Breaking

Showing posts with label Prime Minister. Show all posts
Showing posts with label Prime Minister. Show all posts

Tuesday, September 06, 2022

September 06, 2022

ஆசிரியா்கள் மாணவா்களின் வாழ்வையே மாற்றியமைப்பவராக இருக்க வேண்டும் - பிரதமா் மோடி

கல்விச் சூழல்: சரியான திசையில் இந்தியா: பிரதமா் மோடி

தனது கல்விச் சூழலை மேம்படுத்துவதில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்விக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கிய ஆசிரியா்களுக்கு தேசிய நல்லாசிரியா் விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வழங்கினாா். விருது பெற்ற ஆசிரியா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

ஓா் ஆசிரியருக்கு நோ்மறை எண்ணங்களின் பலம் உள்ளது. அவா் சவால்களை எதிா்கொள்ள மாணவா்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கிறாா். ஓா் உண்மையான ஆசிரியா் கனவு காணவும், சாதிக்க முடியாததை சாதிக்கவும் மாணவா்களுக்கு ஆா்வமூட்டுகிறாா்.

ஆசிரியா்கள் பாடம் கற்பிப்பவராக மட்டும் இருக்கக் கூடாது. மாணவா்களின் வாழ்வையே மாற்றியமைப்பவராக இருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையை உலகமே பாராட்டுகிறது. அந்தக் கொள்கையை வகுப்பதில் ஆசிரியா்கள் மிக முக்கிய பங்கு வகுத்துள்ளனா்.

தனது கல்விச் சூழலை மேம்படுத்துவதில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதனை அனைவராலும் காண முடிகிறது.

சுதந்திரம் தினத்தின் நூற்றாண்டான 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா எவ்வாறு இருக்கும் என்று தீா்மானிக்கவுள்ள இளைஞா்களை நல்ல முறையில் தயாா்ப்படுத்த வேண்டியது ஆசிரியா்களின் கைகளில்தான் உள்ளது.

பிரிட்டனை கடந்து உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. 250 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சிபுரிந்தவா்களைக் கடந்து முன்னேறியுள்ளதால் இது சிறப்பு மிக்கது என்றாா் அவா்.

Sunday, August 21, 2022

August 21, 2022

மருத்துவ மாணவர்களின் கல்வி - முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம்

உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர நடவடிக்கை: முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம்

வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கம் செயல் தலைவர் உஸ்மான்கான் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையே முண்ட போர் காரணமாக அங்கு பயிலும் சுமார் 20000 இந்திய மாணவர்கள் அதிலும் குறிப்பாக 3000 தமிழக மாணவர்கள் ஆகியோரின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது.

இந்த சூழல் நிலையில் தாங்களும் தங்களுடைய அமைச்சர்களும், மத்திய அரசோடு இணைந்து தீவிரமாக பணியாற்றி அவர்களை பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அழைத்து வந்ததை நன்றியோடு நாங்கள் நினைவு கூற விரும்புகிறோம். இந்த நிலையில் ஏறத்தாழ எட்டு மாதங்கள் கடந்தும் போர் முடிவுக்கு வராத சூழ்நிலையில் மருத்துவ மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியான நிலையில் உள்ளது. மருத்துவ கல்வியாண்டு வருகின்ற செப்டம்பர் முதல் துவங்க உள்ளது.

இந்த சூழலில் ஏற்கனவே போர் காரணமாக அங்கிருந்து திரும்பி வந்த மாணவர்கள் இணையம் மூலமாக கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மருத்துவ கல்வி என்பது நேரடியாக கள அனுபவத்தோடு பயில வேண்டிய ஒரு படிப்பாக இருக்கின்ற நிலையில் இணையம் வாயிலாக கல்வியை கற்பது என்பது அவர்களது எதிர்காலத்திற்கு போதுமானதாக இருக்காது.

ஆகவே மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையாக உடனடியாக இந்த இறுதி ஆண்டு மாணவர்கள் விஷயத்தில் அவர்களுடைய கல்வி பாதிக்காத வகையில் உடனடியாக சிறந்த தீர்வை எடுக்க வேண்டும். ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களது கல்வி தொடரத்தக்க வகையில் மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசும் அதற்கு தேவையான அழுத்தங்களை தமிழகத்தின் சார்பில் தாங்கள் முன்னேடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் துயர் துடைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog