Breaking

Showing posts with label University Exam. Show all posts
Showing posts with label University Exam. Show all posts

Wednesday, February 22, 2023

February 22, 2023

உயா் கல்விக்கான கட்டணத்தை குறைக்கவே எண்ம பல்கலைக்கழகம்

உயா் கல்விக்கான கட்டணத்தை குறைக்கவே எண்ம பல்கலைக்கழகம்

உயா் கல்விக்கான கட்டணத்தை வெகுவாக குறைக்க வேண்டும், நாட்டில் திறன் மேம்பாட்டு கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே எண்ம (டிஜிட்டல்) பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

தில்லியில் திங்கள்கிழமை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்று உரையாற்றிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: உயா் கல்வியில் பொது அல்லது திறன் மேம்பாட்டு படிப்புகள் என எந்தவொரு துறையிலும் இளைஞா்கள் தடையின்றி சோ்க்கை பெற்று படிப்பை முடிக்கும் வகையில் பன்முக சோ்க்கை நடைமுறையை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ம பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது உயா் கல்விக்கான கட்டணங்களை வெகுவாக குறைப்பதோடு, திறன்மேம்பாட்டு கல்வியையும் ஊக்குவிக்கும் என்று அவா் கூறினாா்.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர உறவை வலுப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

Tuesday, August 30, 2022

August 30, 2022

சிறப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சலுகை

நெல்லை பல்கலைக்கழகத்தில் சிறப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சலுகை

பேட்டை, ஆக.29 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2019 2020-ம் கல்வி ஆண்டில் இளங்கலை இளம் வணிகவியல் மற்றும் இளம் அறிவியல் பாடங்களில் அனைத்து பிரிவுகளிலும் சேர்ந்துப்ப யின்ற மாணவர்கள் ஏப்ரல் 2022-ல் நடைபெற்ற ஒன்று முதல் 5-ம் பருவத் தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று 6-ம் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மற்றும் 6-ம் பருவத் தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று ஒன்று முதல் 5-ம் பருவத் தேர்வு வரையிலான பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு (எழுத்து தேர்வு அல்லது செய்முறைத் தேர்வு) சிறப்பு துணைத் தேர்வுகள் வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக் கட்டணம் ரூ.1000 ஆகும்.

மேலும், இறுதி பருவமாகிய (இளநிலை எனில் 6-ம் பருவம், முதுநிலை எனில் 4-ம் பருவம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் எனில் 2-ம் பருவம்) ஏப்ரல் 2022 தேர்விற்கு தகுதியுடைய வருகைப்பதிவு இருந்தும், தேர்வுக்கட்டணம் செலுத்த பல்கலைக்கழகம் மூன்று கடைசி வாய்ப்புகள் வழங்கிய போதும் சில மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை. ஆதலால், அவர்களின் நலன் கருதி உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு தேர்வு எழுத பல்கலைக்கழகம் அமைதி வழங்கியுள்ளது. எனவே, அவ்வாறு உரிய கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக்கொள்ளலாம்.

மேற்கூறிய சிறப்புத்துணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வருகிற 1-ந் தேதி வரையில் பல்கலைக்கழக இணையதளத்தின் (www.msuniv.ac.in.) வழியாக தேர்வுக்கட்டணமாகிய ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மேற்கூறிய சிறப்பு துணைத்தேர்வுகள் மற்றும் சிறப்பு தேர்வுகள் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மட்டுமே நடத்தப்படும். தேர்வு அனுமதிச்சீட்டை மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இத்தேர்வுகளின் அட்டவணை தேர்விற்கு 5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும். எனவே, மேற்கூறிய சிறப்பு துணைத் தேர்வு அல் லது சிறப்பு தேர்வுகளுக்கு தகுதியுடைய மாணவர்கள் அந்தந்த தேர்வுகளுக்கான கால அட்டவணையை கடைபிடித்து தேர்வு எழுத கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள்.

மேலும் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத மாணவர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தேர்வு நாட் களில் அணுகி தேர்வு எழுதலாம். இந்த தகவலை, பல்கலைக்கழக பதிவாளர் (பொ) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Thursday, August 25, 2022

August 25, 2022

பெரியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை 2,3,ஆம் ஆண்டு முதுநிலை 2ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்; மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகலைப்பெற செப்டம்பர் 9க்குள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

-உயர்க்கல்வி இயக்ககம்

Total Pageviews

Search This Blog