல், வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளை விற்று சொந்த சேமிப்புகளை கரைத்து மேல்படிப்பிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்களின் உணர்வையும் கொச்சைப்படுத்தும் வகையிலான ஏட்டிக்கு போட்டியான பேட்டிகளையும், கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர்களுக்கும், பாஜவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் மிக முக்கியக் கடமையாகும்.
இதையும் படிக்க | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது நிறைவடையும்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி!
நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவக் கல்வி ஏழை எளியவர்களுக்கு, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆகிவிடும் ஆபத்தை போக்கவே, அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி இதே கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். இன்னும் சில மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள அனைத்து மாணவர்களுக்காகவுமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதற்கான ஆதரவை கோரி மாநில முதலமைச்சர்களுக்கும் நீட் தேர்வு பாதிப்பு தொடர்பான அறிக்கையை அனுப்பி ஆதரவு கோரினேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும், இப்போது மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ள நீட் விலக்கு மசோதாவும் இந்த அடிப்படை நோக்கத்தை முன்வைத்தே என்பதை உக்ரைன் போரில் மருத்துவம் படிக்கச் சென்று உயிரழந்த மாணவர்களின் அவல நிலைமை, துயர நிலைமை மீண்டும் உணர்த்துகிறது. நீட் தேர்வை அறவே அகற்றி பள்ளிக்கல்வி மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று திமுக அரசும் தொடர்ந்து போராடி வருகின்ற சூழ்நிலையில் தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல இது. உக்ரைன் மாணவர்களை பாதுகாப்பாக மீட்பதும் - உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும். அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பாதுகாக்க நடவடிக்கை ‘நெருக்கடி மிகுந்த இந்நேரத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. போர்த் தாக்குதல்களையும் எல்லைப்பகுதிகளில் எதிர்ப்பையும் நமது மாணவர்கள் சந்தித்து வரும் வேளையில், ஒன்றிய அரசு அவர்களைக் குற்றங்கூறுவதை நிறுத்திக்கொண்டு, அவர்களை விரைவாக மீட்பதில் கவனம் செலுத்தவேண்டும். இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றுள்ள இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பாகும். பிரதமர், தமது அமைச்சரவையை சேர்ந்தவர்கள் தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதைத் தடுத்து, இந்த
Saturday, February 12, 2022
NEP
February 12, 2022
புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன: முதல்வர் ஸ்டாலின்
புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன: முதல்வர் ஸ்டாலின்
புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில், நீட் தேர்வானது ஏழை - எளிய, கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கிறது; தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைக் குலைக்கப் பார்க்கிறது; சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது; நூற்றாண்டாக நாம் போராடிப் பெற்ற கல்வி உரிமைக்கு ஆபத்தாக வருகிறது என்று நீட் தேர்வை நாம் எதிர்க்கிறோம். புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன.
அதையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அடுத்ததாக- ‘ஒரே நாடு - ஒரே பத்திரப் பதிவு’என்று கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவர்கள்- ‘ஒரே… ஒரே…’என்று முன்வைக்கும் முழக்கம் எல்லாமே இந்த நாட்டை ஒற்றையாட்சித்தன்மை கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிதானே தவிர வேறல்ல! இது மக்களின் நன்மைக்கும் வளர்ச்சிக்கும் பயன்படாது! எனவேதான் இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சித் தத்துவத்தை மலர வைக்கப் போராடியும், வாதாடியும் வருகிறோம்! ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தை அகில இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வைப்போம். தமிழ்நாட்டில் காலூன்றியபடியே இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் பாடுபடும் இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு சாட்சி வேண்டுமானால் திருப்பூர் ஒன்றே போதும்! 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய பா.ஜ.க. அரசு பொருளாதாரக் கொள்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டது! திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களோட ஏற்றுமதி இலக்கை எட்டமுடியாம போனதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்தே தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளவில்லை. ஜி.எஸ்.டி. வரிக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திருப்பூரின் மொத்த வர்த்தகம் 24 விழுக்காடு குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள்.
ஏற்றுமதி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பலரும் சிறு குறு நிறுவனங்களை மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள். பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது! இதை இப்படியே விட்டுவிட முடியாது. எனவேதான், சிறு-குறு நடுத்தரத் தொழில்களை முன்னேற்ற முனைப்போடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில், நீட் தேர்வானது ஏழை - எளிய, கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கிறது; தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைக் குலைக்கப் பார்க்கிறது; சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது; நூற்றாண்டாக நாம் போராடிப் பெற்ற கல்வி உரிமைக்கு ஆபத்தாக வருகிறது என்று நீட் தேர்வை நாம் எதிர்க்கிறோம். புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன.
அதையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அடுத்ததாக- ‘ஒரே நாடு - ஒரே பத்திரப் பதிவு’என்று கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவர்கள்- ‘ஒரே… ஒரே…’என்று முன்வைக்கும் முழக்கம் எல்லாமே இந்த நாட்டை ஒற்றையாட்சித்தன்மை கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிதானே தவிர வேறல்ல! இது மக்களின் நன்மைக்கும் வளர்ச்சிக்கும் பயன்படாது! எனவேதான் இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சித் தத்துவத்தை மலர வைக்கப் போராடியும், வாதாடியும் வருகிறோம்! ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தை அகில இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வைப்போம். தமிழ்நாட்டில் காலூன்றியபடியே இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் பாடுபடும் இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு சாட்சி வேண்டுமானால் திருப்பூர் ஒன்றே போதும்! 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய பா.ஜ.க. அரசு பொருளாதாரக் கொள்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டது! திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களோட ஏற்றுமதி இலக்கை எட்டமுடியாம போனதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்தே தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளவில்லை. ஜி.எஸ்.டி. வரிக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திருப்பூரின் மொத்த வர்த்தகம் 24 விழுக்காடு குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள்.
ஏற்றுமதி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பலரும் சிறு குறு நிறுவனங்களை மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள். பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது! இதை இப்படியே விட்டுவிட முடியாது. எனவேதான், சிறு-குறு நடுத்தரத் தொழில்களை முன்னேற்ற முனைப்போடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.