Breaking

Showing posts with label engineering course. Show all posts
Showing posts with label engineering course. Show all posts

Wednesday, September 06, 2023

September 06, 2023

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தொடக்கம்!



பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

பொதுப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4,585 மாணவர்களில் 4,466 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம்.

Saturday, August 26, 2023

August 26, 2023

இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை



இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இடங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

நான்கு வருட படிப்பு குறித்து மணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையே பெரும்பாலான கல்லூரிகளில் நடந்தன. போதிய கல்வித் தரம் இல்லாததே காரணமாக கூறப்படும் நிலையில் கல்லூரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.பங்கேற்ற 440 கல்லூரிகளில் 208 கல்லூரிகள் 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. இரண்டு சுற்று கவுன்சிலிங்கின் முடிவில் 37 கல்லூரிகளை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை. 176.99 முதல் 142 வரையிலான கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்த 64,286 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். இதில் 35,474 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தொழில் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், பங்கேற்ற கல்லூரிகளில் 41 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நல்ல உள்கட்டமைப்பு, மேம்பட்ட கற்றல் வசதிகள் மற்றும் வலுவான தொழில் தொடர்புகள் ஆகிய வசதிகளை கொண்டுள்ளன.

அதனால் அவ்வாறான கல்லூரிகளில் மட்டும் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன, என்றார்.நடைபெற்ற சுற்றுகளில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

Wednesday, August 24, 2022

August 24, 2022

நாளை நடைபெறவிருந்த பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு.

"நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை (ஆக.25) நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஆக.25) முதல் தொடங்குவதாக இருந்தது. நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும். இந்த கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பொருத்திருக்கிற காரணத்தால், இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன.

முதலில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது சிபிஎஸ்இ முடிவுகள் மிகவும் தாமதமாக வந்த காரணத்தால், ஏற்கெனவே கொடுத்திருந்த கால அவகாசத்திற்கு பின் 5 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தோம்.

தற்போதும் நீட் தேர்வு முடிவுகள் முதலில் வரும் என்று நினைத்தோம். 21-ம் தேதி முடிவுகள் வரும் என்று கூறினார்கள், ஆனால் இன்னும் வெளியிடமால் காலம் தாழ்த்தப்படுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானால், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பலர் அங்கு சென்றுவிடுவார்கள், அதனால்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டு பல்வேறு இடங்கள் காலியாக இருந்தன" என்று அவர் கூறினார்.

முன்னதாக, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆக.20-ம் தேதியன்று நடந்தது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.25-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Total Pageviews

Search This Blog