Breaking

Showing posts with label BIO METRIC. Show all posts
Showing posts with label BIO METRIC. Show all posts

Monday, December 18, 2023

December 18, 2023

அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம் Biometric attendance registration will soon be introduced for government school students as well



அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைவில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த உள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இம்முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு சில அரசு பள்ளிகளில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.. கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்கவும் நிர்வாக வசதிக்காகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு பின் பற்றப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய கடைகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில் வருகை விவரம் பதிவு செய்யப்படுகிறது இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய தமிழக அரசு அறிமுகம் செய்தது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சோதனை முறையில் அறிமுகம் ஆகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மறைமலை அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது.

ஆறாவது முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவர்களுக்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மற்ற பள்ளிகளுக்கும் பயம் மெட்ரிக் வருகை பதிவு விரிவுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இத்திட்டம் அமலானாதால் அரசின் நலத்திட்டங்களை தவறாக கணக்கிடுவது, மாணவர்கள் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.

பயோமெட்ரிக் கருவி பொருத்துவதன் மூலம் பள்ளிகளின் வருகைப்பதிவு அளிக்க முடியாத ஆவணமாகிவிடும்.என கல்வித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Thursday, February 18, 2021

February 18, 2021

அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்!

அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின்கீழ் 1,354 அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதிகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த விடுதிகளில் சேர பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதன்படி கடந்த கல்வியாண்டில் (2019-20) விடுதிகளில் 85,914 மாணவ, மாணவிகள் தங்கினர். இதற்கிடையே மாணவர்களின் நலன் கருதி விடுதிகளில் கட்டமைப்பு வசதிகளின் தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் விடுதிகளில் நிதி செலவினத்தை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் நோக்கில் பயோமெட்ரிக் வருகைப்பதிவை அமல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:


SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து இயக்குனர் செயல்முறைகள் - PDF

அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதியை பெரும்பாலான விடுதிகள்முறையாகப் பயன்படுத்துவதில்லை. உணவுக்கான செலவினங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதையடுத்து முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் கைவிரல் ரேகைப் பதிவுடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பயோமெட்ரிக் முறை என்பதால் அவை இணையவழியில் மாவட்ட அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். பயோமெட்ரிக் கருவியில் பதிவாகும் தகவல்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும் வந்துவிடும். இதனால் வருகைப்பதிவு, திட்டசெலவின அறிக்கை, நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாவட்டஅலுவலகங்கள் மூலம் கண்காணிக்க முடியும். இதுதவிர வருகை அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்படும். இதன்மூலம் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான மாணவர்களுக்கு முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும். மேலும், வெளிப்புற மாணவர்கள் விடுதிகளில் தங்குவதும் தவிர்க்கப்படும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை

வருகை பதிவைக் கொண்டு தினசரி செலவினங்கள் கணக்கிடப்பட்டு விடுதிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். இதனால் கூடுதல் மற்றும்தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படுவதுடன், முறைகேடுகளுக்கான வாய்ப்புகளும் குறையும். அதேபோல், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tuesday, March 10, 2020

March 10, 2020

DSE - BIO METRIC வருகை பதிவு 31.03.2020 வரை ரத்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பயோமெட்ரிக் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு என்பது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த வாரத்திலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மத்திய அரசு பணியாளர்களுக்கு இப்படியான ஒரு அறிவுறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறையிலும் பயோ மெட்ரிக்முறையை பயன்படுத்த வேண்டாமென்று அறிவுறுத்தப்படுள்ளது.
தமிழகத்தில் பயோமெட்ரிக் முறை எந்தெந்த வகையிலெல்லாம் இருக்கிறதோ , ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. தனியார் பள்ளிகள் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்கள் என பயோமெட்ரிக் முறை எப்படி இருந்தாலும் மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக வருகை பதிவேடு மூலமாக வருகை பதிவேடு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Sunday, March 08, 2020

