Breaking

Showing posts with label Tn Ration. Show all posts
Showing posts with label Tn Ration. Show all posts

Monday, January 02, 2023

January 02, 2023

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் நாளை முதல் விநியோகம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் நாளை முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் நாளை முதல் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மேலும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே நியாய விலைக் கடைகளுக்கு பொது மக்கள் நெரிசல் இல்லாமல் வந்து செல்ல வசதியாக, டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. நாளை முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் ஜன.9 முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன.13-ஆம் தேதி வழங்கப்படுகிறது.

Saturday, October 15, 2022

October 15, 2022

தமிழக அரசு நியாய விலைக்கடையில் மாபெரும் வேலைவாய்ப்பு!

தமிழக அரசு நியாய விலைக்கடையில் மாபெரும் வேலைவாய்ப்பு! 

தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் அனைத்து மாவட்ட நியாய விலைக் கடைகளுக்கு 6,500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிகளை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

பணி: நியாய விலைக்கடை விற்பனையாளர்

காலியிடங்கள்: 5578

தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பின்னர் மாதம் ரூ.8,600 - 29,000 வழங்கப்படும்.

பணி: உதவியாளர் 

காலியிடங்கள்: 925

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.5,500. ஓராண்டுக்குப் பின்னர் மாதம் ரூ.7,800 - 26,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.150, கட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.100 செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் மாவட்ட வாரியான காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.



Friday, October 14, 2022

October 14, 2022

தமிழக ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 - All districts Notification Notification - Click here

தமிழக ரேஷன் கடை பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் 4000 

விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 விண்ணப்பிக்கும் முறை 

தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள்
கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்

விழுப்புரம் – 244 பணியிடங்கள்
விருதுநகர் – 164 பணியிடங்கள்
புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்
நாமக்கல் – 200 பணியிடங்கள்
செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்
ஈரோடு – 243 பணியிடங்கள்
திருச்சி – 231 பணியிடங்கள்
மதுரை – 164 பணியிடங்கள்
ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்
திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்
அரியலூர் – 75 பணியிடங்கள்
தென்காசி – 83 பணியிடங்கள்
திருநெல்வேலி – 98 பணியிடங்கள்
சேலம் – 276 பணியிடங்கள்
கரூர் – 90 பணியிடங்கள்
தேனி – 85 பணியிடங்கள்
சிவகங்கை – 103 பணியிடங்கள்
தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்
ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்
பெரம்பலூர் – 58 பணியிடங்கள்
கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்
திருவாரூர் – 182 பணியிடங்கள்
வேலூர் – 168 பணியிடங்கள்
மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்
திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்
கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்
திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்

நிறுவனம் தமிழக ரேஷன் கடை
பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்
பணியிடங்கள் 4000

விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022

விண்ணப்பிக்கும் முறை Offline

Wednesday, September 28, 2022

September 28, 2022

4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு - Tamil Nadu government orders to fill 4,000 posts

ரேஷன் கடைகளில் 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு - Tamil Nadu government orders to fill 4,000 posts

ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விற்பனையாளர் பணிக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி கட்டுநர் பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரேசன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, ரேசன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின் படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான 4000 இடங்கள் நிரப்ப பட உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இத்தேர்வு நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக் கூடும் என்பதால், தேர்வு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும், தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து பதிணைந்து நாட்களுக்குள்ளும் பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும் நாளில் இருந்து 90 நாட்களுக்கு முன்னரும் காலிப்பணி இடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களில் இருந்து பெற வேண்டும்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். நியாய விலைக்கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி (பிளஸ்-2) பெற்றிருக்க வேண்டும். அல்லது இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றும், கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 07, 2022

September 07, 2022

புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம்: செப்.10ல் குறைதீர் முகாம்!

புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம்: சென்னையில் செப்.10ல் குறைதீர் முகாம்!

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய அட்டை வாங்குதல் உள்ளிட்டவற்றுக்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் சென்னையில் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் செப்டம்பர் 10 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர்-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 10.09.2022 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

மேலும், பொதுவிநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்தச் சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, June 16, 2022

June 16, 2022

01.01.2022 முதல் அகவிலைப்படியை 14% அதிகரித்து 28% ஆக அனுமதித்து தமிழக அரசு உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 960 நாள்: 16.06.2022

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு

அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 ஊழியர்கள் பயன்பெறுவர்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியை 14% அதிகரித்து 28% ஆக அனுமதித்து தமிழக அரசு உத்தரவு!!

செய்தி வெளியீடு எண் : 960

நாள்: 16.06.2022

செய்தி வெளியீடு

நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 2202.2021 முதல் பெற ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி அனுமதிக்கப்பட்டிருந்தது.

1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமு.கூஸ்டாலின் அவர்கள் கனிவுடன் பரிசீவிந்து 1.01.2022 முதல் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பணையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28. அகவிலைப்படி பெறவும். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2852 கட்டுநர்கள், என மொத்தம் 72510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

Sunday, January 30, 2022

January 30, 2022

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: தமிழக அரசு புதிய உத்தரவு

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாய விலைக்கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், க்யூ.ஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை பதிவு செய்வதில் பிரச்னை எழுந்தாலும், பொருட்களை வினியோக்க வேண்டும் எனவும், குடும்ப அட்டை எண்ணை, விற்பனை முனையத்தில் பதிவு செய்து, ரேஷன் பொருட்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மண்டல மற்றும் வட்டார அளவில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், பயிற்சி வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog