Breaking

Showing posts with label SCHOOLS. Show all posts
Showing posts with label SCHOOLS. Show all posts

Saturday, March 25, 2023

March 25, 2023

சர்வதேச தரத்தில் நுங்கம்பாக்கம் பள்ளி புதுப்பொலிவு ஏற்படுத்தி சென்னை மாநகராட்சி அசத்தல்

சர்வதேச தரத்தில் நுங்கம்பாக்கம் பள்ளி புதுப்பொலிவு ஏற்படுத்தி சென்னை மாநகராட்சி அசத்தல் - Chennai Corporation is amazing by renovating Nungambakkam school to international standards நுங்கம்பாக்கம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளை 'ஸ்மார்ட்' பள்ளிகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தேனாம்பேட்டை மண்டலம், 110வது வார்டுக்கு உட்பட்ட, நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தரத்தை மேம்படுத்த, சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இதையடுத்து, 'சிட்டிஸ்' திட்டத்தில், 4.8 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளி கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

கழிப்பறை வசதிகள்,வண்ண மயமான 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், புதிதாக இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

'டைல்ஸ்' பதிப்பு, சுவர்களுக்கு வண்ணம், அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மாணவியர், சைக்கிள்களை நிறுத்த தனியே இடம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில், பல்வேறு கட்டமைப்பு மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான பணிகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

அதிகாரிகள் கூறியதாவது:

நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை, சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்துவதற்காக அனைத்து கட்டமைப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பள்ளியில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இறுதிக்கட்ட பணிகள், அடுத்த சில வாரங்களில் முடியும்.

சர்வதேச தரத்தில், இப்பள்ளி மாறியுள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் மாணவியரின் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tuesday, February 21, 2023

February 21, 2023

38 மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கின்ற கல்லூரிகளின் விவரங்கள் - PDF



38 மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கின்ற கல்லூரிகளின் விவரங்கள் Details of Colleges Nearest to Government Higher Secondary Schools in 38 Districts - PDF

CLICK HERE TO DOWNLOAD PDF

Monday, September 19, 2022

September 19, 2022

Insist on holiday for schools -'ப்ளு' காய்ச்சல் - பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

Insist on holiday for schools - பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

Necessary steps should be taken to create awareness among the parents about 'Blue' fever which is spreading among children in Tamil Nadu and to bring it under control. Former Chief Minister Panneer Selvam said that the Tamil Nadu government should take measures to postpone the exams and give holidays to schools, especially elementary schools, for a while until the fever is brought under control. Regarding this, Minister Subramanian gave an answer and gave an interview to a reporter in Chennai: There is no need to give holidays to schools. To investigate and publish reports on the nature of the disease. Students' studies will be affected if schools are given holidays. Special vaccination camps are being held at 50,000 places in Tamil Nadu. The vaccination camp will be held till September 30. This is what he said.

தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் 'ப்ளு' காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்தவும், அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.

இது குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் பதில் அளித்து, சென்னையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வே ண்டிய அவசியம் இல்லை. நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்ககைளை வெளியிட வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடை பெற்று வருகிறது. செப்டம்பர் 30ம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, September 17, 2022

September 17, 2022

Quarterly examination holiday for schools in Tamil Nadu - தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.1-ல் காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடக்கம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.1-ல் காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடக்கம் - Quarterly examination holiday for schools in Tamil Nadu begins on October 1

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரையும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரையும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, September 05, 2022

September 05, 2022

ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிகளுக்கான புதிய அறிவிப்புகள் - பிரதமர் மோடி

எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இதன் மூலம் பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டுவரப்படும். புதிய தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள் என்று திரு மோடி கூறினார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

"ஆசிரியர் தினமான இன்று, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் நான் அறிவிக்கிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் விளைவாக இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்

இதன் மூலம் இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டுவரப்படும். கண்டுபிடிப்பு சார்ந்த கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய தொழில்நுட்பம். நவீன வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்

அண்மை ஆண்டுகளில் தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வித் துறையை மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுவதும் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Saturday, September 03, 2022

September 03, 2022

பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை "துாய்மை நிகழ்வுகள்" - 2022. நிகழ்ச்சி நிரல் விவரம் (செப்டம்பர் 1 முதல் 15 வரை)

பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை "துாய்மை நிகழ்வுகள்" - 2022. நிகழ்ச்சி நிரல் விவரம் (செப்டம்பர் 1 முதல் 15 வரை)

CLICK HERE TO DOWNLOAD

Sunday, August 28, 2022

August 28, 2022

அருகமைப் பள்ளியின் அருமை உணா்வோம்

அண்மைக்காலமாக, பள்ளி விடுதிகளில் மாணவா்கள் இறப்பது தொடா்கதையாகி வருகிறது. இது அனைத்துத் தரப்பு மக்களையும் பதைபதைக்கச் செய்கிறது. கடந்த மாதம் கனியாமூா் பள்ளி மாணவியின் மா்ம மரணம், சில நாட்களுக்கு காட்சி ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

ஊடகவியலாளா்களால் பிரச்னை மேலும் சிக்கலாகுமே தவிர, அவா்களால் எந்த பிரச்னைக்கும் தீா்வு காண முடியாது. இது போன்ற இறப்புகள் வரும் காலங்களில் நிகழாமல் இருப்பது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

தமிழகத்தில் ஆங்கிலேயா் காலத்தில் இருந்தே உதகை, கொடைக்கானல் போன்ற ஊா்களில் விடுதிகளுடன் கூடிய பள்ளிகள் அமைக்கப்பட்டன. ஆங்கிலேய உயா் அதிகாரிகளும் வசதி படைத்தவா்களும் தங்கள் பிள்ளைகளை அங்குள்ள பள்ளிகளில் படிக்க வைப்பதை கௌரவமாகக் கருதினா்.

இன்றைய நிலையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் சோ்ந்து சுமாா் 45 ஆயிரம் உள்ளன. இந்தப் பள்ளிகளில் தங்கும் விடுதிகள் கிடையாது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு, தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கு, மாணவியருக்கு என அரசு தனித்தனியே விடுதிகளை நடத்தி வருகிறது.

இந்த விடுதிகள் குறித்து சிறுசிறு புகாா்கள் இருந்தாலும், இங்கெல்லாம் பெரும்பாலும் மரணம் நிகழ்வது கிடையாது. இங்கெல்லாம் பட்டதாரி ஆசிரியா் தகுதிக்கு இணையான ஒருவா் விடுதிக் காப்பாளராக நியமிக்கப்படுகிறாா். அவரும் பொறுப்போடு செயல்படுகிறாா்

இன்னொரு பக்கம் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன், இன்டா்நேஷனல் என சுமாா் 10,000 பள்ளிகள் தமிழகத்தில் செயல்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 350 மாணவா்கள் பயில்கின்றனா். இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் விடுதி வசதி உள்ளது. பெரும்பாலான தனியாா் பள்ளியில் கட்டாயமாக விடுதிகளில் தங்கி படிக்க வேண்டும் என மாணவா்கள் நிா்ப்பந்திக்கப்படுகின்றனா்.

தமிழகத்தில் விடுதி வசதி உள்ள தனியாா் பள்ளிகளில் எண்ணிக்கை பற்றிய விவரம் தெளிவாக இல்லை. சென்னையைச் சுற்றி மட்டும் குறைந்தபட்சம் 100 தனியாா் பள்ளிகளில் விடுதி வசதி உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோா் இருவரும் பணிக்கு செல்வதால் தங்கள் குழந்தையின் கல்வியில் கவனம் செலுத்த முடிவதில்லை. பல பெற்றோா், தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் அவா்களை விடுதியில் சோ்க்க முற்படுகின்றனா்.

தமிழ்நாடு விடுதிகள் சட்டம் 2014-இன் படி 18 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் தங்கும் விடுதியை நடத்துபவா்கள் உரிமம் பெற வேண்டும். விடுதி நடத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியா் பாா்வையிடும்போது விடுதியில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனடியாக அதன் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. கனியாமூா் நிகழ்வில் பள்ளி விடுதி பதிவு செய்யப்பட்டு உரிமம் பெறவில்லை என்கிற செய்தி வெளிவந்தது.

ஆனால், எந்தெந்த பள்ளி விடுதிகள் பதிவு செய்யப்பட்டு உரிமம் பெற்றுள்ளன என்ற விவரம் பெற்றோா்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. இந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். விடுதிகளில் குறைபாடுகள் காணப்பட்டால், பெற்றோா் யாரைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசின் கல்வித்துறை வழிகாட்டுதல்களை அரசு பள்ளிகள் பின்பற்றும் அளவிற்கு தனியாா் பள்ளிகள் பின்பற்றுவதில்லை. விடுமுறை விடுவது, சிறப்பு வகுப்புகள் எடுப்பது போன்ற விஷயங்களில் கூட அரசின் உத்தரவை தனியாா் பள்ளிகள் கண்டு கொள்வதில்லை.

தனியாா் பள்ளியில் இயங்கும் விடுதிகளை முறைப்படுத்துவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும். தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமானால், சிறந்த பள்ளியில் படிக்க வேண்டும் என எண்ணும் பெற்றோா், பிள்ளைகள் தங்கியுள்ள விடுதிகளில் ஏற்படும் குளறுபடிகளைக் கண்டு கொள்வதில்லை.

தங்கள் குழந்தைகளைப் பிரிய விரும்பாத பெற்றோா் தங்கள் இருப்பிடத்தையே பள்ளிக்கு அருகில் மாற்றிக் கொள்கின்றனா். சில ஆண்டுகளுக்கு அந்த ஊரிலேயே தங்கி வீட்டில் இருந்தே பிள்ளைகளைப் பள்ளி சென்று வரச் செய்கின்றனா்.

மாணவா்கள், தங்கள் வீட்டில் இருந்து நடந்தோ, சைக்கிளிலோ செல்லும் தொலைவில் உள்ள பள்ளிகளான அருகமைப் பள்ளிகளின் தேவையை பெற்றோா்கள் தற்போது நன்கு உணா்ந்துள்ளனா்.

பெற்றோா், நாள்தோறும் பள்ளியில் நடப்பதை பிள்ளைகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுதல் அருகமைப் பள்ளியால் கிடைக்கும் பெரும் நன்மையாகும். அப்படி பெற்றோருடன் மனம் விட்டுப் பேசுவது, மாணவா்களின் அறிவை செழுமையூட்டவும் அவா்கள் பாடங்களை விரும்பிக் கற்கவும் உதவி செய்கிறது என குழந்தை மனநல நிபுணா்கள் கூறுகின்றனா். இப்படிப்பட்ட நன்மை எதுவும் விடுதிகளில் கிடைக்காது.https://www.kalviseithiofficial.com விடுதி மாணவா்களுக்கு மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக இருப்பதால் தொடா்ச்சியாக கற்றல் நிகழ்வு இருந்துகொண்டே இருக்கும். அது மாணவா்களின் மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கக்கூடும்.

பிள்ளைகள் அருகமைப் பள்ளிகளில் பயில்வதால் பெற்றோா்களுக்கான பொருட்செலவு பெருமளவு குறைகிறது. மாதம் ஒருமுறை மட்டுமே குழந்தைகளைப் பாா்க்க முடிவது, குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனிருக்க இயலாமை போன்ற கவலைகள் பெற்றோருக்கு இருக்காது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, அருகமைப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சோ்க்கும் பெற்றோருக்கு பள்ளி வாகன விபத்து என்கிற அச்சமே இருக்காது.

மாணவா்கள் மன ஆரோக்கியத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியான மனநிலையில் கல்வி கற்பதற்கு விடுதிகளிலிருந்து விடுதலை கொடுப்போம்; அருகமைப் பள்ளிகளை ஆதரிப்போம்.

Thursday, August 25, 2022

August 25, 2022

பள்ளிகளில் காலை உணவு திட்டம்: வழிமுறைகள் வெளியீடு

பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும்.

காலை உணவு திட்டத்தில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். காய்கறிகளை சுத்தம் செய்தல், அவற்றை சுத்தமாக சமைத்தல் ஆகியவற்றை பார்வையிட்டு, தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும், ஆசிரியர்களும் சுழற்சி முறையில் உணவை சுவைத்து, தரத்தை அறிய வேண்டும்.

தரமான மற்றும் சுகாதாரமான உணவை போதுமான அளவுக்கு மாணர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வெளிட்டுள்ள வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 18, 2022

August 18, 2022

மரத்தடி வகுப்பு பள்ளிகள் - பட்டியல் தயாரிக்க உத்தரவு

மரத்தடி வகுப்பு பள்ளிகள் எத்தனை? பட்டியல் தயாரிக்க உத்தரவு

மரத்தடியில் வகுப்பு நடத்தும் பள்ளிகளின் பட்டியல் தயாரிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 2.50 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றில், 47 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற திட்டத்தால், அரசு பள்ளிகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு மாறி உள்ளனர்.ஆனால், மாணவர் சேர்க்கை அதிகரித்ததுபோல், ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. இதனால், பல பள்ளிகளில் கழிப்பறை மற்றும் வகுப்பறை கட்டடங்கள் இல்லாத நிலை உள்ளது.

பல அரசு தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடம் இல்லாமல், மரத்தடி நிழலிலும், பள்ளிக்கு அருகில் உள்ள பொது இடங்களிலும் பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், வெயில், மழை நேரத்தில் மாணவர்கள் ஒதுங்கக்கூட முடியாமல், பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, 1,300 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதையொட்டி, மரத்தடி வகுப்பு நடக்கும் பள்ளிகளின் விபரங்களை, மாநிலம் முழுதும் சேகரித்து, பள்ளிக் கல்வித் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, July 07, 2022

July 07, 2022

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு



வேலூா் மாவட்டத்தில் உள்ள ஊசூா், பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆசிரியா் விலங்கியல் பாடம் நடத்துவதை வகுப்பறையில் மாணவா்களுடன் அமா்ந்து கவனித்த ஆட்சியா், மாணவா்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தி உயா்ந்த இடங்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற அவா் அறிவுரைகள் வழங்கினாா். மேலும், மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். பள்ளிக்கு வரும் போது தூய்மையான சீருடை, முடி திருத்தம் செய்து வரவேண்டும். மாணவா்கள் அனைவரும் ஆசிரியா்கள், பெற்றோா் சொல்வதைக் கேட்டு தங்களை சிறந்தவா்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, பொய்கை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவா் ஆய்வு செய்ாா். அங்கு, மாணவா்களுக்கு பொருளாதாரம் பாடம் நடத்தி, வகுப்பறையில் மாணவா்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். பொருளாதாரம் தொடா்பான பல்வேறு கருத்துகள், ஆலோசனைகளை ஆட்சியா் வழங்கினாா்.

ஆய்வின் போது, பூதூா் ஊராட்சித் தலைவா் கவிதா சிவகுமாா், தெள்ளூா் ஊராட்சித் தலைவா் தேவி சுரேஷ், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

Thursday, June 23, 2022

June 23, 2022

சைனிக் பள்ளிகளில் ஆன்லைன் கவுன்சிலிங் தொடக்கம்

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 10 சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் செயல்முறை தொடங்கப்பட்டுளளது. இந்த https://sainikschool.ncog.gov.in/ecounselling இணையதளம் ஜூன் 26, 2022 வரை பயன்பாட்டிலிருக்கும்.

இந்தியாவில் 33 சைனிக் பள்ளிகள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சைனிக் பள்ளிகள் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்திய ஆயுதப் படைகளில் மாணவர்கள் சேர்வதற்கு கூடுதல் வாய்ப்பளிக்கும் விதமாக இந்த பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், சைனிக் பள்ளிகளாக மாற விரும்பும் தனியார்/மாநில அரசு/அறக்கட்டளைப் பள்ளிகள் சைனிக் பள்ளி சங்கத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு மதிப்பு மிக்க, கலாச்சாரம், பாரம்பரியம், தேசபற்றுடன் கூடிய கல்வியை வழங்கும்.

இந்த பள்ளிகளில், 40% சதவீத மாணவர் சேர்க்கை அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் (ALL INDIA SAINIK SCHOOLS ENTRANCE EXAM) , 60% அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கப்படுவார்கள். கடந்த மார்ச் மாதம் நாடுமுழுவதும் 21 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள விகாசா என்ற தனியார் பள்ளியும் அடங்கும்.

இந்நிலையில், பதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 10 சைனிக் பள்ளிகளில் உள்ள 534 இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை சைனிக் பள்ளிகள் சங்கம் தொடங்கியது. முதலாம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த சுற்றில், சரியான பள்ளிகளை தேர்வு செய்ய முடியாமால் போன தேர்வர்களுக்காக இரண்டாம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு – 2022 இல் தேர்வாகி பள்ளிகளில் இணைந்தவர்கள், முதல் சுற்றில் இடம் ஒதுக்கியும், அதற்கு விருப்பமில்லாதவர்கள், முதல் சுற்றில் தேர்வாகி சம்பந்தப்பட்ட பள்ளியில் இணைந்து பள்ளியில் கட்டணத்தை செலுத்தாதவர்கள் ஆகியோர் 2 ஆம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என்று சைனிக் பள்ளிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது

Tuesday, May 17, 2022

May 17, 2022

பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

பள்ளி திறப்பு தேதி

ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில், பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டு இறுதி தேர்வு கடந்த, 13ம் தேதி நிறைவுற்றது. அவர்களுக்கு இம்மாதம் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை. விடுமுறை முடிந்து, ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

தமிழக பாடத் திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 1ல் விடைத்தாள் திருத்தம் துவங்கி, ஜூன் 17 வரை நடத்தப்படுகிறது. பொதுத் தேர்வு பணி முடிந்ததும், மீண்டும் விடை திருத்தும் பணிகளும் உள்ளதால், உயர்நிலைப் மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை கிடைக்காத சூழல் உள்ளது.

எனவே, பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், அதன் மாநில பொதுச் செயலர் பிரபாகரன் மனு அளித்துள்ளார்.அதில், 'வரும் கல்வி ஆண்டில், ஆசிரியர்கள் மன அழுத்தம் இன்றி பணியாற்றும் வகையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில், பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Wednesday, April 20, 2022

April 20, 2022

பள்ளிப் பருவம் திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம் - முதல்வர் ஸ்டாலின்!

'' Education is the only asset that no one can steal; It should be read well, '' Chief Stalin advised the students.

The inaugural function for the selection of the Management Committee Member of Government Schools was held yesterday at Lady Wellington High School, Chennai. On the show, Chief Stalin spoke: The school season is a happy time that is not available again. The joy that is available this season will not be available in any other season. Therefore, students should make proper use of the school season.

Education received in one generation will be safe for seven generations. No one can snatch education from you alone. If there is one property that cannot be stolen, it is education only. That is why the government gives more importance to education. Only if the thinking of the students, the teacher and the parents are in the same straight line will the stream of education flow very smoothly. In it, even if one is interrupted, the educational trajectory will be disrupted. Therefore, a school management committee is set up to improve government schools.

The government should know the needs of the school and provide it. To implement it, a school management committee has been set up. He then spoke. School Education Minister Mahesh gave a welcome address.

Commissioner Nandakumar thanked the ministers. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வு

''யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; அதை நன்றாக படிக்க வேண்டும்,'' என, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

அரசு பள்ளிகளின் மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வுக்கான துவக்க நிகழ்ச்சி, சென்னை லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பள்ளிப் பருவம் திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம். இந்த பருவத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது. எனவே, பள்ளி பருவ காலத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். கல்வியை மட்டும் உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. திருட முடியாத சொத்து ஒன்று இருந்தால், அது கல்வி மட்டுமே. அதனால் தான் கல்விக்கு, அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் ஆகிய மூவரின் சிந்தனையும், ஒரே நேர்கோட்டில் இருந்தால் தான், கல்வி நீரோடை மிக சீராக செல்லும். அதில், ஒருவர் தடங்கல் போட்டாலும், கல்வி தடம் புரண்டு விடும்.எனவே, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது. பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ்

அரசு பள்ளியின் தேவைகள் அறிந்து, அதை வழங்க வேண்டும். அதை செயல்படுத்தவே, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பின், பள்ளி மேலாண்மை குழு தொடர்பான பிரசார வாகனங்களையும், முதல்வர்கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் வரவேற்று பேசினார்.

கமிஷனர் நந்தகுமார் நன்றி கூறினார்.அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி, சென்னை மேயர் பிரியா ராஜன், பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா பங்கேற்றனர்.மாநிலம் முழுதும், 37 ஆயிரம் பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

Thursday, April 07, 2022

April 07, 2022

தமிழகத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு?

Schools in Tamil Nadu have not been opened properly for the last 2 years ... students also studied online .. exams were conducted online .. As a result, corona infections are gradually declining, schools and colleges are being opened and live classes are being held.

Summer sun

In this situation, the sun has already started to shine in Tamil Nadu .. It is feared that the impact of this sun will be even more in the coming month .. The government is always counting the summer sun and announcing the summer holidays .. .



Therefore, the Tamil Nadu Teachers' Union has requested the Government of Tamil Nadu to change the school hours.

Fort



On behalf of the Tamil Nadu Teachers' Union, I would like to congratulate the Hon'ble Chief Minister for making Tamil Nadu the premier state in India since he took over the reins of government.



The scorching sun



It is noteworthy that the running hours of schools have been changed in some states for the benefit of students in view of the scorching sun across the country. School time in Andhra Pradesh starts at 8 am and ends at 11 am. Similarly, in Karnataka, the holiday season for schools to choose from ... In Tamil Nadu, the sun has already crossed the hundred.



Normalcy





The awning will peak in the coming seasons. Due to the effects of the sun, various skin diseases and fevers become commonplace in children. Learning and teaching can only be better if the body and mind are in harmony. Currently 1st to 9th grade is scheduled for May 13th and 10th to 12th May 30th.





On behalf of the Tamil Nadu Teachers Union, I urge the Chief Minister to change the school hours from 7.30 am to 12.30 pm and keep the students in check till the end of May to cope with the heat wave. ” கோரத்தாண்டவம்

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை... மாணவர்களும் ஆன்லைன் மூலம்தான் படித்து வந்தனர்.. ஆன்லைனில்தான் தேர்வுகளும் நடந்து வந்தது..

இதையடுத்து, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன.

கோடை வெயில்

இந்நிலையில், வெயில் இப்போதே தமிழகத்தை வாட்ட துவங்கிவிட்டது.. வரும் மோ மாதம் இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.. எப்போதுமே இந்த கோடை வெயிலை கணக்கிட்டுதான், கோடை விடுமுறைகளை அரசும் அறிவித்து வருகிறது.. ஆனால், ஏப்ரல் மாதமே வெயில் தாக்கம் உச்சத்துக்கு வந்துள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளமாறன்

எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

கோட்டை

முதல்வருக்கு "ஆட்சி பொறுப்பேறற்றதிலிருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும்கோடை விடுமுறை காலத்தில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்

நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெய்யில் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு... தமிழ்நாட்டில் இப்போதே வெய்யில் சதத்தைத் தாண்டியுள்ளது. சகஜத்தன்மை

எதிர்வரும் காலங்களில் வெய்யில் உச்சத்தைத் தொடும். வெய்யிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 13 வரைக்கும் 10 முதல் 12 வரை மே 30 வரை திட்டமிடபட்டுள்ளது.