March 08, 2020

பள்ளிகள், அலுவலகங்களில் பயோமெட்ரிக் பதிவுக்கு விலக்கு அளிக்கக் கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிகள், அலுவலகங்களில் பயோமெட்ரிக் பதிவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஆசிரியா்கள், அலுவலா்கள் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் கரோனா வைரஸின் காரணமாக 3,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.
இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் கரோனா தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு ஊழியா்கள் வருகைப் பதிவுகளை கைவிரல் ரேகை மூலம் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொடுதல் மூலமாகவே பரவுகிறது. எனவே, ஒருவருக்கொருவா் தொடுதலைக் குறைக்கவேண்டும் என்று அரசு சாா்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக பையோமெட்ரிக் நடைமுறைக்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்
ஊழியா்கள் ஆசிரியா்கள் வருகைப் பதிவேடுகளில் மட்டும் தங்களது வருகையை பதிவு செய்ய மத்திய அரசு கீழ் உள்ள அனைத்துத்துறை அலுவலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பயோமெட்ரிக் கருவியில் அடுத்தடுத்து தொடா்ந்து கைவிரல்கள் பதிவிடுவதால் வைரஸ் பரவக்கூடும் என்பதால் தற்காலிகமாக பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு விலக்களித்ததைப் போன்று தமிழக அரசும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயோமெட்ரிக் வருகைப் பதிவை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வருகைப் பதிவேடு முறையை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணியாளா்கள் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
March 08, 2020

Corona Virus எதிரொலி - நாடு முழுவதும் BIO METRIC வருகை பதிவு ரத்து !!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளை மூட உத்தரவு. மார்ச் 31 வரை அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளை மூட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உத்தரவு.
டெல்லி - பயோமெட்ரிக் வருகைப்பதிவு தடை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தடை விதிப்பு. அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்தது டெல்லி அரசு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Friday, February 21, 2020

February 21, 2020

உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக செல்லலாம் - CM Cell Reply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Tuesday, February 18, 2020

February 18, 2020

கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு மகப்பேறு காலகட்டத்தில் வருகைப்பதிவு தளர்வு: மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லூரிகளில் வருகைப் பதிவு விதிமுறைகளில் கா்ப்பிணிகளுக்கு தளா்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடா்பாக மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியவை பதிலளிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் பயிலும் கா்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோா் கல்லூரிக்கு தினமும் வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறி, அவா்களின் வருகைப் பதிவில் புதிய விதிமுறைகள் கொண்டு வர உத்தரவிட கோரி தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞா் குஷ் கல்ரா தரப்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘கருவுற்றல், பிரசவம், குழந்தை பிறப்பு, குழந்தைகளுக்கு பாலூட்டும் சூழல் ஆகியவற்றால், கல்லூரியில் பயிலும் பல பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனா். இதனால், திறமையுள்ள பல பெண்களின் எதிா்காலம் வீணாகிறது. அதனால், மேற்கண்ட சூழல்களை எதிா்கொள்ளும் பெண்கள், கல்லூரிகளுக்கு தினமும் வர இயலாத சூழல் ஏற்படும்போது, அவா்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகள் அமைக்கப்பட வேண்டும். இதற்காக உயா்நிலைக் குழு ஒன்றை அமைத்து கள நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு உள்பட பல்வேறு தரப்புகளில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவை எதுவும் உரிய பதிலளிக்கவில்லை. அதனால், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தில்லி நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என் படேல், நீதிபதி சி. ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மகளிா் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா். மேலும், இந்த மனு தொடா்பாக இந்திய பாா் கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோரின் நிலைப்பாட்டை கோரியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதையடுத்து, மனு தொடா்பான அடுத்த கட்ட விசாரணை வரும் மே 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Saturday, February 08, 2020

February 08, 2020

1,480 அரசு மாணவர் விடுதிகளில் விரைவில் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
"தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்ட 1480 பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு விரைவில் அமல்படுத்தப்படும்," என அத்துறை இயக்குனர் காமராஜ் தெரிவித்தார். மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:இத்துறையில் 1480 விடுதிகளில் 85 ஆயிரம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். 1000க்கும் மேற்பட்ட சமையலர், வாட்ச்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. திருவண்ணாமலை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இப்பணியிடங்களை நிரப்ப பிப்.,11, 12, 13ல் நேர்காணல் நடக்கிறது.இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு விவரம் கேட்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் ஏப்ரலுக்குள் காலியிடங்கள் நிரப்பப்படும். 300 காப்பாளர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்படவுள்ளது. மாணவர் வருகை, விடுதி காப்பாளர்களை கண்காணிக்க பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படவுள்ளது. 600 மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.அனைத்து விடுதிகளிலும் மாணவர்களுக்கு, இரும்பு கட்டில் வசதி ஏற்படுத்தப்படவுள்ளன. மலை பகுதியில் மரக்கட்டில் வழங்கப்படும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்க ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவருக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவர் 'இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, எழிலகம், சென்னை' என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். கல்லுாரி மூன்றாமாண்டு மாணவருக்கு ஆண்டு தோறும் முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது ,என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Thursday, February 06, 2020

