Breaking

Showing posts with label CBCID. Show all posts
Showing posts with label CBCID. Show all posts

Tuesday, July 05, 2022

July 05, 2022

மருத்துவ மேற்படிப்பு சோ்க்கையில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவ மேற்படிப்பு சோ்க்கையில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவ மேற்படிப்பு மாணவா் சோ்க்கையில் நடந்த முறைகேடு தொடா்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயா் நீதிமன்றம் மறுத்தது.

கடந்த 2020-2021-ஆம் கல்வி ஆண்டு, மருத்துவ மேற்படிப்பில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டதாக மருத்துவா்கள் சந்தோஷ்குமாா் கீதாஞ்சலி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம், தகுதி பெறாதவா்களை மருத்துவ மேற்படிப்பில் சோ்த்த விவகாரம் குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்படி, சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவா் சோ்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தோ்வுக் குழுவின் அப்போதைய செயலா் செல்வராஜன்தான் காரணம். அவா் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினாா்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடா்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபா்களுக்கும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுதொடா்பாக தீா்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘மருத்துவ மேற்படிப்பு மாணவா் சோ்க்கையில் நடந்த முறைகேடு தொடா்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது.

தோ்வுக் குழு முன்னாள் செயலா் செல்வராஜன் மீதான சிபிசிஐடி விசாரணையை தொடரலாம். அவருடைய ஓய்வூதியப் பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்தனா். மேலும், அவா் மீதான துறைரீதியான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

Total Pageviews

Search This Blog