கோரத்தாண்டவம்

வெய்யிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர்களின் நலன்கருதி, பள்ளிகளின் நேரம் விரைவில் மாற்றியைமக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Saturday, March 19, 2022

March 19, 2022

18 ஆயிரம் புதிய வகுப்பறைகள் அரசு பள்ளிகளில் கட்ட திட்டம்

* 'இல்லம் தேடி கல்வி' என்ற முன்னோடி திட்டம், 38 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது; 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைகின்றனர். வரும் நிதியாண்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்த, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

* புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில், அரசு பள்ளி மாணவர்கள் படிக்க, 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகளை, அரசு துவங்கியுள்ளது. வரும் நிதியாண்டில், மேலும் 15 மாவட்டங்களில், முன்மாதிரி பள்ளிகள் துவங்கப்படும். இதற்கு, 125 கோடி ரூபாய் செலவிடப்படும்

இதையும் படிக்க | அரசு பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க உதவி

* ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உட்பட, அனைத்து அரசு பள்ளிகளையும் நவீனமயமாக்க, 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்' ஏற்படுத்தப்படுகிறது.இதில், அரசு பள்ளிகளில், புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்; கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்படும். வரும் நிதியாண்டில், 1,300 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழறிஞர் பெயரில் நுாலகம்

பொது நுாலகங்களை மேம்படுத்த, உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது. ஆறு புதிய மாவட்டங்களில், இரண்டு ஆண்டுகளில், 36 கோடி ரூபாய் செலவில், மாவட்ட மத்திய நுாலகங்கள் ஏற்படுத்தப்படும். இந்த நுாலக கட்டடங்களுக்கு, தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்

புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல, சென்னையை போன்று, மற்ற மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படும். தமிழ் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்கு, வரும் நிதி ஆண்டில், 5.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

Sunday, March 13, 2022

March 13, 2022

150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக்கல்வி 01.08.2021 நிலவரப்படி அரசு/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (பட்டதாரி ஆசிரியர்கள்) மேற்கொண்டமை 6 முதல் 10 வரை வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! உபரிப் பணியிடங்களை குறைப்பதற்காக, குறைந்தபட்ச பணியிடங்களை மாற்றியமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள், பள்ளிக் கல்வி ஆணையரகத்தில் நடைபெற்று வருவதால் உபரி ஆசிரியர் முழு பட்டியல் வெளியிடுவதில் தாமதம். (13.03.2022) முற்பகல் இறுதிப் பட்டியல் வெளியாக வாய்ப்பு!

இதையும் படிக்க | BT Deployment Seniority List - 2022

Sunday, March 06, 2022

March 06, 2022

பள்ளிகளுக்கான மத்திய அரசின் நிதி விடுவிப்பு: அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

பள்ளிகளுக்கான மத்திய அரசின் நிதி விடுவிப்பு:அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தல் தமிழக அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கான மத்திய அரசின் நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான மானிய செலவின விவரங்களை அறிக்கையாக ஏப்.10-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கவும், வளாக பராமரிப்பு

பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுதோறும் மத்திய அரசின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

அதன்படி நிகழ் கல்வியாண்டு (2021-22) 31, 214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.77.90 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் முதல் தவணையாக 50 சதவீத (ரூ.38.95 கோடி) நிதி பள்ளிகளுக்கு கடந்த அக்டோபரில் வழங்கப்பட்டது. அதைத்தொடா்ந்து மீதமுள்ள தொகையானது தற்போது விடுவிக்கப்படுகிறது. இவற்றை பள்ளிகளின் மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் பிரித்து வழங்க வேண்டும். இந்த மானியத்தில் 25 சதவீத தொகையை இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் வாங்க பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், மானிய செலவீன விவரங்களை அறிக்கையாக இயக்குநரகத்துக்கு ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 05, 2022

March 05, 2022

தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை

கல்வி கட்டணத்தை செலுத்தாத காரணத்திற்காக மாணவர்களை வெளியே நிற்க வைக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை

Total Pageviews

Search This Blog