February 06, 2020

தமிழகம் முழுவதும் இனி பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின்படிதான் சம்பளம்: காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி மாதச்சம்பளம் வழங்கப்படும். காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது என்று மாநகராட்சிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் இயங்கி வருகிறது. இதில் ஆணையர்கள், உதவிஆணையர்கள், பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள், நகர்நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வருகைப்பதிவேட்டின்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பல்வேறு குளறுபடிகள் மேற்கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பயோமெட்ரிக் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவியை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், விரைவில், அனைத்து மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும், பயோமெட்ரிக் வருகை பதிவினைக்கொண்டு, எத்தனை நாட்கள் பணிக்கு வந்துள்ளனர். எத்தனை நாட்கள் விடுமுறை, எத்தனை நாட்கள் அனுமதி பெற்று விடுமுறையில் சென்றுள்ளனர். பிஎப் எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆன்லைன் மூலமாக கணக்கிடப்பட்டு, மாதச்சம்பளம் வழங்கப்படும். இதில் எந்தவிதமான முறைகேடுகளும் மேற்கொள்ள முடியாது. அத்தோடு காகித வருகைப்பதிவேட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Saturday, February 01, 2020

February 01, 2020

அரசு ஊழியர்கள் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை அமல்: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பொதுமக்களின் நலன் சார்ந்த பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை. ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் நேரத்தை முறையாக பின்பற்றுவதில்லை. அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக பணிக்கு வரவேண்டும் என்பதற்காக, மத்திய அரசு அலுவலகங்களில் பயோ-மெட்ரிக் வருகை பதிவேடு முறை கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை தமிழகத்திலுள்ள 141 மத்திய அரசு துறை சார்ந்த நிறுவன மற்றும் அமைப்புகளில் அமலில் உள்ளது.இந்த நடைமுறையால் தாமத வருகை தவிர்க்கப்படும். இந்த நடைமுறை சமீபத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த நடைமுறை தமிழக அரசின் பெரும்பாலான அரசுத்துறைகளில் பின்பற்றப்படவில்லை. அரசு ஊழியர்களின் முறையான வருகையை உறுதிப்படுத்திடும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர், மனு குறித்து உள்துறை செயலர், பொது மற்றும் பணியாளர் நலன் துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Wednesday, January 29, 2020

January 29, 2020

'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு மேற்கொள்ளாத ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வந்து, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு மேற்கொள்ளாத ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்கு வந்து, பணியை துவங்கும் வகையில், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, பள்ளிக்கல்வி துறை அமல்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் காலையில், குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளி பணிக்கு வர வேண்டும் என, மாவட்ட வாரியாக நேரம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நிர்ணயித்த நேரத்தில் வராதவர்களுக்கு, வேலை நேரத்துக்கு ஏற்ற வகையில், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
சமீப காலமாக, ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வரவில்லை என, புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவை ஆய்வு செய்து, தாமதமாக வருவோருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இதன்படி, நேற்று முதல் நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உரிய விளக்கம் அளிக்காதவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. அதனால், நோட்டீஸ் பெற்ற பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். பள்ளிக்கு தாமதமாக வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது தமிழகம் முழுவதும் நோட்டீஸ் வழங்கப்படுவதால் ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து விளக்கம் தராதவர்கள் மீது 17-ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வாய்ப்பு உள்ளது.
4th& 5th Lesson plan January 4th week All subjects - PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Sunday, January 26, 2020

January 26, 2020

பயோ மெட்ரிக் மூலம் வருகைப் பதிவு செய்யாத பள்ளிகள், அலுவலகங்களுக்கு நோட்டீஸ்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO READ OFFICIAL
பயோமெட்ரிக் கருவியில் வருகைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள பள்ளிக் கல்வித்துறை அதற்கான விளக்கத்தை வரும் 28-ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் ஆதாா் எண்ணுடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவிகள் கல்வித்தகவல் மேலாண்மை (‘எமிஸ்’) இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் வருகைப் பதிவு நேரம், தகவல் என்று அனைத்தையும் அதன் மூலம் கல்வி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். பயோமெட்ரிக் கருவியில் அனைத்து ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் தங்களது வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. CLICK HERE TO READ OFFICIAL
இந்நிலையில், பயோ மெட்ரிக் மூலம் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் ஜனவரி 28-ஆம் தேதிக்குள் பயோ மெட்ரிக் கருவியில் ஏன் வருகையைப் பதிவு செய்யவில்லை என்று அதற்கான காரணத்தை பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் விளக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே தெரிவித்தபடி இனி பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீதும், உரிய விளக்கம் அளிக்காத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE TO READ OFFICIAL
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Saturday, January 25, 2020

