Breaking

Showing posts with label Supreme Court. Show all posts
Showing posts with label Supreme Court. Show all posts

Tuesday, August 22, 2023

August 22, 2023

அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் - சுப்ரீம் கோர்ட்டு உருவாக்குகிறது



அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் - சுப்ரீம் கோர்ட்டு உருவாக்குகிறது

ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு வசதிகள் செய்து தருவது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை உத்தரபிரதேச மாநில அரசு நிறைவேற்றவில்லை.

இதனால், அலகாபாத் ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உத்தரபிரதேச அரசின் நிதித்துறை செயலாளர் ஷாகித் மன்சூர் அப்பாஸ் ரிஸ்வி, சிறப்பு செயலாளர் சரயு பிரசாத் சர்மா ஆகியோர் கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த ஏப்ரல் மாதம், அலகாபாத் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை காவலில் எடுக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.



அதே சமயத்தில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2 அதிகாரிகளையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது தொடரப்படும் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை கையாள வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

வழிகாட்டு நெறிமுறைகள்

நிலுவையில் உள்ள வழக்குகளில், அரசு அதிகாரிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தாலே போதுமானது. அவர்கள் நேரில் வரத் தேவையில்லை. ஆனால், கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராவது தேவைப்படலாம்.

அத்தகைய சூழ்நிலையில், அரசு அதிகாரிகளை சம்மன் அனுப்பி அழைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு உருவாக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் இவை பொருந்துவதாக அமையும் என்று நீதிபதிகள் கூறினர்.

Tuesday, September 06, 2022

September 06, 2022

பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்கள் செல்லுமா? உச்சநீதிமன்றம் கேள்வி

ஹிஜாப் தடை தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சீருடை அமலில் உள்ள பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதை உரிமையாகக் கொள்ள முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கா்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரத் தடை விதிக்கப்பட்டது பெரும் சா்ச்சைக்குள்ளானது. அத்தடையை நீக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்திருந்தது. அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஸு துலியா ஆகியோரைக் கொண்ட அமா்வு கூறுகையில், ‘‘மதம்சாா்ந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையே. ஆனால், குறிப்பிட்ட சீருடையைத்தான் அணிய வேண்டும் என்ற விதி அமலில் உள்ள பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்கள் செல்லுபடியாகுமா?

மாணவா்கள் சீருடையை அணிந்துவந்தால் கல்வி வழங்கப்படும் என மாநில அரசு தெரிவிக்கிறது. முஸ்லிம் பெண்களுக்கான கல்வி உரிமையை அரசு மறுக்கவில்லை’’ என மனுதாரா் தரப்பு வழக்குரைஞரிடம் தெரிவித்தனா்.

அதே வேளையில், ‘‘முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவது, பள்ளியின் கட்டுப்பாட்டை எவ்வாறு பாதிக்கும்?’’ என கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

Sunday, August 21, 2022

August 21, 2022

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் மற்றும் நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமலும் செயல்பட்டு வருவதாகக் கூறி, பள்ளியை 3 நாள்களில் மூடவும், மாணவா்களை அருகில் உள்ள பள்ளிகளில் சோ்க்கவும் வட்டாரக் கல்வி அலுவலா் கடந்த ஆக. 2-இல் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து பள்ளி சாா்பில் அதன் நிறுவனா் குப்புசாமி, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிறுவனா் தரப்பில் , ‘சேலம் மாவட்டத்தில் பல பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமலும் இயங்கி வருகின்றன. 2011 முதல் அங்கீகாரம் பெற முயற்சித்து வரும் நிலையில் இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அங்கீகாரம் கோரிய வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலா், தொடக்கக் கல்வி இயக்குநா், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதேசமயம், சேலம் மாவட்டத்தில் அங்கீகாரமும், நகரமைப்பு திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

Tuesday, July 12, 2022

Total Pageviews

Search This Blog