Breaking

Showing posts with label Nurse Vacancies. Show all posts
Showing posts with label Nurse Vacancies. Show all posts

Friday, October 06, 2023

October 06, 2023

செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில், நர்சிங், பொது மருத்துவம் படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, செவிலியர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கடந்த 2021, 2022 மற்றும் நடப்பு ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை அறிவியலில் நர்சிங், பொது மருத்துவம் படிப்பு முடித்த மற்றும் இறுதியாண்டு படிக்கும் 20 முதல் 28 வயது நிரம்பிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு, அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

இந்த தேர்வு ஆன்லைனில் நடைபெறும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, முதல் இரண்டு வாரங்கள் இணைய வழி கற்றல்; அடுத்த நான்கு வாரங்கள் தமிழகத்திலுள்ள மருத்துவ மனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர், www.thadco.com என்கிற இணையதளத்தில் பதிவு செய்யலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Friday, August 18, 2023

August 18, 2023

28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னையில் பெண் செவிலியர்களுக்கான நேர்காணல்!

சவுதி அரேபிய அமைச்சத்தில் பெண் செவிலியர்களாக பணி செய்வதற்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது.

இது தொடர்பான் முழு விவரங்களை இங்கே காணலாம்.

சவுதி அரேபியாவில் வேலை

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேர்காணல் நடைபெறுவதன் விவரம்

சவுதி அரேபிய அமைச்சகம் பெண் செவிலியர்களுக்கான நேர்காணலை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.

இதற்கான நேரம் மற்றும் இடம் தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இதற்கு விண்ணப்பிக்க - சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஊதிய விவரம்:

இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தொடர்பு எண்கள்

9566239685, 6379179200

044-22505886 - 044-22502267

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது என்று அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து வேண்டும்.

Wednesday, February 22, 2023

February 22, 2023

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கு பணி - வரும் 28, மார்ச் 1ல் சென்னையில் நேர்காணல்: தமிழக அரசு அறிவிப்பு

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கு பணி வரும் 28, மார்ச் 1ல் சென்னையில் நேர்காணல்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்கள் பணிக்கு சென்னையில் வருகிற 28, மார்ச் 1ல் நேர்காணல் நடைபெறும் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந. மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வருகிற 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் (9566239685, 6379179200) (044-22505886, 044-22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Friday, February 17, 2023

February 17, 2023

சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் டெல்லி, பெங்களூரு மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் வருகிற 26ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com ல் கண்டு பயனடையலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களில் (9566239685, 6379179200, 044-22505886/044-22502267) அறிந்து கொள்ளலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ₹35,400 மட்டும் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, February 03, 2023

February 03, 2023

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை - முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்

பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்:

சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Thursday, January 19, 2023

January 19, 2023

10 தற்காலிக செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க 27/01/2023 கடைசி

தென்காசியில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!10 Temporary Nurse Vacancies - Last to apply 27/01/2023

தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 தற்காலிக செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட பதவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27/01/2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் - செவிலியர் (Staff Nurse), பதவியிடங்களின் எண்ணிக்கை - 10, கல்வித்தகுதி - செவிலியர் பட்டயபடிப்பு (DGNM)அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.sc Nursing) இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தின் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் படித்துள்ளவர்கள். வயது - 50 வயது வரை, மாத ஊதியம் - ரூ.18,000/-. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. கோவிட் - 19 காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவிட் -19 காலத்தில் தனியார் கோவிட் மருத்துவமனையில் பணிபுரிந்தவர்கள் அனுபவ சான்றிதழ் இணை இயக்குநர் சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்கவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட(https://tenkasi.nic.in/notice_category/recruitment) வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது, என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

Total Pageviews

Search This Blog