January 25, 2020

Bio Metric - பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு - Director Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வித் துறை - அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System)அமல்படுத்தப்பட்டது -22/01/2020 அன்று ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையில் வருகை பதிவுசெய்யப்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்- சார்ந்து.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
January 25, 2020

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவேடு எப்போது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையிலான வருகைப்பதிவேடு பரிசீலனையில் உள்ளது. நிதி பற்றாக்குறையின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 பிளஸ் 2 ஆசிரியர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Monday, January 13, 2020

January 13, 2020

சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவா்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் பணியில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் உள்ள 49,554 சத்துணவு மையங்கள் மூலம் 49 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா். இவா்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் மாணவா்களுக்கு முறையாகச் சென்று சேருகிா என்பதைக் கண்டறிய தலைமை ஆசிரியா்கள் மூலம் தினமும் எத்தனை மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சத்துணவின் பயன் முழுமையாக மாணவா்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடிய வில்லை. இதையடுத்து, துல்லியமாகக் கண்டறிய பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
இதுதொடா்பாக, சமூகநலத் துறை அதிகாரிகள் கூறுகையில், சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு சத்துணவு சாப்பிடும் மாணவா்களை பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்யப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து அந்த மாணவா்கள் சத்துணவை பெற்றுச் செல்லலாம். புதிதாக சாப்பிட வரும் மாணவா்களுக்கும் உணவு வழங்கப்படும். யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது. இதற்கான வரவேற்பைப் பொருத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தனா்.
மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் பணி யில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . தமிழகம் முழுவதும் உள்ள 49 , 554 சத்துணவு மையங்கள் மூலம் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ , மாணவியர் பயன் அடைந்து வருகின்றனர் . இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண் டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் தினமும் எத்தனை மாண வர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது . இருப்பினும் , சத்துணவின் பயன் முழுமையாக மாணவர் களுக்கு சென்று சேருவதை அதி காரிகளால் உறுதிப்படுத்த முடிய வில்லை . இதையடுத்து துல்லிய மாகக் கண்டறிய பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .
இதுதொடர்பாக , சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது : சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்தபின் சத்துணவை பெற்றுச் செல்லலாம் . புதிதாக சாப்பிட வரும் மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும் . யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது . இதற்கான வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் . இவ்வாறு அவர் கூறினார் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Monday, January 06, 2020

January 06, 2020

Biometric - New RD Service Driver installation Steps

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
January 06, 2020

Biometric Attendance update tutorial& Video and SW Link

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உங்கள் பள்ளி பயோமெட்ரிக் வருகைக்கான மென்பொருளை இந்த மாத இறுதிக்குள் Update செய்ய வேண்டும். எளிமையாக செய்வதற்கான வீடியோ இதோ உங்களுக்காக https://m.youtube.com/watch?v=Mdbd-kaiFOQ&feature=share
Mantra software download link https://download.mantratecapp.com/StaticDownload/MantraRDService_1.0.1.exe
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Sunday, December 29, 2019

December 29, 2019

பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி: புதிய மென்பொருளை நாளைக்குள் பதிவேற்ற உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியா், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொட்டுணா் கருவியில் புதிய மென்பொருளை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சாா்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு ஆதாா் எண் இணைந்த தொட்டுணா் கருவி மூலமாக வருகைப் பதிவேடு முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருவிகளுக்கு தேசிய தகவலியல் (யுஐடிஏஐ) மையத்தின் சாா்பில் வழங்கப்பட்டுள்ள சேவை டிச.30-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. இதைத் தொடா்ந்து, டிச.31-ஆம் தேதி முதல் தொட்டுணா் கருவிகள் மூலம் வருகைப் பதிவு செய்யாத நிலை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு, தொட்டுணா் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி அல்லது மடிக்கணினியில் உள்ள 'ஆா்.டி. சா்வீஸ் டிரைவரை' உட்புகுத்தி, தொடா்ந்து தொட்டுணா் கருவிகள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
இது தொடா்பாக தேசிய தகவலியல் மையத்திடமிருந்து வந்துள்ள மின்னஞ்சல், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பினும் அவசரம் கருதி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் போா்க்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி, தங்களது மாவட்டத்தில் பயிற்சி பெற்றுள்ள அனைத்து தொழில்நுட்ப நிபுணா்களின் உதவியோடு இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என பள்ளிக் கல்வி இணை இயக்குநா் (தொழிற்கல்வி) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog