Breaking

Showing posts with label republic day. Show all posts
Showing posts with label republic day. Show all posts

Tuesday, January 23, 2024

January 23, 2024

Essay on Republic Day குடியரசு தினம் பற்றிய கட்டுரை - PDF



குடியரசு தினம் பற்றிய கட்டுரை

குடியரசு தினம் என்பது இந்தியாவில் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படும் ஒரு தேசிய விடுமுறையாகும். இது 1950 இல் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள், இது முன்னர் இருந்த இந்திய அரசாங்கச் சட்டத்தை (1935) முறியடித்து, நாட்டை ஒரு சுதந்திர நாடாக மாற்றியது. குடியரசு. இது இந்தியாவை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரக் குடியரசாக மாற்றுவதைக் குறிக்கிறது..

இந்தியாவின் சுதந்திர தினத்தைப் போலவே, குடியரசு தினமும் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகள் மற்றும் சாதனைகளில் ஒன்றாகும். இந்திய மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகள் மற்றும் பொறுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு இது ஒரு காரணம். நாம் வீடு என்று அழைக்கக்கூடிய ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD குடியரசு தினம் பற்றிய கட்டுரை PDF

Monday, January 22, 2024

January 22, 2024

Republic Day Easy Speech - Tamil



Republic Day Easy Speech - Tamil

தேசியக்கொடி - 

முன்னுரை

ஒரு நாட்டின் தனித்த அடையாளம் என்பது அதன் தேசியக்கொடியே ஆகும்.

ஒரு நாட்டின் தேசியக்கொடிக்கு காட்டும் மரியாதை அந்த தேசத்திற்கே காட்டுவதாகும்.

தமிழகத்தில் ஆட்சி செய்த மூவேந்தர்களும் தங்களுக்கென்று தனிப்பட்ட கொடிகளை கொண்டு ஆட்சி செய்தனர்.

கொடியின் அமைப்பு:- நம் தேசத்தின் விடுதலைக்குப் பிறகு மக்களாட்சியை உணர்த்தும்படி நிகழ்த்துவது நமது தேசியக்கொடி ஆகும். நம் தேசியக்கொடி மூன்று பங்கு நீளமும், இரண்டு பங்கு அகலமும் உடையது. மூன்று வண்ணங்கள் உள்ளன. ஒவ்வொரு வண்ணமும் நீண்ட செவ்வகப்பட்டையாக உள்ளன. மேல் புறம் காவி நிறமும், மத்தியில் வெள்ளை நிறமும், கீழ்ப்பாகம் பச்சை நிறமும் கொண்டது. வெள்ளை நிறத்தின் மத்தியில் நீலநில நீலநிற அசோக சக்கரம் உள்ளது. வண்ணங்கள் போதிப்பவை:-

காவி நிறம் தியாக மனப்பான்மையின் அடையாளமாகும்

. தாய்நாட்டிற்காகத் தியாக மனப்பான்மையுடன் விளங்க வேண்டும் என்பதை அது உணர்த்துகிறது.

வெள்ளை நிறம் தூய்மையை குறிப்பதாகும். உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் நாம் தூய்மையையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்பதை அது உணர்த்துகிறது.

பச்சை நிறம் பசுமையை குறிப்பது. நாட்டின் வளமையைக் காக்க வேண்டியது நம் கடமை என்பதை அது உணர்த்துகிறது.

அசோகச் சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன. அவை தர்மங்களை உணர்த்துபவையாகும். கொடியேற்றுதலுக்கான விதிகள்:-

தேசியக்கொடியை அரசு அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும், நம் வீடுகளிலும் கூட ஏற்றலாம். அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.

சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பொதுவான இடங்களில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறக்கி விட வேண்டும். கொடியேற்றி பின் கொடி வணக்கம் செய்ய வேண்டும். பேரணிகளில் வலது தோளிற்கு மேல் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

தேசிய அளவில் துக்கம் ஏற்பட்டால் மட்டும் தேசியக்கொடியானது அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுகின்றது. கொடியை தலைகீழாகப் பறக்க விடுதல் அதனை அவமதிப்பதாகும். அவ்வாறு பறக்க விடுதல் கூடாது.

தேசியக்கொடியை மிதித்தல் , கிழித்தல், மழையில் நனைய விடுதல், தரையில் போடுதல் கூடாது. அது நம் தாய்நாட்டை அவமதிக்கின்ற செயலாகும். முடிவுரை:-

நாம் இந்தியர்கள் என்ற அடையாளம் நமது தேசியக்கொடி ஆகும் . தேசியக்கொடியைக் காப்பது நம் மானத்தைக் காப்பது போன்றதாகும்.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் அனைவரும் நம் சட்டையில் தேசியக்கொடியை அணிந்து கொள்ள வேண்டும். மற்றைய நாட்களிலும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். தேசிய கொடியின் பெருமையை உணர்ந்து அதைப்போற்றி மரியாதை செய்வோமாக.

Thanks to Mrs A R Mahalakshmi

Friday, January 27, 2023

January 27, 2023

அரசு பள்ளியில் இரவு முழுவதும் பறந்த தேசியக்கொடி

அரசு பள்ளியில் இரவு முழுவதும் பறந்த தேசியக்கொடி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று தேசியக்கொடி அரசு விதிமுறைகளுடன் ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்குள்ளாக இறக்கப்பட்டது.

ஆனால் கொள்ளிடம் அருகே மாதாளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் நேற்று காலை குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்குள் கொடி இறக்கவில்லை. தொடர்ந்து இரவு முழுவதும் பறந்து கொண்டே இருந்தது. இன்று காலை வரை தேசியக்கொடி இறக்கவில்லை.
பொதுவாக அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழா ஆகிய நாட்களில் காலை 7:30 மணி முதல் ஏற்றி பிறகு ஆறு மணிக்குள் இறக்கி விட வேண்டும் என்று விதி கூறுகிறது. சூரியன் உதித்த உடன் தேசியக்கொடியை ஏற்றுவதும் மாலை ஆறு மணிக்குள் தேசிய கொடியை இறக்குவதும் விதியாக இருந்து வருகிறது. ஆனால் விதிக்கு புறம்பாக மாதானம் ஆதிதிராவிடர் நல பள்ளியில் நேற்று மாலை 6 மணிக்கு தேசய கொடியை இறக்காமல் இரவு முழுவதும் பறக்க விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Total Pageviews

Search This Blog